PDA

View Full Version : கலைவேந்தன் கவிதைகள்!



கலைவேந்தன்
07-09-2007, 03:57 PM
அன்பர்களே!
இக்கவிச் சபையில் இந்தச் சிறுவனும் பங்கேற்க ஆசைகொண்டு என் கிறுக்கல்களை இங்கே தரவிரும்புகிறேன்!
முதலில் ஒரு பக்திப்பாடலுடன் தொடங்குகிறேன்!

மகிஷாசுர மர்த்தினியின் அயிகிரி னந்தினி கேட்டிருப்பிங்க தானே?
அந்த மெட்டில் நான் எழுதிய பாடல் ஒன்று!


அன்னையே வணங்குகிறேன்!


அழகிய மலரினில் அமர்ந்திட்ட தேவியே
அடியவன் வேண்டுதல் கேட்டிடு நீ!
தழலினில் விழுந்திட்ட புழுவினைப் போலிங்கு
தவித்திடும் இவன் குரல் கேட்டிடு நீ!
நிழலினைப் போலிங்கு தொடர்ந்திடும் விதியெனை
நிம்மதி குலைப்பதைப் பார்த்திடு நீ!
இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------(1)


கொடுமைகள் புரிந்திட்ட அசுரரைக் கொன்றன்று
கொற்றனைக் காத்திட்ட தேவியும் நீ!
அடுத்தடுத் தெனையிங்கு ஆட்டிடும் ஊழ்தனை
அற்றொழித் துடனென்னைக் காத்திடு நீ!
விடுதலை யொன்றின்றித் துடித்திடும் அடியவன்
வீழ்ந்துந்தன் பாதங்கள் பணிந்திடுவேன்!
குடுகுடு வென்றுடன் சடுதியில் காத்திட
குமரனின் தாயுன்னை வேண்டுகிறேன்!-----------------------(2)


ஐங்கரன் தாயுனை அனுதினம் போற்றியே
அடிதொழு துளமுடன் வணங்கிடுவேன்!
பைங்கனி சுவையொத்த உன்பெய ரோங்கிட
பாமரன் நானுனைப் போற்றிடுவேன்!
பைங்கிளி தோளினில் பாங்குடன் அமர்ந்திட
பார்ப்பவ ருளம்குளிர் விப்பவளே!
பைங்குழல் மகுடத்தைத் தாங்கிட ஜோதியாய்
பாரினில் வந்தெனைக் காத்திடுவாய்!----------------------------(3)

lolluvathiyar
07-09-2007, 04:00 PM
கவிதை அருமையாக இருந்தது கவியே
எனக்கும் கூட பக்தி வர வைத்து விட்டது
எங்கே நீண்ட நாளாக உங்களை கானவில்லை

நீங்கள் அடிகடி மன்றம் வரவேண்டும் என்று
அன்னையை நானும் வேண்டி கொள்கிறேன்

இளசு
08-09-2007, 06:29 AM
வாழ்த்துகள் நண்பரே

ஓர் அன்பான வேண்டுகோள்:

தலைப்பை கலைவேந்தன் கவிதைகள் என மாற்றுங்கள்..

அவையடக்கம் நன்றே..

ஆனாலும் பொருளடக்கத்துக்குத் தக்க பெயர் வைப்பது முக்கியம்..
உங்கள் படைப்புகள் தரமானவை..

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அல்லவா நண்பரே!

ஓவியன்
08-09-2007, 11:28 AM
கலைவேந்தன் மன்றம் நோக்கிய உங்கள் மீள் வருகை அசத்தலாக அமையட்டும்.........!

அண்ணா கூறிய படி கலைவேந்தன் கவிதைகள் என்று மாற்றலாமே......

அத்துடன் இந்த பகுதி கவிஞர்களுக்கான அறிமுகப் பகுதி இங்கே நீங்கள் உங்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்து விட்டு, இந்த மன்றிலே வெவ்வேறு பகுதிகளிலே பதித்த உங்கள் கவிதைகளின் தொடுப்பை(லிங்) கொடுத்து வைக்கலாம். அப்போது உங்களது எல்லாக் கவிதைகளையும் வாசிக்க விரும்புவோருக்கு இலகுவாக அமையும். உதாரணத்திற்கு இந்த பகுதியிலுள்ள ஆதவாவின் நவரசக் கவிஞன் ஆதவா என்ற திரியைப் பாருங்கள்.

மாறாக தொடர்சியாக உங்கள் கவிதைகளை தனித் தனித் தலைப்புக்களில் பதியாமல் ஒரே திரியில் பதிக்க விரும்பின் அதற்கும் நம் மன்றிலே இடமுண்டு, அதனை தொடர் கவிதைகள் பகுதியிலே ஒரு தனித் திரி தொடங்கி அங்கே தொடர்ந்து உங்கள் அழகுக் கவிதைகளைப் பதிக்கலாம்.

கலைவேந்தன்
09-09-2007, 09:02 AM
ஆலோசனைக்கு நன்றி இளசு மற்றும் ஓவியன் அவர்களே!
கடை பிடிக்கிறேன்!

அக்னி
11-09-2007, 10:30 PM
உயர் வீச்சுக்கொண்ட கவி வரிகளில்,
மென்மேலும் உயர்வுற்று,
என்றென்றும் வாழும் மகாகவி போல,
என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்.

மனோஜ்
08-11-2007, 01:34 PM
என்றும் மன்றத்தில் தங்களின் கவிவரிகள் நிலைந்து நிரைந்து
மென்மோலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 10:34 AM
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ


அன்னை வரம் கொடுத்து விட்டார். அதனால் தான் தமிழ் மன்றத்தினுள் நுழைந்து விட்டீர்கள்

thangasi
16-12-2007, 06:08 PM
அருமையான, வளமையான கவிதை 'கலைவேந்தன்' அவர்களே...

'ஐங்கரன் அன்னையே' என அன்னையைப் போற்றுவது புதுமையாக உள்ளது.

இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------

'பெற்றிட' என்பதைவிட 'தந்திட' என்பது பொறுத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

கலைவேந்தன்
15-06-2008, 10:35 AM
உயர் வீச்சுக்கொண்ட கவி வரிகளில்,
மென்மேலும் உயர்வுற்று,
என்றென்றும் வாழும் மகாகவி போல,
என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்.

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

கலைவேந்தன்
15-06-2008, 10:36 AM
என்றும் மன்றத்தில் தங்களின் கவிவரிகள் நிலைந்து நிரைந்து
மென்மோலும் சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா



இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ


அன்னை வரம் கொடுத்து விட்டார். அதனால் தான் தமிழ் மன்றத்தினுள் நுழைந்து விட்டீர்கள்

நன்றி நண்பர்களே!

கலைவேந்தன்
15-06-2008, 10:39 AM
அருமையான, வளமையான கவிதை 'கலைவேந்தன்' அவர்களே...

'ஐங்கரன் அன்னையே' என அன்னையைப் போற்றுவது புதுமையாக உள்ளது.

இழந்திட்ட நிம்மதி திரும்பவும் பெற்றிட
இன்முகம் கொண்டிங்கு காத்திடு நீ!-----------------------------

'பெற்றிட' என்பதைவிட 'தந்திட' என்பது பொறுத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே!

நிம்மதி கவிஞனுக்குதானே வேண்டும்! பெற்றிட என்பதுதானே சரி?

பராசக்தி இவ்வுலகுக்கெல்லாம் தாய் அல்லவா?

மீண்டும் நன்றி நண்பரே!

கலைவேந்தன்
15-06-2008, 11:00 AM
தன்னலமே இல்லையென்று
பறையடித்துச் சொல்லும்...!
என்னவன் தான் என்னவள் தான்
என்றுரக்கச் சொல்லும்...!

பொன்புகழ் தான் கோடி கோடி
நாடி வந்தபோதும்
உண்மை அன்பு என்றும் வெல்லும்
உண்மை என்று சொல்லும்..!

கோடி நன்மை ஓடிவந்து
வாசல் தட்டும் போதும்
நட்பும் அன்பும் போதுமென்று
நல்ல மனம் சொல்லும்..!

நானும் நீயும் என்று சொல்லும்
வார்த்தை மாறிப்போகும்
நாமும் நாமும் என்றுசொல்லி
நாளும் ஏங்கச் சொல்லும்!

அடியும் வலியும் பெற்ற போது
அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
அன்பு காட்டி தலைகலைத்து
ஆறுதலைக் கூறும் !

இடித்துரைத்து உன்னைக்கடிந்து
இன்பவழிகள் கூறும்
படிப்படியாய் உன்னைமாற்றி
பவித்திரமாய் மாற்றும்!

இளசு
17-06-2008, 07:16 AM
அன்பு... நிஜமாய் நிரந்தரமாய் அமைந்தால் போதும்..
அகிலம் ஆண்டதற்குச் சமம்..


அழகிய கவிதை கலைவேந்தன்..!

என் மனமார்ந்த பாராட்டுகள்!

கலைவேந்தன்
17-06-2008, 09:51 AM
பாராட்டுக்களுக்கு ஏற்ப நடக்க முயல்வேன் நண்பரே!

அனுராகவன்
17-06-2008, 02:30 PM
கலையின் கவிதைகள் அனைத்தும் அருமை..
தொடரட்டும் உங்கள் கலை பணி..

அறிஞர்
17-06-2008, 02:33 PM
அடியும் வலியும் பெற்ற போது
அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
அன்பு காட்டி தலைகலைத்து
ஆறுதலைக் கூறும் !

இடித்துரைத்து உன்னைக்கடிந்து
இன்பவழிகள் கூறும்
படிப்படியாய் உன்னைமாற்றி
பவித்திரமாய் மாற்றும்!
அன்புக்கு நிகர் என்ன உண்டு...
அருமை...

கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு அதிகாரமே இது பற்றி உண்டு.

கலைவேந்தன்
17-06-2008, 02:49 PM
கலையின் கவிதைகள் அனைத்தும் அருமை..
தொடரட்டும் உங்கள் கலை பணி..


உங்க ஆசிதான் அனு! நீங்க எல்லாம் படிச்சு வாழ்த்துங்க அனு!


அன்புக்கு நிகர் என்ன உண்டு...
அருமை...

கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு அதிகாரமே இது பற்றி உண்டு.

நன்றி நண்பரே! நானும் கேட்டுள்ளேன் அறிஞரே! யாராவது அதை இங்கே தாருங்களேன்!

சூரியன்
17-06-2008, 03:27 PM
என்றும் உங்கள் கவிதை இம்மன்றத்தை வலம் வர வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
18-06-2008, 08:33 AM
நன்றி சூரியரே!

kavitha
18-06-2008, 08:51 AM
உங்களது இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. புதிதாக எழுதப்பட்ட கவிதைகளை, "புதிய கவிதைகள்" பக்கத்தில் இட்டு அதன் தொடர்பை மட்டும் இங்கே பதித்தால் தொகுப்பாக இருக்கும்; படிப்பவர்களுக்கும் வசதியாக இருக்குமே!
விதிமுறைகளுக்கு: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8996