ப்ரியன்
05-09-2007, 12:14 PM
விசுக்கென எக்கிப்
பறக்கிறதொரு பறவை;
கிளை அதிர்வில்
உதிரும் இலைகளை
ஆதரவாக ஏந்திக்கொள்கிறது பூமி!
- ப்ரியன்.
ஆதாரம் அகன்றோருக்கு
ஆதரவாய் இன்னொன்று
அமைவதாலேயே கொஞ்சம்
அமைதி நம் உலகில்!
வாழ்த்துகள் ப்ரியன்!
ஓவியன்
05-09-2007, 07:20 PM
பிரதிபலன் எதிர்பாரா ஆரத் தழுவலும், ஆதரவும் காலம் தரும் பரிசுகள் அதனை தக்கவாறு பயன்படுத்தி அந்த ஆதரவளித்த ஆதாரத் தொடர்புக்கும் பெருமை சேர்க்கவேண்டியது நம் பொறுப்பு.
அக்னி
05-09-2007, 11:17 PM
பறவை தன்னைத்
தாங்கிய கிளையை,
உதைத்து,
இலையைத் தள்ளியபோதும்,
ஏந்திய பூமி...
அருமையான கவிதை...
ஆனால்,
பறவையாய், கிளையாய், இலையாய், பூமியாய்...
சகல நிலைகளிலும் பொருந்துகின்றான் மனிதன்...
பாராட்டுக்கள் ப்ரியன்...