சிவா.ஜி
02-09-2007, 02:06 PM
அப்போதுதான் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.மனைவியுடன் மும்பையில் வாசம்.சில பல பொருளாதாரப் பிரச்சனைகளால் வாங்கும் சம்பளம் போதவில்லை.அதனால் ஏதாவது துணைத் தொழில் செய்து கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து..நன்பர்கள் மூலமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.நான் ஏற்கனவே நாடகங்களில்(வெறும் டீ வடைக்கு மட்டும்தான்)நடித்துக்கொண்டிருந்ததால்,அதே நாடகத்தில் எங்களுடன் நடித்துக்கொண்டிருந்த சுமதி ஆண்ட்டி ஒருநாள்
"சிவா FILM DIVISION OF INDIA-ல ஒரு டாக்குமெண்ட்ரி படம் எடுக்கப்போறாங்களாம்,அதுல உனக்கும் எனக்கும் ஒரு ரோல் கெடைச்சிருக்கு நாளைக்கு போய் அந்த இயக்குநரைப் பார்த்துவிட்டு வரலாம்" என்று சொன்னார்.நடிப்பதில் எந்த பிரச்சனையுமில்லை...மத்திய அரசின் நிறுவனமென்பதால் பணம் குறைவாகக் கிடைக்குமே என்ற சின்ன தயக்கத்தில் அவரிடமே கேட்டேன்."அதெல்லாம் நாளைக்கு டைரக்டர் சொல்வார்,பேசாம என் கூட வா' என்று சொல்லிவிட்டு"நாளைக்கு காலையில ரெடியா இரு"என்று கொஞ்சம் அதட்டலாகவே(அவர் எப்போதுமே அப்படித்தான்..Dominating character..)சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
என் மனைவி என்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு ஒரு பார்வை பார்த்தாளே....இன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு பார்வையை இன்னொரு முறை பாக்கல.அத விடுங்க....ராத்திரியெல்லாம் பாதி தூக்கத்துல புரண்டு புரண்டு படுத்துட்டு,கனவுல தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி கலர் கலரா ஜிகினா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு அவுட் ஆஃப் ஃபோகஸ்ல தெரிஞ்ச கதாநாயகியோட டூயட் பாடி...எழுந்து,ஒரு வழியா 9 மணிக்கு சுமதி ஆண்ட்டிகூட மலபார் ஹில்ஸ்ல இருக்கற அந்த ஸ்டுடியோ மற்றும் அலுவலகம் இணைந்த கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.இயக்குநர் சின்ன பையனாக இருந்தார். சென்னை Film Institute−ல் படிச்சிட்டு அப்பதான் புதுசா வேலையில சேர்ந்திருந்தார்.நல்ல தமிழ்நாட்டுக்கலர்ல இருந்தார்,தென்தமிழ்நாட்டுப் பக்கத்து பேருன்னு நினைகிறேன்.இப்ப சரியா நினைவில்லை.எங்களோட பின்ன*னியை விசாரித்து விட்டு, ஏதாவது வசனம் பேசுங்கள் என்றதும்,எங்கள் நாடக வசனத்தையே இருவரும் கொஞ்சம் அதிகமாகவே பில்டப் குடுத்து பேசினோம்.
அவரும் திருப்தியாகி "ஓகே இன்னும் ரெண்டு நாளைக்கப்புறம் ஷூட்டிங்,ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க.எல்லோரும் சேர்ந்து ஸ்பாட்டுக்கு போயிடலாம்" என்று சொன்னதும் சுமதி ஆண்ட்டி முகம் அப்படியே சூரியகாந்தி மாதிரி மலர்ந்துவிட்டது.உன் மூஞ்சி எப்படி இருந்ததுன்னு கேக்கறீங்களா..?என் கவலை எனக்கு,மெதுவாக ஆண்ட்டியின் முழங்கையை சொறிந்தேன்.இரண்டு முறை தட்டி விட்டும்..மனம் தளரா விக்ரமாதித்தன் போல மீண்டும் சொறிந்தேன்.பட்டென்று திரும்பி என்ன என்பதுபோல் கண்ணாலேயே கோபமாகக் கேட்டார்."எவ்ளோ பணம் தருவாங்கன்னு இன்னும் சொல்லவேயில்லையே" என்று கிசு கிசுப்பாகக் கேட்டதும்..என் முகத்தைப் பார்த்து அவருக்கே பரிதாமாக இருந்திருக்கும் போல...."இரு அவங்களே சொல்லுவாங்க"என்று அமைதியாக சொன்னதும், நான் அடுத்து அந்த இயக்குநர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளையெல்லாம் வெகு உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தேன்.ஒரு வழியாக அவர் திருவாய் மலர்ந்தருளினார். ஒருநாள்தான் ஷூட்டிங் ஆளுக்கு 1000 ரூபாய் என்று.
கேட்டவுடன் உள்ளுக்குள் உற்ச்சாகம் கொப்பளித்தது.மாதம் முழுவதும் வேலை செய்தாலும் அரசாங்கம் எனக்கு சம்பளமாகத்தருவது 4500 ரூபாய்தான்.இதில் ஒரு நாளைக்கே ஆயிரமா...அந்த கணமே கற்பனையில் என் புது மனைவியைக்கூட்டிகொண்டு மார்கெட்டுக்குப் போய்விட்டேன்.
அடுத்து அந்த இயக்குநர் எங்கள் இருவரின் கேரக்டர் பற்றி சொன்னதும்,வசனத் தாள்களை ஆண்ட்டியிடம் கொடுத்து படித்துவிட்டு வரும்படி சொன்னதும்...எல்லாமே ஆண்ட்டி வீட்டுக்கு வந்து விளக்கமாக சொன்ன பிறகுதான் மூளையில் உறைத்தது.
அந்த சுபயோக சுபதினமும் வந்தது.பணம் கண்டிப்பாக கிடைக்குமென்ற நம்பிக்கை வந்த பிறகு,இப்போது என்னுடன் கதாநாயகியாக நடிக்கப்போகும் அந்த நடிகை எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்....அட*டா இது வரைக்கும் டாக்குமெண்ட்ரி எதைப் பற்றி என்று சொல்லவில்லையே....டயரியா வந்த குழந்தைகளுக்கு,கிராமத்தில் மந்திரித்து விடுவது மூடப்பழக்கம்,அதற்கு ORS என்ற Electrolyte கொடுக்கப்பட வேண்டுமென்று அறிவுரை சொல்லி,எப்படி என்பதையும் விளக்கும் படம்தான் அது.அதில் மொத்தமே 5 கேரக்டர்கள்தான்.ஒரு கணவன் மனைவி,குழந்தை,கணவனின் தாயார் மற்றும் ஒரு சமூக சேவகர்.இதில் நான்தான் கணவன்,சுமதி ஆண்ட்டி என்னுடைய தாயார்.என் மனைவிதான் யாரென்று தெரியவில்லை.அவர் பெயர் சுஜாதா என்பது மட்டும்தான் தெரிந்தது.அவருக்காக சிறிது நேரம் அங்கே காத்திருந்துவிட்டு..அவர் வந்தால் இந்த முகவரிக்கு அவரை அனுப்பி விடுமாறு அங்கிருந்த ஒரு கடைநிலை ஊழியரிடம் முகவரி எழுதிய துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டு நாங்கள் அனைவரும் ஸ்பாட்டுக்கு வந்து விட்டோம்.
ஸ்பாட் என்பது ஒரு அபார்ட்மெண்டின் ஒரு அறைதான் அதைத்தான் கிராமியச்சாயலில் படுதாவெல்லாம் வைத்து அமைத்திருந்தார்கள் கேமரா,லைட்டிங்,சவுண்ட் எல்லாம் ரெடி...கதாநாயகி மட்டும் இன்னும் வந்த பாடில்லை.இயக்குநரோ பயங்கர டென்ஷனில்..நானும்,ஆண்ட்டியும் மேக்கப் போட்டுக்கொண்டு,ரோஸ்பவுடர் வழிந்து வாய்க்குள் போய்விடாமலிருக்க கஷ்டப்பட்டு வாயை அஷ்டகோணலாக்கிக் கொண்டு வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஒரு வழியாய் அதே வழியில் அந்த நாயகியும் வந்தார்.அத்தனை பேர் முகத்திலும் ஒரே மாதிரி உணர்ச்சி...அதாவது அதிர்ச்சி,,,,காரணம் நாயகி சுஜாதாவுக்கு வது 45.....எனக்கோ 25...ரோஸ் பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு ராமராஜன் கெட்டப்புல சிலுக்கு சட்டையோட.....எல்லாம் ரெடி இனி என்ன செய்வது என்று மேக்கப்மேனைக் கூப்பிட்டு,"அண்ணே அந்தம்மாவ எப்பிடியாவது ஒரு 20 வயசு குறைத்துக் காட்டிடுங்க' என்று இயக்குநர் சொன்னதும்...மேக்கப்மேனும் தனக்குத்தெரிந்த எல்லா வித்தைகளையும் முயற்சி செய்து பார்த்து விட்டு கண்ணீர் விடாத குறையாக வந்து தன் இயலாமையை இயக்குநரிடம் சொன்னார்.கொஞ்சநேரம் கண்மூடி யோசித்துவிட்டு என்னை ஒரு தாயின் பரிவோடு பார்த்த அந்த இயக்குநர்"அண்ணே வேற வழியில்ல இவர அந்தம்மா ரேஞ்சுக்கு மாத்திடுங்க..கல்யாணமாகி லேட்டா குழந்தை பொறந்ததுன்னு டயலாக்குல கொஞ்சம் மாத்திடலாம்,என்ன பண்றது கைக்குழந்தைய மாத்த முடியுமா" என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து "ஸாரி சிவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க"என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவ்வளவு நேரமாக பாதுகாத்து வைத்திருந்த ரோஸ்பவுடரையெல்லாம் வழிச்சு கொட்டிட்டு..சுருக்கம் தெரியற மாதிரி மூன்று நான்கு கோடுகளை என் முகத்தில் போட்டு,ஒரு கை வைத்த பனியனை மாட்டிவிட்டு,நாலு முழம் வேட்டியை கட்டிவிட்டு......25 -ஐ 45 ஆக்கிவிட்டு...என்னை விட்டுட்டு போய்ட்டார் மேக்கப்-மேன்........
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டாக்குமெண்ட்ரியை நானும் என் மனைவியும் மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை.ஏனென்றால் படம் எடுத்து முடிந்ததும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிட மும்பையிலிருந்து கொண்டுபோகப்பட்டுவிட்டது.என் மாமியார் ஏதோ ஒரு திரைப்படம் பார்க்கப்போய்,மெயின் படத்துக்கு முன் இந்தப்படம் போடப்பட,அதில் என் முகமும் குளோஸப்பில் தெரிய..பக்கத்து சீட்டுக்காரியை சந்தோஷத்தில் முதுகில் அறைந்து...அய்யோ இது என் மருமகன் என்று கத்தி,அதற்காகவே காசு கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட்டிகிட்டுப் போய் காண்பித்தது எல்லாம் இந்த சம்பவத்தின் பின் நடந்தவை.
"சிவா FILM DIVISION OF INDIA-ல ஒரு டாக்குமெண்ட்ரி படம் எடுக்கப்போறாங்களாம்,அதுல உனக்கும் எனக்கும் ஒரு ரோல் கெடைச்சிருக்கு நாளைக்கு போய் அந்த இயக்குநரைப் பார்த்துவிட்டு வரலாம்" என்று சொன்னார்.நடிப்பதில் எந்த பிரச்சனையுமில்லை...மத்திய அரசின் நிறுவனமென்பதால் பணம் குறைவாகக் கிடைக்குமே என்ற சின்ன தயக்கத்தில் அவரிடமே கேட்டேன்."அதெல்லாம் நாளைக்கு டைரக்டர் சொல்வார்,பேசாம என் கூட வா' என்று சொல்லிவிட்டு"நாளைக்கு காலையில ரெடியா இரு"என்று கொஞ்சம் அதட்டலாகவே(அவர் எப்போதுமே அப்படித்தான்..Dominating character..)சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
என் மனைவி என்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு ஒரு பார்வை பார்த்தாளே....இன்னைக்கு வரைக்கும் அப்படி ஒரு பார்வையை இன்னொரு முறை பாக்கல.அத விடுங்க....ராத்திரியெல்லாம் பாதி தூக்கத்துல புரண்டு புரண்டு படுத்துட்டு,கனவுல தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி கலர் கலரா ஜிகினா ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு அவுட் ஆஃப் ஃபோகஸ்ல தெரிஞ்ச கதாநாயகியோட டூயட் பாடி...எழுந்து,ஒரு வழியா 9 மணிக்கு சுமதி ஆண்ட்டிகூட மலபார் ஹில்ஸ்ல இருக்கற அந்த ஸ்டுடியோ மற்றும் அலுவலகம் இணைந்த கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.இயக்குநர் சின்ன பையனாக இருந்தார். சென்னை Film Institute−ல் படிச்சிட்டு அப்பதான் புதுசா வேலையில சேர்ந்திருந்தார்.நல்ல தமிழ்நாட்டுக்கலர்ல இருந்தார்,தென்தமிழ்நாட்டுப் பக்கத்து பேருன்னு நினைகிறேன்.இப்ப சரியா நினைவில்லை.எங்களோட பின்ன*னியை விசாரித்து விட்டு, ஏதாவது வசனம் பேசுங்கள் என்றதும்,எங்கள் நாடக வசனத்தையே இருவரும் கொஞ்சம் அதிகமாகவே பில்டப் குடுத்து பேசினோம்.
அவரும் திருப்தியாகி "ஓகே இன்னும் ரெண்டு நாளைக்கப்புறம் ஷூட்டிங்,ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க.எல்லோரும் சேர்ந்து ஸ்பாட்டுக்கு போயிடலாம்" என்று சொன்னதும் சுமதி ஆண்ட்டி முகம் அப்படியே சூரியகாந்தி மாதிரி மலர்ந்துவிட்டது.உன் மூஞ்சி எப்படி இருந்ததுன்னு கேக்கறீங்களா..?என் கவலை எனக்கு,மெதுவாக ஆண்ட்டியின் முழங்கையை சொறிந்தேன்.இரண்டு முறை தட்டி விட்டும்..மனம் தளரா விக்ரமாதித்தன் போல மீண்டும் சொறிந்தேன்.பட்டென்று திரும்பி என்ன என்பதுபோல் கண்ணாலேயே கோபமாகக் கேட்டார்."எவ்ளோ பணம் தருவாங்கன்னு இன்னும் சொல்லவேயில்லையே" என்று கிசு கிசுப்பாகக் கேட்டதும்..என் முகத்தைப் பார்த்து அவருக்கே பரிதாமாக இருந்திருக்கும் போல...."இரு அவங்களே சொல்லுவாங்க"என்று அமைதியாக சொன்னதும், நான் அடுத்து அந்த இயக்குநர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளையெல்லாம் வெகு உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தேன்.ஒரு வழியாக அவர் திருவாய் மலர்ந்தருளினார். ஒருநாள்தான் ஷூட்டிங் ஆளுக்கு 1000 ரூபாய் என்று.
கேட்டவுடன் உள்ளுக்குள் உற்ச்சாகம் கொப்பளித்தது.மாதம் முழுவதும் வேலை செய்தாலும் அரசாங்கம் எனக்கு சம்பளமாகத்தருவது 4500 ரூபாய்தான்.இதில் ஒரு நாளைக்கே ஆயிரமா...அந்த கணமே கற்பனையில் என் புது மனைவியைக்கூட்டிகொண்டு மார்கெட்டுக்குப் போய்விட்டேன்.
அடுத்து அந்த இயக்குநர் எங்கள் இருவரின் கேரக்டர் பற்றி சொன்னதும்,வசனத் தாள்களை ஆண்ட்டியிடம் கொடுத்து படித்துவிட்டு வரும்படி சொன்னதும்...எல்லாமே ஆண்ட்டி வீட்டுக்கு வந்து விளக்கமாக சொன்ன பிறகுதான் மூளையில் உறைத்தது.
அந்த சுபயோக சுபதினமும் வந்தது.பணம் கண்டிப்பாக கிடைக்குமென்ற நம்பிக்கை வந்த பிறகு,இப்போது என்னுடன் கதாநாயகியாக நடிக்கப்போகும் அந்த நடிகை எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்....அட*டா இது வரைக்கும் டாக்குமெண்ட்ரி எதைப் பற்றி என்று சொல்லவில்லையே....டயரியா வந்த குழந்தைகளுக்கு,கிராமத்தில் மந்திரித்து விடுவது மூடப்பழக்கம்,அதற்கு ORS என்ற Electrolyte கொடுக்கப்பட வேண்டுமென்று அறிவுரை சொல்லி,எப்படி என்பதையும் விளக்கும் படம்தான் அது.அதில் மொத்தமே 5 கேரக்டர்கள்தான்.ஒரு கணவன் மனைவி,குழந்தை,கணவனின் தாயார் மற்றும் ஒரு சமூக சேவகர்.இதில் நான்தான் கணவன்,சுமதி ஆண்ட்டி என்னுடைய தாயார்.என் மனைவிதான் யாரென்று தெரியவில்லை.அவர் பெயர் சுஜாதா என்பது மட்டும்தான் தெரிந்தது.அவருக்காக சிறிது நேரம் அங்கே காத்திருந்துவிட்டு..அவர் வந்தால் இந்த முகவரிக்கு அவரை அனுப்பி விடுமாறு அங்கிருந்த ஒரு கடைநிலை ஊழியரிடம் முகவரி எழுதிய துண்டுச்சீட்டைக் கொடுத்துவிட்டு நாங்கள் அனைவரும் ஸ்பாட்டுக்கு வந்து விட்டோம்.
ஸ்பாட் என்பது ஒரு அபார்ட்மெண்டின் ஒரு அறைதான் அதைத்தான் கிராமியச்சாயலில் படுதாவெல்லாம் வைத்து அமைத்திருந்தார்கள் கேமரா,லைட்டிங்,சவுண்ட் எல்லாம் ரெடி...கதாநாயகி மட்டும் இன்னும் வந்த பாடில்லை.இயக்குநரோ பயங்கர டென்ஷனில்..நானும்,ஆண்ட்டியும் மேக்கப் போட்டுக்கொண்டு,ரோஸ்பவுடர் வழிந்து வாய்க்குள் போய்விடாமலிருக்க கஷ்டப்பட்டு வாயை அஷ்டகோணலாக்கிக் கொண்டு வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஒரு வழியாய் அதே வழியில் அந்த நாயகியும் வந்தார்.அத்தனை பேர் முகத்திலும் ஒரே மாதிரி உணர்ச்சி...அதாவது அதிர்ச்சி,,,,காரணம் நாயகி சுஜாதாவுக்கு வது 45.....எனக்கோ 25...ரோஸ் பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு ராமராஜன் கெட்டப்புல சிலுக்கு சட்டையோட.....எல்லாம் ரெடி இனி என்ன செய்வது என்று மேக்கப்மேனைக் கூப்பிட்டு,"அண்ணே அந்தம்மாவ எப்பிடியாவது ஒரு 20 வயசு குறைத்துக் காட்டிடுங்க' என்று இயக்குநர் சொன்னதும்...மேக்கப்மேனும் தனக்குத்தெரிந்த எல்லா வித்தைகளையும் முயற்சி செய்து பார்த்து விட்டு கண்ணீர் விடாத குறையாக வந்து தன் இயலாமையை இயக்குநரிடம் சொன்னார்.கொஞ்சநேரம் கண்மூடி யோசித்துவிட்டு என்னை ஒரு தாயின் பரிவோடு பார்த்த அந்த இயக்குநர்"அண்ணே வேற வழியில்ல இவர அந்தம்மா ரேஞ்சுக்கு மாத்திடுங்க..கல்யாணமாகி லேட்டா குழந்தை பொறந்ததுன்னு டயலாக்குல கொஞ்சம் மாத்திடலாம்,என்ன பண்றது கைக்குழந்தைய மாத்த முடியுமா" என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து "ஸாரி சிவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க"என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டார்.
அவ்வளவு நேரமாக பாதுகாத்து வைத்திருந்த ரோஸ்பவுடரையெல்லாம் வழிச்சு கொட்டிட்டு..சுருக்கம் தெரியற மாதிரி மூன்று நான்கு கோடுகளை என் முகத்தில் போட்டு,ஒரு கை வைத்த பனியனை மாட்டிவிட்டு,நாலு முழம் வேட்டியை கட்டிவிட்டு......25 -ஐ 45 ஆக்கிவிட்டு...என்னை விட்டுட்டு போய்ட்டார் மேக்கப்-மேன்........
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டாக்குமெண்ட்ரியை நானும் என் மனைவியும் மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை.ஏனென்றால் படம் எடுத்து முடிந்ததும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிட மும்பையிலிருந்து கொண்டுபோகப்பட்டுவிட்டது.என் மாமியார் ஏதோ ஒரு திரைப்படம் பார்க்கப்போய்,மெயின் படத்துக்கு முன் இந்தப்படம் போடப்பட,அதில் என் முகமும் குளோஸப்பில் தெரிய..பக்கத்து சீட்டுக்காரியை சந்தோஷத்தில் முதுகில் அறைந்து...அய்யோ இது என் மருமகன் என்று கத்தி,அதற்காகவே காசு கொடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட்டிகிட்டுப் போய் காண்பித்தது எல்லாம் இந்த சம்பவத்தின் பின் நடந்தவை.