தங்கவேல்
29-08-2007, 06:10 AM
மனிதனுக்கு என்றும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்றால் இல்லை எனலாம். மனிதனுக்கு பல்வேறு மனவழுத்தங்கள் வர காரணம் நம் மூளையில் சுரக்கும் சிரோடோன் என்ற திரவம் தான். இந்த திரவம் உருவாக காரணமாய் இருப்பது டிரக் − 1 என்ற ஒரு ஜீன். ஆராய்ச்சியாளர்கள் ஒரு எலிக்கு இந்த ஜீனை எடுத்து விட்டு , பல்வேறு மனவழுத்தம் தரும் சோதனைகளை செய்த போது அந்த எலி மனவழுத்தங்களுக்கு ஆட்படாமல் மகிழ்ச்சியாக இருந்ததாம். அதனால் மனவழுத்தங்களுக்கு எளிதில் மருந்துகள் வரலாம். மனிதன் மகிழ்ச்சியாய் இருக்க மாத்திரை சாப்பிட்டால் போதும் என்ற நிலை விரைவில் வரலாம்.