PDA

View Full Version : சொல்லிவிட்டுப் போ அன்பே



இனியவள்
26-08-2007, 08:27 PM
காதலாக வந்த கவிதை
காற்றாய் கலந்தது..

என் உயிரோடு இருக்கும் ஓசை
உன் பெயரை
இசையமைக்கின்றது....

அன்பே
நீ என் காதலனாக
வரும் ஆசையதுவே
என் சுவாசமாய் மாறியது...

என் இதயத்திற்கு சொல்
என்னுயிர் உன்னோடு தான்
இருக்கிறதென்று...

காத்திருந்த காதல்
கனவாகி விடுமா?

நினைத்துப் பார்க்கின்ற
நினைவுகள்
சுகமாகி விடுமா?

இதுவரை
எனக்கும் உனக்கும் சொல்லாத
அந்த மெளன உணர்வுகளை
இப்பொழுதாவது
சொல்லிவிட்டுப் போ....!

அமரன்
27-08-2007, 08:25 AM
நாடித்துடிப்புகள்
அவன்/ள் பெயர் உச்சரிக்க
வீசும் காற்றெல்லாம்
அவன்/ள் வாசம் வைச்சிருக்க
மேல்கொண்ட ஆசை
அவன்/அவள் சுவாசத்தை நிறைச்சிருக்க
காத்திருந்த காதல்
காற்றில் பறக்காமலிருக்க
காத்திருந்த காலங்களை
"கவிதை"யில் சேமித்துவிடு..

-அமரன்

Narathar
27-08-2007, 09:04 AM
அந்த மெளன உணர்வுகளுக்கு உங்கள் உருக்கமான கவி வரிகள் உயிர் கொடுக்கட்டும்

அக்னி
27-08-2007, 11:25 AM
உடல் கூட்டின்,
இயங்குதசைகளின்
துடிப்புக்கள்...
உனக்கு மௌனம் என்றாலும்,
எனக்கு தினம் விழும்
இடிகளே...
உன் மௌனத்தின் சத்தம்...
எனக்கு, மரண மேளம்...

பாராட்டுக்கள் இனியவளே...
காதல் உணர்வுகளில் மீண்டும் ஒரு தேடல் கவிதை, நிறைவு...