View Full Version : வாழ்வின் முகவரி
இனியவள்
26-08-2007, 06:21 PM
http://img410.imageshack.us/img410/6809/iniyavalxm4.jpg
என்னை நினைக்க
மறந்தாலும்
மறக்க நினைக்காதே
அன்பே
ஏன் என்றால் என்
வாழ்வின் முகவரி
நீயல்லவா...!
அமரன்
26-08-2007, 06:52 PM
முகவரி
தொலைக்க நினைக்காத
காகிதமாய் அவன்...!
வரிந்த முகம்
மறக்க நினைக்கும்
காதலியாய் அவள்..!
உடலுடன் உயிராடும்
சதிராட்டம் இங்கே
கவிதையாய்.
பாராட்டுக்கள் இனியவள்.
இனியவள்
26-08-2007, 08:47 PM
நன்றி அமர்
ஓவியா
26-08-2007, 11:19 PM
காதலா, அது சுத்த பொய் பித்தலாட்டம் (நன்றி:யாரோ)
நீங்க நடத்துங்க, சபாஷ்.
அழகியா, அழமான அர்த்தம் பதிந்த கவிதை. நன்று.
கவிதை அருமை இனியவள். பாராட்டுக்கள்.
ஒருவன் ஒருவளை
நினைத்துவிட்டால்
அவனால் அவளை
மறக்கமுடியாது
அவள் இன்னொருத்தனன்
திருமதியான பின்பும்!!!!
ஆகையால்
மறக்கமுடியுமா என்றால்
நிச்சயம் முடியாது
முடியவே முடியாது
நினைவில் என்றும்
நிற்கும் ஒரே விஷயம்
காதல்!!!!
அக்னி
26-08-2007, 11:40 PM
முகவரியை தொலைக்காமலே,
முகத்தில் வரி விழும்வரை,
தேடிக்கொண்டே நான்...
நீ தொலைதூரத்திற்கு,
முகவரியை மாற்றிக்கொண்டதால்...
பாராட்டுக்கள்... இனியவள்...
மற்றும் அமரன், ஆரென் அவர்களுக்கும் சிறப்புக் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்...
அக்கா... என்ன இப்பிடி குண்டத் தூக்கி போடறேள்...
யாரந்த யாரோ..?
ஓவியா
26-08-2007, 11:50 PM
அக்னி, உங்க பதிவ படிச்சதும் எனக்கு பென்சு ஞாபகம்தான் வந்தது, நீங்க இப்படி 'குண்ட துக்கி போடுறேளே என்று சொன்னதை நண்பர் பென்சு பார்த்திருந்தால், அவரின் பதிவு 100% இதுவாகதான் இருக்கும்
ஏன்? என்ன ஆச்சு ஓவி?
ஏன் ஓவியா விழுந்தா? எப்படி விழுந்தா? யார்பா அவள* தூக்கிப் போட்டது? ஹிஹி
அக்னி
27-08-2007, 12:19 AM
அக்னி, உங்க பதிவ படிச்சதும் எனக்கு பென்சு ஞாபகம்தான் வந்தது, நீங்க இப்படி 'குண்ட துக்கி போடுறேளே என்று சொன்னதை நண்பர் பென்சு பார்த்திருந்தால், அவரின் பதிவு 100% இதுவாகதான் இருக்கும்
ஏன்? என்ன ஆச்சு ஓவி?
ஏன் ஓவியா விழுந்தா? எப்படி விழுந்தா? யார்பா அவள* தூக்கிப் போட்டது? ஹிஹி
அப்போ குண்டர் சட்டத்தில உங்களப் பிடிச்சுப் போட ரைட்ஸ் இருக்குத் என்று சொல்லுறீங்களோ... நம்புறன்...
நம்பாமல் சந்தேகத்துடன்...
ஓவியா
27-08-2007, 12:21 AM
அட இந்த குண்டர் என்பது ஒரு கட்டுக்கதை. நான் ஜோதிகா போல் நல்ல ஒல்லிபீச்சான். ஹி ஹி ஹி.
அக்னி
27-08-2007, 12:25 AM
அட இந்த குண்டர் என்பது ஒரு கட்டுக்கதை. நான் ஜோதிகா போல் நல்ல ஒல்லிபீச்சான். ஹி ஹி ஹி.
முதல் ஜோதிகாவா... நடு ஜோதிகாவா... இப்போதைய ஜோதிகாவா...
ஓ ஜோதிகாதான் உங்களுக்கு மெல்லிசானவங்களா...
அப்பச்சரி... இருக்கட்டும் இருக்கட்டும்...
சுகந்தப்ரீதன்
27-08-2007, 04:13 AM
என்னை நினைக்க
மறந்தாலும்
மறக்க நினைக்காதே
அன்பே
ஏன் என்றால் என்
வாழ்வின் முகவரி
நீயல்லவா...!
எங்கே மறப்பது......ஒருவரை நேசித்துவிட்டால் முகத்தில் வரிகள் தோன்றிய பிறகும் முகவரியை?
வாழ்த்துக்கள் இனியா..!
ஓவியன்
30-08-2007, 06:14 PM
முகவரியைத்
தொலைத்துவிட்டு
தேடக் கூட
இயலாமல் நான்...
முகவரி
இருந்தால் தானே
தேடிப் பிடிக்கலாம்....
பாராட்டுக்கள் இனியவள், அமரன், ஆரென் அண்ணா, அக்னி
ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:32 AM
முகவரி முகவரியைத்தானே காட்டும்.