மீனாகுமார்
24-08-2007, 02:57 PM
அமைதியாய் செழித்து இன்பமுற் றிருந்த
இவ்வுலகில் ஓர்நாள்...
மனிதன் வந்தான்...
சுதந்திரமாய் வளையநெளிய ஓடிய ஆற்றினை
சுவர்களை எழுப்பி தடுத்து நிறுத்தினான்.
சாக்கடையை ஆற்றிலும் கடலிலும் கலந்தான்.
தூய காற்றிலே நச்சுப்புகையை ஊடுறுவினான்.
மரங்களை வெட்டிச் சாய்த்தான் கொடூரமாக.
காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினான்.
சுதந்திரமாய் இன்பமாய் வாழ்ந்த எல்லா
விலங்குகளையும் சிறையில் இட்டு மகிழ்ந்தான்.
தப்பிக்க முயன்ற விலங்குகள் மரணவோலமிட்டன.
அவையெலாம் காதுகளுக்குள் இன்பத்தேனாய் பாய்ந்தன.
தத்தம் விருப்பங்களை எவரிடம் கூறும் இவ்விலங்குகள்.
இவையும் படைத்தானே கருணையற்ற இறைவன்.
பறவைகளின் இனிய கூட்டைக் கலைத்தான்.
வானத்தில் சுற்றித்திரிந்த பறவைகளைச் சுட்டான்.
அவைகளின் இருப்பிடங்களில் புகுந்து சூறையாடினான்.
முட்டைகளை சுட்டுத் தின்று மகிழ்ந்தான்.
கடலுக்கடியில் ஊர்ந்த உயிரையாயினும் நிம்மதியாய்
சுதந்திரமாய் அலைய விட்டானோ.. மனிதன்
அங்கும் சென்று அவைகளை துரத்தி
பிடித்து இழுத்து வந்து மகிந்தான்.
கூர்மையான ஊசிகளை மீன்களின் மென்மையான
நாக்கினில் அகோரமாக குத்தி இழுத்தான்.
நாய்களை ஏவிவிட்டு வேட்டையும் ஆடினான்.
இவையெலாம் இவனுக்கு மகிழ்வுறும் பொழுதுபோக்காம்.
பனிக்கட்டி படிந்திருந்த பூமியெல்லாம் புகுந்து
வீடுகளைக் கட்டி சூடேற்றிகளைச் சுழலவிட்டான்.
அறிவியல் எனும்பெயரில் குரங்குகளையும் எலிகளையும்
மருந்து கொடுத்து சித்ரவதை செய்தான்.
தன்னுடல் பெருக்க பல்வேறு விலங்குகளை
பண்ணை பண்ணையாய் காவலிட்டு வளர்த்தான்.
விண்வெளி அமைதியாய் இருப்பது பிடிக்குமா.
அங்கும் கிளம்பிவிட்டான் அதனைக் கெடுக்க.
மனிதனே.. நீ பொருட்களை வைத்து உலகை
ஆள்வதைக் கற்றுக் கொண்ட மாத்திரமே
நாங்கள் எல்லாம் உன் சிறையினுள்ளே..
உன் பார்வைக்கு மட்டும் மிருகக்காட்சிசாலைக்குள்ளே..
எங்களுக்கும் இதயத்தை கொடுத்தானே இறைவன்
அதே இதயத்தை உங்களுக்கும் கொடுத்தானோ
ஏனோ எங்களுணர்வுகள் உங்களுக்குப் புரிவதில்லை.
புரிந்தவரும் இதுவரை ஏதும் செய்ததில்லை.
நல்லவேளை.. நிலவிலும் வேற்று கிரகங்களிலும்
எங்களினம் உன்கண்ணில் இன்னும் படவில்லை.
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதனென்றார்.
எங்களுலகில் ஆறறிவு பெற்றவனே கீழ்த்தரமானவன்.
வேறு மனிதன் துணையில்லாததனால் சில
நாய்களுக்கு மட்டும் நல்வாழ்வு தந்தாய்
மனிதன் கால்பட்டஇடம் சிறுபுல் முளைக்காதென்பர்.
எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை - என்பது குறள்
இவ்வுலகில் ஓர்நாள்...
மனிதன் வந்தான்...
சுதந்திரமாய் வளையநெளிய ஓடிய ஆற்றினை
சுவர்களை எழுப்பி தடுத்து நிறுத்தினான்.
சாக்கடையை ஆற்றிலும் கடலிலும் கலந்தான்.
தூய காற்றிலே நச்சுப்புகையை ஊடுறுவினான்.
மரங்களை வெட்டிச் சாய்த்தான் கொடூரமாக.
காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினான்.
சுதந்திரமாய் இன்பமாய் வாழ்ந்த எல்லா
விலங்குகளையும் சிறையில் இட்டு மகிழ்ந்தான்.
தப்பிக்க முயன்ற விலங்குகள் மரணவோலமிட்டன.
அவையெலாம் காதுகளுக்குள் இன்பத்தேனாய் பாய்ந்தன.
தத்தம் விருப்பங்களை எவரிடம் கூறும் இவ்விலங்குகள்.
இவையும் படைத்தானே கருணையற்ற இறைவன்.
பறவைகளின் இனிய கூட்டைக் கலைத்தான்.
வானத்தில் சுற்றித்திரிந்த பறவைகளைச் சுட்டான்.
அவைகளின் இருப்பிடங்களில் புகுந்து சூறையாடினான்.
முட்டைகளை சுட்டுத் தின்று மகிழ்ந்தான்.
கடலுக்கடியில் ஊர்ந்த உயிரையாயினும் நிம்மதியாய்
சுதந்திரமாய் அலைய விட்டானோ.. மனிதன்
அங்கும் சென்று அவைகளை துரத்தி
பிடித்து இழுத்து வந்து மகிந்தான்.
கூர்மையான ஊசிகளை மீன்களின் மென்மையான
நாக்கினில் அகோரமாக குத்தி இழுத்தான்.
நாய்களை ஏவிவிட்டு வேட்டையும் ஆடினான்.
இவையெலாம் இவனுக்கு மகிழ்வுறும் பொழுதுபோக்காம்.
பனிக்கட்டி படிந்திருந்த பூமியெல்லாம் புகுந்து
வீடுகளைக் கட்டி சூடேற்றிகளைச் சுழலவிட்டான்.
அறிவியல் எனும்பெயரில் குரங்குகளையும் எலிகளையும்
மருந்து கொடுத்து சித்ரவதை செய்தான்.
தன்னுடல் பெருக்க பல்வேறு விலங்குகளை
பண்ணை பண்ணையாய் காவலிட்டு வளர்த்தான்.
விண்வெளி அமைதியாய் இருப்பது பிடிக்குமா.
அங்கும் கிளம்பிவிட்டான் அதனைக் கெடுக்க.
மனிதனே.. நீ பொருட்களை வைத்து உலகை
ஆள்வதைக் கற்றுக் கொண்ட மாத்திரமே
நாங்கள் எல்லாம் உன் சிறையினுள்ளே..
உன் பார்வைக்கு மட்டும் மிருகக்காட்சிசாலைக்குள்ளே..
எங்களுக்கும் இதயத்தை கொடுத்தானே இறைவன்
அதே இதயத்தை உங்களுக்கும் கொடுத்தானோ
ஏனோ எங்களுணர்வுகள் உங்களுக்குப் புரிவதில்லை.
புரிந்தவரும் இதுவரை ஏதும் செய்ததில்லை.
நல்லவேளை.. நிலவிலும் வேற்று கிரகங்களிலும்
எங்களினம் உன்கண்ணில் இன்னும் படவில்லை.
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதனென்றார்.
எங்களுலகில் ஆறறிவு பெற்றவனே கீழ்த்தரமானவன்.
வேறு மனிதன் துணையில்லாததனால் சில
நாய்களுக்கு மட்டும் நல்வாழ்வு தந்தாய்
மனிதன் கால்பட்டஇடம் சிறுபுல் முளைக்காதென்பர்.
எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை - என்பது குறள்