alaguraj
23-08-2007, 07:32 AM
பட்டினத்தார் துறவியாக ஊர் ஊராக அலையும் போது நடந்த நிகழ்ச்சி இது.
ஒரு முறை அசதியில் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.
அவ்வழியே சென்ற பெண்கள் மீண்டும் திரும்பி வந்தனர். அப்போது பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம தலையணை சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நம்மளை யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, இன்னும் நான் என்ற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.
படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டினத்தார்.
பின்னர் பட்டினத்தார் உணர்ந்து கொண்டார் வந்தது வேறு யாருமல்ல, அம்பிகைதான் என்று.
ஒரு முறை அசதியில் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.
அவ்வழியே சென்ற பெண்கள் மீண்டும் திரும்பி வந்தனர். அப்போது பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம தலையணை சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நம்மளை யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, இன்னும் நான் என்ற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.
படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டினத்தார்.
பின்னர் பட்டினத்தார் உணர்ந்து கொண்டார் வந்தது வேறு யாருமல்ல, அம்பிகைதான் என்று.