மீனாகுமார்
22-08-2007, 02:13 PM
நீங்கள் இந்த கதையை ஏற்கனவே பல்வேறு விதங்களில் கேட்டிருக்கக்கூடும். இருப்பினும் இதை நம்மனதிள் எப்போதும் வைத்துக் கொண்டு நம் குற்றத்தை களைய வேண்டும் என்பதற்காக இங்கே கொடுக்கிறேன்.
ஒருமுறை கடவுள் நரகத்திற்க்கு விஜயம் செய்தார். அப்போது அங்கே மூன்று ஆழ்கிணறுகள் இருந்தன. முதல் கிணற்றின் மூடி சரியாக மூடப்படாமல் லேசாக திறந்திருந்தது. அதன் பக்கத்திலே "தயவு செய்து மூடியைத் திறந்து வெளியே செல்லாதீர்கள்" என்று அறிவிப்பு பலகை இருந்தது. இரண்டாவது கிணற்றின் மூடி பலவித குறுக்கு நெடுக்கான கம்பிகளால் வலுவாக மூடப்பட்டிருந்தது. மூன்றாவது கிணற்று மூடி மூடாமல் திறந்தே கிடந்தது. இதை நோக்கிய கடவுள் எமதர்மராஜனிடம் இந்த மூன்று கிணறுகளின் மூடி இப்படி இருப்பதற்கான காரணத்தை வினவினார்.
அதற்கு எமதர்மராஜன், கருணையின் வடிவாகிய இறைவனே, முதல் கிணறு அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமாகும். அவர்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே கீழ்ப்படிபவர். அதனால் இந்த கிணற்றின் மேலே வர நேர்ந்தால் இந்த அறிவிப்பு பலகையை படித்து விட்டு உள்ளேயே சென்று விடுவர்.
இந்த இரண்டாவது கிணறு, சீனர்கள் மற்றும் ஜப்பான்காரர்களுக்குமாகும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணை கொண்டு இந்த நரக கிணற்றை விட்டு வெளியேற அனைத்து முயற்சிகளும் செய்வர். அதனால், இந்த கிணறு வலுவாக மூடப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றாவது கிணறு, இந்தியர்களுக்காகவே. அவர்களிடம் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்களே. ஒருவர் முயற்சி செய்து மேலே ஏறி வர முயன்றால் மற்றொருவர் அவரை இழுத்து கீழே தள்ளிவிடுவார். இப்படியே ஒவ்வொருவரும் மாறி மாறி வெளியே வர முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்களே தவிர ஒருவரும் வெளியே வரமாட்டார். எனவே தான், இந்த கிணறு திறந்தே இருக்கிறது என்றார்.
இதே கதையை நண்டுகள் மூலமாகவும் கூறுவர். ஒரு நண்டு வெளியேற முற்பட்டால் மற்ற நண்டு அதை இழுத்துவிடும் என்ற உவமையைக் காட்டி கூறுவதும் உண்டு.
ஒருமுறை கடவுள் நரகத்திற்க்கு விஜயம் செய்தார். அப்போது அங்கே மூன்று ஆழ்கிணறுகள் இருந்தன. முதல் கிணற்றின் மூடி சரியாக மூடப்படாமல் லேசாக திறந்திருந்தது. அதன் பக்கத்திலே "தயவு செய்து மூடியைத் திறந்து வெளியே செல்லாதீர்கள்" என்று அறிவிப்பு பலகை இருந்தது. இரண்டாவது கிணற்றின் மூடி பலவித குறுக்கு நெடுக்கான கம்பிகளால் வலுவாக மூடப்பட்டிருந்தது. மூன்றாவது கிணற்று மூடி மூடாமல் திறந்தே கிடந்தது. இதை நோக்கிய கடவுள் எமதர்மராஜனிடம் இந்த மூன்று கிணறுகளின் மூடி இப்படி இருப்பதற்கான காரணத்தை வினவினார்.
அதற்கு எமதர்மராஜன், கருணையின் வடிவாகிய இறைவனே, முதல் கிணறு அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்குமாகும். அவர்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே கீழ்ப்படிபவர். அதனால் இந்த கிணற்றின் மேலே வர நேர்ந்தால் இந்த அறிவிப்பு பலகையை படித்து விட்டு உள்ளேயே சென்று விடுவர்.
இந்த இரண்டாவது கிணறு, சீனர்கள் மற்றும் ஜப்பான்காரர்களுக்குமாகும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணை கொண்டு இந்த நரக கிணற்றை விட்டு வெளியேற அனைத்து முயற்சிகளும் செய்வர். அதனால், இந்த கிணறு வலுவாக மூடப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றாவது கிணறு, இந்தியர்களுக்காகவே. அவர்களிடம் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. இந்தியர்களுக்கு எதிரி இந்தியர்களே. ஒருவர் முயற்சி செய்து மேலே ஏறி வர முயன்றால் மற்றொருவர் அவரை இழுத்து கீழே தள்ளிவிடுவார். இப்படியே ஒவ்வொருவரும் மாறி மாறி வெளியே வர முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்களே தவிர ஒருவரும் வெளியே வரமாட்டார். எனவே தான், இந்த கிணறு திறந்தே இருக்கிறது என்றார்.
இதே கதையை நண்டுகள் மூலமாகவும் கூறுவர். ஒரு நண்டு வெளியேற முற்பட்டால் மற்ற நண்டு அதை இழுத்துவிடும் என்ற உவமையைக் காட்டி கூறுவதும் உண்டு.