வெண்தாமரை
21-08-2007, 01:06 PM
அதிகாலை பொழுது புலர்ந்தது.. எப்பவும் அதிகாலை 5 மணிக்கு
எழுந்துவிடும் இனியா இன்று ஏனோ 7 மணியாகியும் எழுந்திரிக்கவில்லை.. அன்று அவளுக்கு பிறந்தநாளும் கூட.. தனி அறையில்தான் தூங்குவாள்.. ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம்.... அலாறம் அடித்துக் கொண்டிருக்கிறது.. வானொலி இரைந்து கொண்டிருக்கிறது.. ஏனோ அவள் எழுந்திரிக்கவில்லை.. அம்மா அவள் அறை கதவை திறந்து உள்ளே சென்றாள்.. எல்லா அப்படியே இருக்க போட்டது போட்டபடி.. அவளது மேஜையில் ஒரு கடிதம்.. பிரித்து பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி!..
அன்புள்ள அம்மா!
உன்னை விட்டு பரிய மனமில்லை.. மன்னித்துவிடு.. எனக்கு எந்தகுறையும் வைக்கவில்லை. ஆனால் என் மனம் விரும்பியவனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.. எனக்கு இன்றைக்கு பிறந்தநாள். இந்த நாளில் எனக்கு 21 பிறக்கிறது.. இன்று எனக்கும் என் அவருக்கும் திருமணம்.. கண்டிப்பாக வந்து எங்களை ஆசீர்வாதம் செய்யணும்.. என் அம்மாவுக்கு இனியாவின் இனிய முத்தம்..
இப்படிக்கு
உன் அன்புமகள்
இனியா..
பிரித்து படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். இவள் ஏன் இப்படி செய்ய வேண்டும்.. என்ற வினாவும் கூட எனென்றால் .. படிப்பை முடித்து 2 வருடம் வீட்டில் இருக்கிறாள்.. 3 நாளைக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.. அதற்குள் இப்படி ஏன்.. என்னிடம் சொல்லி இருக்க கூடாதா? இல்லை.. என்னிடமும் அவள் அப்பாவிடம் சொல்ல பயமா?? பலவிதமான வினாக்கள். குழம்பி போனாள்.. நாளை ஊர் என்ன சொல்லும்.. சொந்தபந்தங்கள் என்ன சொல்லும் என நினைத்து மருகி போனாள்.. தட்டுதாடுமாறி கீழே இறங்கி வந்து அவள் கணவனிடம் சொன்னாள் நம்ம குழந்த போயிட்டாங்க.. என்றாள். என்ன என்பதற்குள் தொலைபேசி அலறியது.................
தொடரும்..
எழுந்துவிடும் இனியா இன்று ஏனோ 7 மணியாகியும் எழுந்திரிக்கவில்லை.. அன்று அவளுக்கு பிறந்தநாளும் கூட.. தனி அறையில்தான் தூங்குவாள்.. ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம்.... அலாறம் அடித்துக் கொண்டிருக்கிறது.. வானொலி இரைந்து கொண்டிருக்கிறது.. ஏனோ அவள் எழுந்திரிக்கவில்லை.. அம்மா அவள் அறை கதவை திறந்து உள்ளே சென்றாள்.. எல்லா அப்படியே இருக்க போட்டது போட்டபடி.. அவளது மேஜையில் ஒரு கடிதம்.. பிரித்து பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி!..
அன்புள்ள அம்மா!
உன்னை விட்டு பரிய மனமில்லை.. மன்னித்துவிடு.. எனக்கு எந்தகுறையும் வைக்கவில்லை. ஆனால் என் மனம் விரும்பியவனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன்.. எனக்கு இன்றைக்கு பிறந்தநாள். இந்த நாளில் எனக்கு 21 பிறக்கிறது.. இன்று எனக்கும் என் அவருக்கும் திருமணம்.. கண்டிப்பாக வந்து எங்களை ஆசீர்வாதம் செய்யணும்.. என் அம்மாவுக்கு இனியாவின் இனிய முத்தம்..
இப்படிக்கு
உன் அன்புமகள்
இனியா..
பிரித்து படித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். இவள் ஏன் இப்படி செய்ய வேண்டும்.. என்ற வினாவும் கூட எனென்றால் .. படிப்பை முடித்து 2 வருடம் வீட்டில் இருக்கிறாள்.. 3 நாளைக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் பெண் பார்க்க வந்தார்கள்.. அதற்குள் இப்படி ஏன்.. என்னிடம் சொல்லி இருக்க கூடாதா? இல்லை.. என்னிடமும் அவள் அப்பாவிடம் சொல்ல பயமா?? பலவிதமான வினாக்கள். குழம்பி போனாள்.. நாளை ஊர் என்ன சொல்லும்.. சொந்தபந்தங்கள் என்ன சொல்லும் என நினைத்து மருகி போனாள்.. தட்டுதாடுமாறி கீழே இறங்கி வந்து அவள் கணவனிடம் சொன்னாள் நம்ம குழந்த போயிட்டாங்க.. என்றாள். என்ன என்பதற்குள் தொலைபேசி அலறியது.................
தொடரும்..