இனியவள்
19-08-2007, 06:35 PM
இயற்கையே நீ கொடுத்த
வளத்ததை நாம் எடுத்து
உன்னை அழிக்கின்றோம்.
நீயோ மீண்டும் மீண்டும்
கொடுக்கின்றாய் நன்மைகள்
நாம் நலமாய் வாழ்ந்திட....
நன்மை செய்திடில் பதிலுக்கு
தீமை செய்யாதே மானிடா.
பலவழிகளில் உன்னைக்
காத்திடும் இயற்கையை
காக்காவிடினும் அழித்திடாதே.
வருங்காலம் கண்ணுற்று நோக்காமல்
போய்விடும் அழகிய இயற்கையை...
தர தர பெறுகின்றாய்
வெட்டி வெட்டி எரிக்கின்றாய்
வெட்ட வெட்ட முளைக்கின்றது
அதையே
வேரொடு அழிக்க முனைகின்றாய்
உன் லாபத்திற்காய்.
நீ அழிப்பது மரத்தையல்ல
உன் வருங்கால சந்ததியினரின்
நல்வாழ்வை...
ஒரு மரத்தை நீ அழித்தாலும்
ஆக்கிவிடு பல மரங்கள்.
என்றும் உனக்கு நிழலாய் இருந்து
இயற்கை
அனர்த்தங்கள் இன்றி
உன்னைக் காப்பாற்றிடும்...
வளத்ததை நாம் எடுத்து
உன்னை அழிக்கின்றோம்.
நீயோ மீண்டும் மீண்டும்
கொடுக்கின்றாய் நன்மைகள்
நாம் நலமாய் வாழ்ந்திட....
நன்மை செய்திடில் பதிலுக்கு
தீமை செய்யாதே மானிடா.
பலவழிகளில் உன்னைக்
காத்திடும் இயற்கையை
காக்காவிடினும் அழித்திடாதே.
வருங்காலம் கண்ணுற்று நோக்காமல்
போய்விடும் அழகிய இயற்கையை...
தர தர பெறுகின்றாய்
வெட்டி வெட்டி எரிக்கின்றாய்
வெட்ட வெட்ட முளைக்கின்றது
அதையே
வேரொடு அழிக்க முனைகின்றாய்
உன் லாபத்திற்காய்.
நீ அழிப்பது மரத்தையல்ல
உன் வருங்கால சந்ததியினரின்
நல்வாழ்வை...
ஒரு மரத்தை நீ அழித்தாலும்
ஆக்கிவிடு பல மரங்கள்.
என்றும் உனக்கு நிழலாய் இருந்து
இயற்கை
அனர்த்தங்கள் இன்றி
உன்னைக் காப்பாற்றிடும்...