PDA

View Full Version : பேசிவிடு என்னோடு....



sadagopan
18-08-2007, 05:54 AM
நான் கவிதை எழுதத்
துவங்கும் பொதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையை - நீ
எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்
கவிதை என்று - உன்னைப்
பார்த்த பின்தான்
புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்
பெயரை எழுதும்போதுதான்
தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள் நன்றாய்ப்
புரிகி‎ன்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்
இப்படிப்
புலம்பிகொண்டுதான்
இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்
இன்றாவது பேசிவிடு
என்னோடு.

****
நட்புடன்

சடகோபன்