sadagopan
16-08-2007, 06:16 AM
பாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்குத் துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான். வேலை பார்ப்பது ஒரு தனியார் கம்பெனியில், அதுவும் நிரந்தரமாக இல்லை. லீவ் போஸ்டில் ஆள் இல்லாத போது வேலை செய்வான். அப்படி இப்படி என்று கையில் ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்தான்.
முடிவெடுத்தவுடன் அவன் செல்ல விரும்பிய பேங்க் அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்த பேங்க்தான். முதன் முதலாக பேங்கிற்கு செல்வதால் சலவை செய்த பேண்ட் சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். கண்ணாடியைப் பார்த்து ஒரு முறை தலையை வாரிக் கொண்டான். பின் பவுடர் பூசிக்கொண்டான். கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று தன் தங்கை குழந்தையின் விளையாட்டுப் பொருளான பொம்மை செல் போனை மறக்காமல் சட்டைப் பையில் வெளியே தெரியுமாறு வைத்துக் கொண்டான்.
பேங்கில் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலரைப் பார்த்தவுடன் தன் பணம் நிச்சயமாக இந்த பேங்கில் பத்திரமாக இருக்கும் என பாலுவுக்கு நம்பிக்கை வந்தது. உள்ளே நுழைந்தவுடன் தஸ் புஸ் என்று இங்கிலீஸ் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தவுடன் எட்டாவது படிக்கும் போது பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சர் பாரதி நினைப்பு வந்தது.
இவனைப் பார்த்தவுடன் "மே ஐ ஹெல்ப் யூ" என்றாள். உடனே பாலு "அக்கெளன்ட் ஓப்பன்" என்று ஆரம்பிக்க, அவள் "ப்ளீஸ் கோ அண்ட மீட் அவர் அக்கெளண்டென்ட் வித் ஐடின்டி புரூப்" எனக் கூற, அப்படியே வெளியே வந்துவிட்டான்.
நடந்ததை தன் நண்பனிடம் கூற, அவன் மருநாள் பாலுவுடன் வங்கிக்குச் சென்றான். நேற்றுப் பார்த்த அந்தப் பெண்ணைக் கண்டு பாலு ஒதுங்க முற்பட, நண்பன் அவளிடம், "மேடம் புதுசா கணக்கு துவங்கணும்" என்றான்.
"புதுக் கணக்கா, அதோ அங்கே அக்கௌண்டன்ட் இருக்காங்க பாருங்க. அவங்ககிட்ட உங்களோட விபரங்களையும் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பித்து கணக்கு ஆரம்பிக்கலாம்" எனக் கூறினாள்
அரை மணியில் கணக்குப் புத்தகம் கையில் வந்துவிட்டது.
பிரமித்துப்போன பாலுவிடம் "ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு
****
நட்புடன்
சடகோபன்
முடிவெடுத்தவுடன் அவன் செல்ல விரும்பிய பேங்க் அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்த பேங்க்தான். முதன் முதலாக பேங்கிற்கு செல்வதால் சலவை செய்த பேண்ட் சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். கண்ணாடியைப் பார்த்து ஒரு முறை தலையை வாரிக் கொண்டான். பின் பவுடர் பூசிக்கொண்டான். கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று தன் தங்கை குழந்தையின் விளையாட்டுப் பொருளான பொம்மை செல் போனை மறக்காமல் சட்டைப் பையில் வெளியே தெரியுமாறு வைத்துக் கொண்டான்.
பேங்கில் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலரைப் பார்த்தவுடன் தன் பணம் நிச்சயமாக இந்த பேங்கில் பத்திரமாக இருக்கும் என பாலுவுக்கு நம்பிக்கை வந்தது. உள்ளே நுழைந்தவுடன் தஸ் புஸ் என்று இங்கிலீஸ் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தவுடன் எட்டாவது படிக்கும் போது பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சர் பாரதி நினைப்பு வந்தது.
இவனைப் பார்த்தவுடன் "மே ஐ ஹெல்ப் யூ" என்றாள். உடனே பாலு "அக்கெளன்ட் ஓப்பன்" என்று ஆரம்பிக்க, அவள் "ப்ளீஸ் கோ அண்ட மீட் அவர் அக்கெளண்டென்ட் வித் ஐடின்டி புரூப்" எனக் கூற, அப்படியே வெளியே வந்துவிட்டான்.
நடந்ததை தன் நண்பனிடம் கூற, அவன் மருநாள் பாலுவுடன் வங்கிக்குச் சென்றான். நேற்றுப் பார்த்த அந்தப் பெண்ணைக் கண்டு பாலு ஒதுங்க முற்பட, நண்பன் அவளிடம், "மேடம் புதுசா கணக்கு துவங்கணும்" என்றான்.
"புதுக் கணக்கா, அதோ அங்கே அக்கௌண்டன்ட் இருக்காங்க பாருங்க. அவங்ககிட்ட உங்களோட விபரங்களையும் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பித்து கணக்கு ஆரம்பிக்கலாம்" எனக் கூறினாள்
அரை மணியில் கணக்குப் புத்தகம் கையில் வந்துவிட்டது.
பிரமித்துப்போன பாலுவிடம் "ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு
****
நட்புடன்
சடகோபன்