இனியவள்
15-08-2007, 06:50 PM
உறைந்த உண்மைகளை
உறையா மை கொண்டு
அச்சிடுகின்றான்
இரத்தத்தை வேர்வையாய் சிந்தி...
பணம் என்னும் முகமூடி அணிந்து
உண்மையை விலைகொடுத்து வாங்குகின்றன
சில பணமுதலைகள்
அதற்கு அடிமையாகின்றனர்
சில பணந்திண்ணிகள்...
இருட்டில் இருக்கும் நீதியை
எழுத்தெனும் ஒளிகொண்டு
உயிர்ப்பிக்கின்றான் எழுத்தாளன்..
உயிர்கொண்டு ஒளியேற்ற அதனை
லஞ்சம் என்னும் நீர் ஊற்றி அணைக்க
முற்பட விழித்தெழுகின்றது சமுதாயம்...
தூங்கும் சமுகத்தை தட்டித் தட்டி
எழுப்புகின்றான் எழுத்தாளன்
பேனையெனும் எழுத்தாணி கொண்டு..
உறையா மை கொண்டு
அச்சிடுகின்றான்
இரத்தத்தை வேர்வையாய் சிந்தி...
பணம் என்னும் முகமூடி அணிந்து
உண்மையை விலைகொடுத்து வாங்குகின்றன
சில பணமுதலைகள்
அதற்கு அடிமையாகின்றனர்
சில பணந்திண்ணிகள்...
இருட்டில் இருக்கும் நீதியை
எழுத்தெனும் ஒளிகொண்டு
உயிர்ப்பிக்கின்றான் எழுத்தாளன்..
உயிர்கொண்டு ஒளியேற்ற அதனை
லஞ்சம் என்னும் நீர் ஊற்றி அணைக்க
முற்பட விழித்தெழுகின்றது சமுதாயம்...
தூங்கும் சமுகத்தை தட்டித் தட்டி
எழுப்புகின்றான் எழுத்தாளன்
பேனையெனும் எழுத்தாணி கொண்டு..