PDA

View Full Version : வலிகொண்ட முத்தம்...



sadagopan
13-08-2007, 11:56 AM
உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின் வலி நான்
உணரவில்லை...

தாவணிப் பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பிய
நாட்களில் உன் அவஸ்தையின் வலி
நான் உணரவில்லை...

கல்லூரிப் பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி
நான் உணரவில்லை...

மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!


நட்புடன்

சடகோபன்

சிவா.ஜி
13-08-2007, 12:06 PM
அபாரம் சடகோபன். எந்த வலியை விடவும்,பிரிவின் வலி கொடியதுதான். அதுவும் திருமணத்திற்குப் பிறகு,வளர்ந்த வீட்டையும்,பாசத்தைக்கொட்டி வளர்த்த பெற்றோரையும் விட்டுப் பிரியும்போது ஏற்படும் வலி மிக அதிகம். அதை அழகான கவிதையாய் வடித்ததற்கு வாழ்த்துக்கள்.

விகடன்
13-08-2007, 12:31 PM
அன்னையின் அரவணைப்பிலிருக்கும்வரை யமனானாலும் பயமில்லை. அப்படிப்பட்ட அன்பு வலயத்தை தாண்டும்போது வருகின்ற துயரத்தை இனிமையான கவிதை நடையில் அசத்தியிருக்கிறீர்கள் சடகோபன்.

பாராட்டுக்கள்.

ஒன்றுமட்டும் தெளிவாகிறது....
இறுதியாக கலக்கிய இனியவளிற்கு பின்னர், கவிதைகளில் சாகசம் புரிவதற்கு இன்னொருவர் அவதரித்துவிட்டார் என்பது ....


வாழ்த்துக்கள்.

அக்னி
13-08-2007, 12:32 PM
கரம்பிடிக்கும்வரை,
பெற்றதல்லவா முழுமையும்...
கரம்பிடித்தபின்,
மாற்றமல்லவா மனதிலும்...
அதனால்தான்,
வலிகள் தெறிக்குதோ,
சந்தோஷ கணங்களில்..?

மனதைத் தொட்ட கவிதைக்கு பாராட்டுக்கள்...

கூடவே 100 iCash.

kalaianpan
13-08-2007, 04:05 PM
சுருக்கமாக எல்லவற்றையும் சொல்லிவிட்டீர்.
இப்பொழுது அவள் தொலைதூரத்தில்
நான் வெகுதூரத்தில்.....
இப்போதும் பிரிவு......

hithayathboi
15-08-2007, 03:47 PM
உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்

அமரன்
15-08-2007, 03:53 PM
உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்

வாங்க நண்பரே...!
மன்றத்தில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தினால் பெருமகிழ்ச்சி அடைவேன்.
நன்றி.

இனியவள்
15-08-2007, 06:33 PM
வாழ்த்துக்கள் சடகோபம்

கவிதை அருமை சடகோபம்
பிரிவின் வலியை அழகாய்
எடுத்துரைத்துச் சென்று
விட்டது உங்கள் கவி

பாராட்டுக்களோடு 200 இ−பணம் அன்பளிப்பாக

ஓவியன்
24-08-2007, 01:36 PM
அன்னையின் அவஸ்தைகளை எந்தப் பிள்ளையும் அறிவதில்லை...
தானும் அந்த நிலை ஏகும் வரை.........

அழகான கவிதைக்கு பாராட்டுக்கள் சடகோபன்......!

Sendhilkumaar
24-08-2007, 01:44 PM
பிரிவும் ஒருவகை இறப்புதான் என்று எங்கேயோ கேட்ட ஞாபகம்....
அதனை நினைவுப்படுத்துகிறது இந்த கவிதை....

இலக்கியன்
25-08-2007, 08:25 AM
நியமான வலிகள் வாழ்த்துக்கள்

lolluvathiyar
25-08-2007, 08:39 AM
அன்னையின் அருமைய உனர வரும் சந்தர்ப்பம் விளக்கிய கவிதை வரிகள் அருமை.
குறிப்பாக இந்த கவிதையின் தலைப்பு ஈர்த்து அழகாக பொருந்தி விட்டது.
வாழ்த்துகள் சட*கோபாலன்