View Full Version : என் ஈர விழிகள்
வெண்தாமரை
13-08-2007, 08:59 AM
என் ஈர விழிகளில் ஒரமாய் நீ
நிஜமாய் வந்து நிழலாய் போனாய்
அன்றுதானடா தெரிந்தது உன் நாடகம்
பசித்து அழும் குழந்தை போல் ஆனேன.;..
என்றும் அன்புடன்
மஹா.....
இலக்கியன்
13-08-2007, 09:03 AM
ஈரவிழிகள் ஈரம்காய வேண்டும்
தொடரட்டும்
ஓவியன்
13-08-2007, 03:21 PM
நிஜம் போல்
நடிக்கும் நிழல்கள்!
வைக்கின்றன,
காதலுக்கு
கரும் புள்ளி!
கரும்புள்ளிகளை வைக்கும் கயவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊரை விட்டுத் துரத்தி காதலைக் காப்பாற்றுவோம்!.
பாராட்டுக்கள் கண்களில் ஈரம் வர வைத்த கவிதைக்கு மஹா!.
இனியவள்
13-08-2007, 03:58 PM
ஹீம் தாமரை
பசித்ததும் அழும் குழந்தைக்கு
உணவிருந்தும் கொடுக்க
மறுக்கும் மாற்றாந் தாய்...
விழியில் கண்ட ஈரத்தை
துடைத்து விட்டவனே
கண்ணீரைக் கொடுத்துச்
சென்று விட்டான் போலும்
வாழ்த்துக்கள் தாமரை
வெண்தாமரை
14-08-2007, 05:00 AM
இது என் சொந்த கவிதை அல்ல
என் உயிர்தோழி எழுதியது..
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! இலக்கியன் ஓவியன் இனியவள்..
விகடன்
14-08-2007, 05:29 AM
ஈரவிழிகளில் ஆரம்பித்ததாலோ
என்னவோ? ...... இன்றும்
ஈரமாகவே போய்விட்டது...
அழகான வரிகள். பாராட்டுக்கள் வெண்தாமரை.