karikaalan
12-08-2007, 02:26 PM
நண்பர்களே!
கடந்த சில நாட்களாக உலகப் பணச்சந்தை, பங்குச்சந்தை களேபரத்தைச் சந்தித்து வருகிறது. BNP Paribas எனும் பிரெஞ்சு வங்கி சிலபல கணக்குகளை -- $ 2.2 பில்லியன் -- முடக்கியுள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய வில்லனாகக் கூறப்படுவது Sub-Prime என்கிற சொல். ஈதென்ன sub-prime?
விளக்க முயல்கிறேன்.
வங்கிகள் கடன் கொடுக்கும் போது வட்டி விகிதம் Prime Lending Rate (PLR)க்கு சற்றே அதிகமாக இருக்கும். PLR ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுப்பதாக இருந்தால் விதிக்கும் வட்டி விகிதம். சில துறைகளுக்கு (விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி போன்றவை) அரசு மானியம் வழங்குவதால் PLRக்கு குறைவாகவும் கொடுக்கிறார்கள்.
கடன் வாங்குபவர்களை ஜமக்காளம் உதறுவது போல் உதறிவிட்டுத்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. அதாவது, முதல் திரும்பி வருமா, தொழில் ஒழுங்காக நடக்குமா, சம்பளம் சரியாக வருகிறதா, நல்ல கம்பெனியில் எத்தனை நாட்களாக வேலை செய்கிறார், என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பார்க்கிற விடை கிடைத்தால் கடன் அனுமதி செய்யப்படுகிறது. PLRக்கு ஓரிரு சதவீதங்கள் அதிகமாகத்தான் வட்டி இருக்கும். AAA கம்பெனிகள், நபர்கள் என்றால் சில சமயம் PLR விகிதத்திலேயே கூட கடன் கொடுப்பார்கள்.
சிலசமயங்களில், தற்போது நடந்துள்ளது போல், Sub-Prime வீதத்திலும் கொடுக்கிறார்கள்.
Sub-Prime என்றால் என்ன? ஆபத்தான நபர்களுக்கு, தொழில்களுக்கு, சரியாக தேர்வு செய்யாமல், PLRக்கு மிக அதிகமான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்தால், அந்த வட்டிக்கு Sub-Prime என்று பெயர். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் பைனான்ஸ் கம்பெனிகள் 42% வட்டி கொடுப்பதாகச் சொல்லி முதலீட்டாளர்களை சந்தியில் விட்டது நினைவு இருக்கும். இப்போது வங்கிகளே இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களால், நம் நாட்டில் இது நடவாத விஷயம்.
அமெரிக்காவில் (USA) அப்படியல்ல. சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களைப் பயன்படுத்தி சில வங்கிகள் கடனை வாரி வழங்கி இருக்கின்றன. புதியதாகக் கேள்விப் படுகிறேன் -- Quant-Funds -- இவற்றில் சில வங்கிகள் முதலீடு செய்திருக்கின்றன. ஜங்க் பாண்டுகளை விடவும் மோசமாம்! வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கிய கடன்கள் திரும்பப்பெறுவதில் சில குளறுபடிகள். இவைகளைச் சந்திக்க நேர்ந்தவுடன் வங்கிகள் என்ன செய்கின்றன? அடமானமாக வைத்தவைகளை விற்கத் துவங்குகின்றன -- Distress Sale -- ஈடாக வைத்தவைகள் விலை பாதாளத்துக்கு சரிகின்றன. இவைகளில் பங்குகளும் அடங்கும்.
வரும் நாட்களில் இன்னும் என்னென்ன தெரியவருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
===கரிகாலன்
கடந்த சில நாட்களாக உலகப் பணச்சந்தை, பங்குச்சந்தை களேபரத்தைச் சந்தித்து வருகிறது. BNP Paribas எனும் பிரெஞ்சு வங்கி சிலபல கணக்குகளை -- $ 2.2 பில்லியன் -- முடக்கியுள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய வில்லனாகக் கூறப்படுவது Sub-Prime என்கிற சொல். ஈதென்ன sub-prime?
விளக்க முயல்கிறேன்.
வங்கிகள் கடன் கொடுக்கும் போது வட்டி விகிதம் Prime Lending Rate (PLR)க்கு சற்றே அதிகமாக இருக்கும். PLR ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுப்பதாக இருந்தால் விதிக்கும் வட்டி விகிதம். சில துறைகளுக்கு (விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி போன்றவை) அரசு மானியம் வழங்குவதால் PLRக்கு குறைவாகவும் கொடுக்கிறார்கள்.
கடன் வாங்குபவர்களை ஜமக்காளம் உதறுவது போல் உதறிவிட்டுத்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. அதாவது, முதல் திரும்பி வருமா, தொழில் ஒழுங்காக நடக்குமா, சம்பளம் சரியாக வருகிறதா, நல்ல கம்பெனியில் எத்தனை நாட்களாக வேலை செய்கிறார், என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பார்க்கிற விடை கிடைத்தால் கடன் அனுமதி செய்யப்படுகிறது. PLRக்கு ஓரிரு சதவீதங்கள் அதிகமாகத்தான் வட்டி இருக்கும். AAA கம்பெனிகள், நபர்கள் என்றால் சில சமயம் PLR விகிதத்திலேயே கூட கடன் கொடுப்பார்கள்.
சிலசமயங்களில், தற்போது நடந்துள்ளது போல், Sub-Prime வீதத்திலும் கொடுக்கிறார்கள்.
Sub-Prime என்றால் என்ன? ஆபத்தான நபர்களுக்கு, தொழில்களுக்கு, சரியாக தேர்வு செய்யாமல், PLRக்கு மிக அதிகமான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்தால், அந்த வட்டிக்கு Sub-Prime என்று பெயர். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் பைனான்ஸ் கம்பெனிகள் 42% வட்டி கொடுப்பதாகச் சொல்லி முதலீட்டாளர்களை சந்தியில் விட்டது நினைவு இருக்கும். இப்போது வங்கிகளே இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களால், நம் நாட்டில் இது நடவாத விஷயம்.
அமெரிக்காவில் (USA) அப்படியல்ல. சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களைப் பயன்படுத்தி சில வங்கிகள் கடனை வாரி வழங்கி இருக்கின்றன. புதியதாகக் கேள்விப் படுகிறேன் -- Quant-Funds -- இவற்றில் சில வங்கிகள் முதலீடு செய்திருக்கின்றன. ஜங்க் பாண்டுகளை விடவும் மோசமாம்! வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கிய கடன்கள் திரும்பப்பெறுவதில் சில குளறுபடிகள். இவைகளைச் சந்திக்க நேர்ந்தவுடன் வங்கிகள் என்ன செய்கின்றன? அடமானமாக வைத்தவைகளை விற்கத் துவங்குகின்றன -- Distress Sale -- ஈடாக வைத்தவைகள் விலை பாதாளத்துக்கு சரிகின்றன. இவைகளில் பங்குகளும் அடங்கும்.
வரும் நாட்களில் இன்னும் என்னென்ன தெரியவருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
===கரிகாலன்