namsec
11-08-2007, 02:55 PM
கட்டண பாக்கி வசூலிக்க வக்கீல்கள்: மொபைல் நிறுவனங்கள் மிரட்டல்
வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வரிசையில் இப்போது மொபைல் நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. கட்டணம் செலுத்தாதோர் மற்றும் அவர்கள் உறவினர்களை தொலைபேசி மூலம் மிரட்ட, வக்கீல் குழுக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன மொபைல் நிறுவனங்கள்.கடன் தவணை செலுத்தாதோரை, தனியார் வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும், அடியாட்கள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்து கொண்டுள்ள நிலையில், இந்த வரிசையில் இப்போது மொபைல் போன் நிறுவனங்களும் சேர்ந்துள்ளன.மொபைல் போன் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளரின் கட்டண பாக்கியை வசூல் செய்ய, சட்ட உதவிக்குழு என்ற பெயரில், வக்கீல்களைக் கொண்ட தனியார் ஏஜென்சிகளை பணிக்கு அமர்த்தி உள்ளன . இவர்கள், கட்டண பாக்கி வைத்திருப்போர் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தார், உறவினர்களையும் தொலை பேசி மூலம் மிரட்டுகின்றனர்.உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்:அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மொபைல் போன் இணைப்பு பெற்றிருந்தார். அவர் கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாவிட்டால், ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றும் வக்கீல்கள் மிரட்டினர். நான்கு மணி நேரத்துக்குள் அதிகாரியின் மகன், மருமகள், மாமியாருக்கு, இது போல தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.இன்னொருவர் கப்பல்துறை முன்னாள் செயலர். இவரும் மொபைல் போன் இணைப்பு பெற்றிருந்தார். ஆனால், கட்டணத்தை சரியாக செலுத்துபவர். இவருக்கும் இதே போல, கைது செய்யப்போவதாக தொலைபேசியில் வக்கீல்கள் மிரட்டினர்.இந்த விஷயம் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 'டிராய்' கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.கட்டண பாக்கிக்காக, வாடிக்கையாளர்களின் உறவினர்களை மிரட்டுவதுடன், வாடிக்கையாளர்களின் மொபைல்போன் அழைப்புகள் பற்றிய விவரங்களை தனியார் ஏஜென்சிகளுக்கு அளிப்பது, அவரின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் செயல் என்று, 'டிராய்' தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கட்டண பாக்கியை வசூலிக்க, எந்த வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று மொபைல் நிறுவனங்கள் தெரிவிக்க, அவர் உத்தரவிட்டுள்ளார்
ந*ன்றி தின*ம*லர்.
மேற்ப்படி செய்தி முற்றிலும் உண்மை ஏர்டெல் நிறுவனத்தார் கடந்த 3 தினங்களாக எனக்கு பெண்கள் மூலம் தொடர்புகொண்டு தகாதவர்த்தைகளில் ஏசுகின்றனர் மிறட்டலும் விடுகின்றனார் நான் அவர்கள் தொடர்புகொன்ட தொலைபேசி என் மற்றும் நேரத்தை குறித்துகொண்டு என்னுடய வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளேன்.
வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வரிசையில் இப்போது மொபைல் நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. கட்டணம் செலுத்தாதோர் மற்றும் அவர்கள் உறவினர்களை தொலைபேசி மூலம் மிரட்ட, வக்கீல் குழுக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன மொபைல் நிறுவனங்கள்.கடன் தவணை செலுத்தாதோரை, தனியார் வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்களும், அடியாட்கள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்து கொண்டுள்ள நிலையில், இந்த வரிசையில் இப்போது மொபைல் போன் நிறுவனங்களும் சேர்ந்துள்ளன.மொபைல் போன் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளரின் கட்டண பாக்கியை வசூல் செய்ய, சட்ட உதவிக்குழு என்ற பெயரில், வக்கீல்களைக் கொண்ட தனியார் ஏஜென்சிகளை பணிக்கு அமர்த்தி உள்ளன . இவர்கள், கட்டண பாக்கி வைத்திருப்போர் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தார், உறவினர்களையும் தொலை பேசி மூலம் மிரட்டுகின்றனர்.உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்:அரசின் மூத்த அதிகாரி ஒருவர் மொபைல் போன் இணைப்பு பெற்றிருந்தார். அவர் கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாவிட்டால், ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றும் வக்கீல்கள் மிரட்டினர். நான்கு மணி நேரத்துக்குள் அதிகாரியின் மகன், மருமகள், மாமியாருக்கு, இது போல தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.இன்னொருவர் கப்பல்துறை முன்னாள் செயலர். இவரும் மொபைல் போன் இணைப்பு பெற்றிருந்தார். ஆனால், கட்டணத்தை சரியாக செலுத்துபவர். இவருக்கும் இதே போல, கைது செய்யப்போவதாக தொலைபேசியில் வக்கீல்கள் மிரட்டினர்.இந்த விஷயம் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 'டிராய்' கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.கட்டண பாக்கிக்காக, வாடிக்கையாளர்களின் உறவினர்களை மிரட்டுவதுடன், வாடிக்கையாளர்களின் மொபைல்போன் அழைப்புகள் பற்றிய விவரங்களை தனியார் ஏஜென்சிகளுக்கு அளிப்பது, அவரின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் செயல் என்று, 'டிராய்' தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கட்டண பாக்கியை வசூலிக்க, எந்த வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று மொபைல் நிறுவனங்கள் தெரிவிக்க, அவர் உத்தரவிட்டுள்ளார்
ந*ன்றி தின*ம*லர்.
மேற்ப்படி செய்தி முற்றிலும் உண்மை ஏர்டெல் நிறுவனத்தார் கடந்த 3 தினங்களாக எனக்கு பெண்கள் மூலம் தொடர்புகொண்டு தகாதவர்த்தைகளில் ஏசுகின்றனர் மிறட்டலும் விடுகின்றனார் நான் அவர்கள் தொடர்புகொன்ட தொலைபேசி என் மற்றும் நேரத்தை குறித்துகொண்டு என்னுடய வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளேன்.