தங்கவேல்
11-08-2007, 01:19 AM
மெல்போர்ன்: நீங்கள் அடிக்கடி கம்ப்யூட்டர் பிரின்ட்டரை பயன்படுத்துபவரா? அப்படியானால், இனி குறைத்துக் கொள்ளுங்கள்!
சிகரெட் புகையை சுவாசித்தால் ஏற்படும் பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியிலும் உள்ளது என்று, ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக நிபுணர்கள், இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி சில தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நிகோடின் புகையால், நுரையீரல் பாதிக்கிறது. புகை பிடிப்பவர்கள் விடும் புகையால், மற்றவர்களுக்கும் பாதிப்பு வருகிறது. சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புக்கு சமமான பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியால் ஏற்படுகிறது. பிரின்ட்டர் இயங்கும் போது கிளம்பும், புறஊதா கதிர்கள், மனிதர்களின் நுரையீரலில் போய்ச்சேருகிறது. பிரின்ட்டரில் உள்ள "டோனர்' சாதனத்தின் மூலம் கிளம்பும் நெடி, சுவாசக்குழாய் வழியாக நுரையீரலை எளிதில் போய்ச்சேருகிறது. சிகரெட் புகை துகள்கள் போல, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் புகை, நுரையீரலில் பாதிப்பை தருகிறது. கேன்சர் அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். சுவாசக்குழாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆபீசில் வேலை செய்யும் போது, பிரின்ட்டரை அடிக்கடி பயன்படுத்தினால், அந்த அறையில் உள்ளவருக்கு, இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாதாரண அளவில் பயன்படுத்தப்படும் "டோனர்' சாதனங்களால், பெரிய பாதிப்பு வராது. ஆனால், கிராபிக்ஸ் உட்பட பல தொழில்நுட்ப பணிகளுக்கு சக்தி வாய்ந்த "டோனர்' பயன்படுத்தப்படுவதால், ஆபத்து அதிகமாகிறது.
இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்
சிகரெட் புகையை சுவாசித்தால் ஏற்படும் பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியிலும் உள்ளது என்று, ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக நிபுணர்கள், இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி சில தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நிகோடின் புகையால், நுரையீரல் பாதிக்கிறது. புகை பிடிப்பவர்கள் விடும் புகையால், மற்றவர்களுக்கும் பாதிப்பு வருகிறது. சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப்புக்கு சமமான பாதிப்பு, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் நெடியால் ஏற்படுகிறது. பிரின்ட்டர் இயங்கும் போது கிளம்பும், புறஊதா கதிர்கள், மனிதர்களின் நுரையீரலில் போய்ச்சேருகிறது. பிரின்ட்டரில் உள்ள "டோனர்' சாதனத்தின் மூலம் கிளம்பும் நெடி, சுவாசக்குழாய் வழியாக நுரையீரலை எளிதில் போய்ச்சேருகிறது. சிகரெட் புகை துகள்கள் போல, கம்ப்யூட்டர் பிரின்ட்டர் புகை, நுரையீரலில் பாதிப்பை தருகிறது. கேன்சர் அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். சுவாசக்குழாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆபீசில் வேலை செய்யும் போது, பிரின்ட்டரை அடிக்கடி பயன்படுத்தினால், அந்த அறையில் உள்ளவருக்கு, இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாதாரண அளவில் பயன்படுத்தப்படும் "டோனர்' சாதனங்களால், பெரிய பாதிப்பு வராது. ஆனால், கிராபிக்ஸ் உட்பட பல தொழில்நுட்ப பணிகளுக்கு சக்தி வாய்ந்த "டோனர்' பயன்படுத்தப்படுவதால், ஆபத்து அதிகமாகிறது.
இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்