PDA

View Full Version : நீதானடி....!



வசீகரன்
10-08-2007, 10:04 AM
நடு நிசியில் புறக்கண் விழிக்கும் போதும்
அதிகாலையில் அகக்கண் விழிக்கும் போதும்

கண்ணாடியில் என் விம்பம் காணும் போதும்
காதல் பேசும் என் கண்களை காணும் போதும்

தோட்டத்தின் ரோஜா காணும் போதும்..
அழுத குழந்தை சிரிக்கும் போதும்

மெலிதாய் ஒரு பாடல் கேட்கும் போதும்
உடனே உதடுகள் அதை முணுமுணுக்கும் போதும்

அலுவலக அலுப்பில் சிலிர்க்கும் போதும்
முடித்து கலைக்கும் போதும்

கால் வலிக்க நடக்கும் போதும்
வீடு திரும்பி சுகிக்கும் போதும்

யாரேனும் என் பெயர் சொல்லி அழைக்கும் போதும்
காதல் கவிதைகள் படிக்கும் போதும்

என்றும் எப்போதும் எந்நேரமும் என் நினைவொலியில்

அகப்பட்ட விட்டில் பூச்சியாய் ஓயாமல் உன் ஞாபகங்கள் தானடி....!


_________________

அமரன்
10-08-2007, 10:08 AM
காதல் அமுதசுரபி..எடுக்க எடுக்க குறையாது..கொடுக்க கொடுக்க குறையாது. காதல் கவிதைகளும் அப்படியே..எங்கே காணிலும் அவள் நினைவுகள். வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கவிதை இன்னும் கொஞ்சும். பாராட்டுக்கள் வசீகரன்.

பிச்சி
10-08-2007, 10:10 AM
கவிதை சூப்பர். நல்ல ஞாபகம்,.

வசீகரன்
10-08-2007, 12:43 PM
ஆம் நண்பரே.....! வெகு நாட்கள் நம் மன்றத்தை நீங்கி இருந்தேன்... இன்று தான் நுழைந்தேன் அவசரத்தை எழுத்துக்களில் வெளிப்படுத்தியதால்
பிழைகளை தவிர்க்க முடியவில்லை.... இனி தொடர்ந்து
எழுதுவேன் தங்கள் போன்ற நண்பர்களின் ஆதரவு வேண்டும்......


நட்புடன்
வசீகரன்....!

அமரன்
10-08-2007, 12:44 PM
வசீ..வாழ்த்துவதிலும் வளர்ப்பதிலும் நம்மவர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தொடருங்கள்..

வசீகரன்
10-08-2007, 12:45 PM
கவிதை சூப்பர். நல்ல ஞாபகம்,.
நன்றி நண்பரே.....!

இணைய நண்பன்
10-08-2007, 01:08 PM
அனுபவத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

வசீகரன்
10-08-2007, 01:20 PM
அனுபவத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே.....!

வசீகரன்

சிவா.ஜி
11-08-2007, 04:52 AM
நினைவுகள் நிழல் போல் எங்கும் எப்போதும் தொடரும். அதிலும் காதல் நினைவுகள் என்றால் உறக்கத்திலும் துரத்தும் கனவுகளாய்.நல்ல வரிகள்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் வசீகரன்.

aren
11-08-2007, 05:11 AM
காதல் ஆரம்பிக்கும்பொழுது அனைத்திலும் அவள் நினைவாகவே இருக்கும். உங்கள் காதல் எப்பொழுதும் தொடர்ந்துகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.

கவிதை வரிகள் அருமை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
16-08-2007, 10:24 PM
அருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்............
இங்கே காதலால் பட்டவனுக்கு காண்பதெல்லாம் காதலியின் ஞாபகம்..........

அருமை வசீ!
கொஞ்சம் எழுத்து பிழைகளிலும் கவனமெடுங்களேன்...........