இனியவள்
08-08-2007, 03:11 PM
எனக்கு ஜனனம் நீ தந்தது
உன் நாட்களை நான் வாழ்கின்றேன்
என் நாட்களை நீ வாழ்கின்றாய்....
இருள் இல்லாவிடின் சூரியனின் அருமை
தெரிவதில்லை
பிரிவொன்று நேராவிடின் உன் அருமை
தெரிந்திராதே எனக்கும்...
இருளில் இருளாய்க் கலந்து
என்னைத் தொடர்கின்றாய்...
சூரியனைக் காணாவிடின் இதழ் மூடும்
தாமரை போல் உன்னைக் காணாத இக்
கண்கள் வேறெதனையும் காணப் பிடிக்காது
தாழ்போட்டுக்கொள்கின்றன....
உணவின் அருமை பசியில் தெரிகின்றது
உனதருமை பிரிவில் தெரிகின்றது...
கடல் அலைகள் போல் துள்ளித் துள்ளி
வருகின்றேன் கரையாய் இருக்கும் உன்னைத்
தொட்டுவிட...
தங்கத்தை உருக்கும் தனலாய்
என்னை உருக்குகின்றாய் உன்
அன்புகொண்டு...
மலராய் நான் மாற தேனாய் இருக்கும்
என் அன்பைப் பருக வண்டுபோல்
வட்டமிடுகின்றாய் என்னை.....
உன் நினைவுகளை என் காதல் நெஞ்சில்
வீசி தூக்கத்தைக் கலைக்கின்றாய்...
என் கனவுகளைக் கலைக்கின்றது
விடியும் விடியல்
எனக்காய் காத்திருக்கும்
நிஜத்திற்காய்....
காத்திருக்கின்றேன் விதையாய் இருக்கும்
நம் காதல் விருட்சமாய் மாறுவதற்கு
உன் நாட்களை நான் வாழ்கின்றேன்
என் நாட்களை நீ வாழ்கின்றாய்....
இருள் இல்லாவிடின் சூரியனின் அருமை
தெரிவதில்லை
பிரிவொன்று நேராவிடின் உன் அருமை
தெரிந்திராதே எனக்கும்...
இருளில் இருளாய்க் கலந்து
என்னைத் தொடர்கின்றாய்...
சூரியனைக் காணாவிடின் இதழ் மூடும்
தாமரை போல் உன்னைக் காணாத இக்
கண்கள் வேறெதனையும் காணப் பிடிக்காது
தாழ்போட்டுக்கொள்கின்றன....
உணவின் அருமை பசியில் தெரிகின்றது
உனதருமை பிரிவில் தெரிகின்றது...
கடல் அலைகள் போல் துள்ளித் துள்ளி
வருகின்றேன் கரையாய் இருக்கும் உன்னைத்
தொட்டுவிட...
தங்கத்தை உருக்கும் தனலாய்
என்னை உருக்குகின்றாய் உன்
அன்புகொண்டு...
மலராய் நான் மாற தேனாய் இருக்கும்
என் அன்பைப் பருக வண்டுபோல்
வட்டமிடுகின்றாய் என்னை.....
உன் நினைவுகளை என் காதல் நெஞ்சில்
வீசி தூக்கத்தைக் கலைக்கின்றாய்...
என் கனவுகளைக் கலைக்கின்றது
விடியும் விடியல்
எனக்காய் காத்திருக்கும்
நிஜத்திற்காய்....
காத்திருக்கின்றேன் விதையாய் இருக்கும்
நம் காதல் விருட்சமாய் மாறுவதற்கு