View Full Version : அகதி
இலக்கியன்
07-08-2007, 08:29 AM
அகதிகளாகி
அலைகடல்-ஏறி
அக்கரை சேர்ந்த
ஓடங்களே....
உடமைகள்-இழந்து
உறவினைப்-பிரிந்து
உடல்களைச்-சுமந்த
ஜீவன்களே....
உங்கள் அழுகையின்
கண்ணீர் கடலுடன்-கலந்து
உப்பாய் போனதோ
சொல்லுங்களேன்....
இடை நடுவில்
பகையது வந்து
கதையை முடிக்குது
பாருங்களேன்....
அவர்கள் உதிரங்கள்-பெருகி
கடலுடன் கலந்து
மீன்களும் கலங்குதோ
சொல்லுங்களேன் ....
கரைகள் சேர்ந்த
உயிர்கள் கூட
சுகந்திரமின்றி
முடங்கி இருக்குது
பாருங்களேன்
அகதிகாளாக தமிழ்நாட்டுக்கு வரும் மக்கள் பற்றி இந்த புலம் பெயர்ந்த அகதியின் குரல்
அன்புரசிகன்
07-08-2007, 08:45 AM
நம் சொந்தங்கள் பல அனுபவித்த சோகக்கதையிது...
மனதில் ஆறாத வடுவாக....
சொந்த நாட்டில் அகதியான பெருமை ஈழத்தமிழருக்கு உண்டு... அதை அரங்கேற்றியபெருமை இலங்கை அரசுக்கு...
உணர்ச்சிபூர்வ வரிகளுக்கு பாராட்டுக்கள் இலக்கியன்...
ஈழத்து மக்களின் உணர்வுக் கவிதை மேலும் ஒன்று. அழகான கவிதை இலக்கியன்.
இடையில்-நடுவில் கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே அர்த்தம்தானே?
கடலில் கலந்த உதிரப்பெருக்கு
சுதந்திரமில்லா சுவாசம். ஆகியவை அருமை மிகுந்த வரிகள்.
பாராட்டுக்கள் இலக்கியன்.
இலக்கியன்
07-08-2007, 08:50 AM
நம் சொந்தங்கள் பல அனுபவித்த சோகக்கதையிது...
மனதில் ஆறாத வடுவாக....
சொந்த நாட்டில் அகதியான பெருமை ஈழத்தமிழருக்கு உண்டு... அதை அரங்கேற்றியபெருமை இலங்கை அரசுக்கு...
உணர்ச்சிபூர்வ வரிகளுக்கு பாராட்டுக்கள் இலக்கியன்...
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி அன்புரசிகன்
சிவா.ஜி
07-08-2007, 08:53 AM
எத்தனை சோகமென்றாலும் சொல்லித்தீர்க்கத்தானே வேண்டும்.
அழகான கவிதை நடையைக் கையாண்டிருப்பது பராட்டுக்குரியது.
சொன்ன கருத்து சோகம் நிறைந்தது,சொல்லிய விதம் சிறப்பானது.
பாராட்டுக்கள் இலக்கியன்
இலக்கியன்
07-08-2007, 08:53 AM
ஈழத்து மக்களின் உணர்வுக் கவிதை மேலும் ஒன்று. அழகான கவிதை இலக்கியன்.
இடையில்-நடுவில் கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே அர்த்தம்தானே?
கடலில் கலந்த உதிரப்பெருக்கு
சுதந்திரமில்லா சுவாசம். ஆகியவை அருமை மிகுந்த வரிகள்.
பாராட்டுக்கள் இலக்கியன்.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி
பேச்சு மொழியிலே அப்படி பேசுவது வழமை அதனால் அப்படி எழுதினேன்.
அமரன்
07-08-2007, 08:54 AM
ரத்தத்தின் ரத்தங்கள் வடிக்கும் செங்கண்ணீர் துளிகளில் ஒரு துளி இலக்கியனின் வரிகரிளில்...நெகிழ்வு.
இலக்கியன்
07-08-2007, 08:56 AM
எத்தனை சோகமென்றாலும் சொல்லித்தீர்க்கத்தானே வேண்டும்.
அழகான கவிதை நடையைக் கையாண்டிருப்பது பராட்டுக்குரியது.
சொன்ன கருத்து சோகம் நிறைந்தது,சொல்லிய விதம் சிறப்பானது.
பாராட்டுக்கள் இலக்கியன்
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி சிவா.ஜி
இலக்கியன்
07-08-2007, 08:58 AM
ரத்தத்தின் ரத்தங்கள் வடிக்கும் செங்கண்ணீர் துளிகளில் ஒரு துளி இலக்கியனின் வரிகரிளில்...நெகிழ்வு.
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி
இனியவள்
07-08-2007, 05:23 PM
அழகிய கவிதை என்று சொல்வதா
இல்லை ஒர் அகதியின் மனம்
வடிக்கும் இரத்தக் கண்ணீர்
வடித்த கவிதை என்று கூறுவதா..
வாழ்த்துக்கள் இலக்கியன்
இலக்கியன்
08-08-2007, 08:00 AM
அழகிய கவிதை என்று சொல்வதா
இல்லை ஒர் அகதியின் மனம்
வடிக்கும் இரத்தக் கண்ணீர்
வடித்த கவிதை என்று கூறுவதா..
வாழ்த்துக்கள் இலக்கியன்
காலக்கண்ணாடியாக இந்தக்கிறுக்கல்
நன்றி இனியவள்