PDA

View Full Version : தாங்காது இதயம்



இனியவள்
06-08-2007, 05:03 PM
இன்பங்கள் பரிமாறிக் கொண்டோம்
துன்பங்கள் இடமாற்றிக் கொண்டோம்...

இடையில் இறங்கிக் கொள்வதற்கு
நட்பொன்றும் இரயில் பயணமல்லவே
உயிர் உள்ளவரை எம்மோடு தொடர்ந்து
வரும் உயிர்ப்பயணமல்லவா...

காரணங்கள் பல கூறி உன் உயிர்க் கூட்டில்
இருந்தவளை இடம்மாற்றி
உயிரற்ற கூடாக மாற்றிவிடாதே...

பிரிந்த பிரிவை நினைத்து வருந்தியவளை
உன் நட்பெனும் உறவு தந்து மறுஜென்மம்
தந்தவளே எனக்கு பிரிவென்னும் பரிசை
அளித்துச் சென்றுவிடாதே...

இன்னொர் பிரிவைத் தாங்கும் வல்லமை
என் இதயத்திற்கு இல்லை....

இதயத்தில் ஆரம்பித்த எமது பயணம்
உயிர் என்னும் வீதியூடாக
பயணித்துக் கொண்டிருக்கின்றது
பிரிவு என்னும் காலனை அனுப்பி
பயணிக்கும் பாதயை மூடிவிடாதே
மூடி விடும் என் கண்கள் பிரிவைக்
கண்கொண்டு பார்க்கும் முன்...

அக்னி
06-08-2007, 05:16 PM
இடம்மாற்றினோம்
இன்பங்களையும் துன்பங்களையும்...
எனக்கு,
முழுவதுமாக இடம்மாற்றிவிட்டாய்
துன்பங்கள் முழுவதையும்...

இன்பங்களை பறித்து,
துன்பங்களை நிறைத்து,
விடும் பண்டமாற்றுத்தானோ,
பிரிவு..?

பிரிவின் வேதனையை ஆழமாகச் சொல்லும் கவிதை...
பாராட்டுக்கள்...

ரிஷிசேது
06-08-2007, 05:20 PM
கவிதை மிக அருமை
பாராட்டுக்கள்

அன்புரசிகன்
06-08-2007, 05:21 PM
காரணங்கள் பல கூறி உன் உயிர்க் கூட்டில்
இருந்தவளை இடம்மாற்றி
உயிரற்ற கூடாக மாற்றிவிடாதே...



தமிழனாக பிறந்துவிட்டாய்..
இடம்பெயர்ந்துதான் ஆகவேண்டும்...
உன்னிதயத்திலிருந்து அவனிடம்.... :sport009:

வரிகளுக்கு பாராட்டுக்கள்... :aktion033:

இனியவள்
06-08-2007, 06:32 PM
பிரிவின் வேதனையை ஆழமாகச் சொல்லும் கவிதை...
பாராட்டுக்கள்...

நன்றி அக்னி

உங்கள் பதில்க் கவிதை அருமை வாழ்த்துக்கள் :aktion033:

அமரன்
06-08-2007, 07:30 PM
காதலிக்கையில் கொடுத்ததை
பிரிகையில்வாங்குவதுதானே
காதலின் விதி.

புகைப்படங்கள்
அஞ்சல் காகிதங்களென
காதல் சின்னங்களை
திருப்பி வாங்கையில்
அதனுடன் சேர்த்து
அவனுக்குக் கொடுத்த
துன்பச்சுமைகளையும்
பெற்றுக்கொண்டாயோ...!

அவனிடம் பறித்த
இன்பப்பூக்களை
திருப்பிக் கொடுத்தாயோ..!

விதிகளின் வழி நடந்த
புதுமைபெண்ணே
வாழிய நீ.
வளர்க உன்கவி.

aren
06-08-2007, 08:02 PM
அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

இனியவள்
07-08-2007, 05:26 PM
கவிதை மிக அருமை
பாராட்டுக்கள்

நன்றி ரிஷி

இனியவள்
07-08-2007, 05:27 PM
தமிழனாக பிறந்துவிட்டாய்..
இடம்பெயர்ந்துதான் ஆகவேண்டும்...
உன்னிதயத்திலிருந்து அவனிடம்.... :sport009:
வரிகளுக்கு பாராட்டுக்கள்... :aktion033:

எழுதப்படாத சட்டமா அன்பு
தமிழராய்ப் பிறந்தவர் இடம்
மாறித் தான் ஆகவேண்டுமென

வாழ்த்துக்கள் அன்பு

இனியவள்
07-08-2007, 05:29 PM
நன்றி அமர்

அழகிய கவிதைக்கு எனது பாராட்டுக்கள்..

நிழல் பொருட்களைக் கொடுத்து
விடலாம் கேட்டால்...

உயிரோடு உறைந்து விட்ட நினைவுகளை
கேட்டால் எப்படி கொடுப்பது...

நீ தந்த இனிமைகளைக் கூட உன் பிரிவு
தந்த வலிகள் அழித்துச் சென்று விட்டன

இனியவள்
07-08-2007, 05:29 PM
அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

நன்றி ஆரென் அண்ணா