rambal
31-05-2003, 04:56 PM
விட்டேத்தியான பார்வைகள்... ஆரம்பம்..
ஒரு முன் குறிப்பு:
இந்தத் தொடர் முற்றிலும் வித்யாசமான முயற்சி.
இது என்னுடைய இலக்கியம் பற்றிய விட்டேத்தியான தேடுதல் நிறைந்த பயணம்..
சங்ககால இலக்கியம் தவிர்த்து எழுத்து மட்டுமல்லாது பிற கலைகள் பற்றியும்...
இலக்கியம் சார்ந்ததாக... இதன் நீள அகலங்கள்.. பரிணாம வளர்ச்சி.. வரலாறு... இப்படியாக..
சகிக்கமுடியாத.. அறுவெறுப்பான.. அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய.. ஜீரணிக்கவே முடியாத.. ஆனால், உண்மையான..
இது போன்ற எல்லவிதக் கலவைகளும் இந்த தொடரில் இடம் பெறும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்..
அப்புறம் ராம்பால் ஏன் இப்படி எழுதுகிறான்?
நேற்றுவரைக்கும் நல்லாத்தானே இருந்தான்.. எந்த காத்துகருப்பு பட்டுச்சோ..
இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது.. என்றெல்லாம் சொல்லக்கூடாது..
முன்னுரை:
இலக்கியத்தரம் வாய்ந்தது.. இலக்கியம்.. இசங்கள்.. இலக்கியவாதி.. கலை.. கலைப்படைப்பு..
இப்படி கொட்டிக்கிடக்கும் இந்த சொற்களுக்கு அர்த்தம் என்ன?
இலக்கியம் என்றால் என்ன?
அது எத்தகையது?
எதை இலக்கியம் என்று பகுப்பது?
எது இலக்கியம் இல்லை?
இப்படி ஒரு புரிந்தும் புரியாத புதிர் போன்று தோற்றமளிக்கும்
விசித்திரம்தான் இலக்கியமா?
இப்படி பல கேள்விகள் இலக்கியம் பற்றி..
இலக்கியம் சரியான முறையில் புரிதல் படவேண்டும்.
இலக்கியம் என்பது எல்லோருக்கும் சரியான முறையில்
போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்..
எழுத்து எப்படி இருக்க வேண்டும்?
எப்படி உருவகப்படுத்த வேண்டும்?
எப்படி உவமைகள் இருக்க வேண்டும்?
கவிதை என்பது என்ன?
என்று புரியாமல் பலவித சர்ச்சைகள் அவ்வப்பொழுது
நம் மன்றத்தில் நிகழ்வதால் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில்..
இலக்கியம் பற்றி எனக்குத் தெரிந்த வரையில்..
இது வெறும் கவிதை மற்றும் எழுத்து சார்ந்தது மட்டுமல்லாது அத்தனை வகை கலைகளும்
இடம்பெறும். அத்தனை கலைகளுக்கும் பொதுவான சாராம்சம் இருக்கிறது.
அந்த சாராம்சங்களைப் பற்றி..
அந்தக் கலைகளைப் படைத்த படைப்பாளிகள் பற்றி.. கலைஞர்களைப் பற்றி..
கொஞ்சம் விலாவரியாக விளக்கவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன்..
இதில் எல்லாவித இலக்கியங்களும் இடம்பெறும்..
லத்தீன் அமெரிக்காவின் மேஜிக்ரியலிசம் முதல் தலித் இலக்கியம், நாட்டார் இலக்கியம்..
இப்படியாக போர்னோ வரை..
(போர்னோ கூட ஒருவகை இலக்கியம் என்பதால் அதுவும் இடம் பெறும்..)
எல்லாவித இலக்கியவாதிகளும் இடம் பெறுவர்..
பிரான்சின் கேபரே கிளப் பாடகியில் இருந்து நம்மூர் அழகிய பெரியவன் வரை இடம் பெறுவர்..
ஆரம்பம்:
இலக்கியம் என்பது என்ன?
இலக்கியங்கள் என்பது ஒரு இலக்கோடு அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப அங்கு நிலவிய சமூக சூழலை.. அங்கு வாழும் மக்களின்
வாழ்க்கை முறையை.. காதலை, வீரத்தை, போர்கள் பற்றி.. அவலங்களை..
இப்படியாக ஏற்படும் பாதிப்புகளை பதிய ஒரு ஊடகம் தேவை..
அந்த ஊடகங்கள் தான் ஓவியம், சிற்பம், கவிதை, கட்டிடம்.. இப்படி ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு..
இவைகளுக்குத்தான் இலக்கியம் என்று பெயர் என்று எனது சிற்றறிவு கூறுகிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதை வெளிப்படுத்துதல் என்பதே
இலக்கியம் எனும் சொல்லுக்கு கோட்பாடாக இருக்கலாம்.
இலக்கியங்கள் என்று கூறப்படுகிறதே? அப்படியென்றால் என்ன?
இலக்கியங்கள் என்பது மொழிவாரியாக, பிராந்தியங்கள் வாரியாக, காலகட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலக காலத்தை யுகங்களாக பிரித்திருப்பது போல் இதை இசங்களாக பிரித்துள்ளனர்.
அதற்காக சங்ககாலம்.. தொல்கப்பியம் என்றெல்லாம் விலாவாரியாக விவரித்து சொல்லப்போவதில்லை..
நான் எடுத்துக் கையாளப்போகும் கால கட்டம் என்பது கிபி 1400ல் இருந்து இன்றைய தேதிவரை..
உலக இலக்கியங்களின் வரலாறு, பரிணாமவளர்ச்சி, அதில் இருந்து சில மேற்கோள்கள்.. அவ்வளவே..
இத்துடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன்..
Reniassance = Rebirth என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து தொடங்குகிறேன்..
தொடரும்....
ஒரு முன் குறிப்பு:
இந்தத் தொடர் முற்றிலும் வித்யாசமான முயற்சி.
இது என்னுடைய இலக்கியம் பற்றிய விட்டேத்தியான தேடுதல் நிறைந்த பயணம்..
சங்ககால இலக்கியம் தவிர்த்து எழுத்து மட்டுமல்லாது பிற கலைகள் பற்றியும்...
இலக்கியம் சார்ந்ததாக... இதன் நீள அகலங்கள்.. பரிணாம வளர்ச்சி.. வரலாறு... இப்படியாக..
சகிக்கமுடியாத.. அறுவெறுப்பான.. அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய.. ஜீரணிக்கவே முடியாத.. ஆனால், உண்மையான..
இது போன்ற எல்லவிதக் கலவைகளும் இந்த தொடரில் இடம் பெறும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்..
அப்புறம் ராம்பால் ஏன் இப்படி எழுதுகிறான்?
நேற்றுவரைக்கும் நல்லாத்தானே இருந்தான்.. எந்த காத்துகருப்பு பட்டுச்சோ..
இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது.. என்றெல்லாம் சொல்லக்கூடாது..
முன்னுரை:
இலக்கியத்தரம் வாய்ந்தது.. இலக்கியம்.. இசங்கள்.. இலக்கியவாதி.. கலை.. கலைப்படைப்பு..
இப்படி கொட்டிக்கிடக்கும் இந்த சொற்களுக்கு அர்த்தம் என்ன?
இலக்கியம் என்றால் என்ன?
அது எத்தகையது?
எதை இலக்கியம் என்று பகுப்பது?
எது இலக்கியம் இல்லை?
இப்படி ஒரு புரிந்தும் புரியாத புதிர் போன்று தோற்றமளிக்கும்
விசித்திரம்தான் இலக்கியமா?
இப்படி பல கேள்விகள் இலக்கியம் பற்றி..
இலக்கியம் சரியான முறையில் புரிதல் படவேண்டும்.
இலக்கியம் என்பது எல்லோருக்கும் சரியான முறையில்
போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்..
எழுத்து எப்படி இருக்க வேண்டும்?
எப்படி உருவகப்படுத்த வேண்டும்?
எப்படி உவமைகள் இருக்க வேண்டும்?
கவிதை என்பது என்ன?
என்று புரியாமல் பலவித சர்ச்சைகள் அவ்வப்பொழுது
நம் மன்றத்தில் நிகழ்வதால் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில்..
இலக்கியம் பற்றி எனக்குத் தெரிந்த வரையில்..
இது வெறும் கவிதை மற்றும் எழுத்து சார்ந்தது மட்டுமல்லாது அத்தனை வகை கலைகளும்
இடம்பெறும். அத்தனை கலைகளுக்கும் பொதுவான சாராம்சம் இருக்கிறது.
அந்த சாராம்சங்களைப் பற்றி..
அந்தக் கலைகளைப் படைத்த படைப்பாளிகள் பற்றி.. கலைஞர்களைப் பற்றி..
கொஞ்சம் விலாவரியாக விளக்கவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன்..
இதில் எல்லாவித இலக்கியங்களும் இடம்பெறும்..
லத்தீன் அமெரிக்காவின் மேஜிக்ரியலிசம் முதல் தலித் இலக்கியம், நாட்டார் இலக்கியம்..
இப்படியாக போர்னோ வரை..
(போர்னோ கூட ஒருவகை இலக்கியம் என்பதால் அதுவும் இடம் பெறும்..)
எல்லாவித இலக்கியவாதிகளும் இடம் பெறுவர்..
பிரான்சின் கேபரே கிளப் பாடகியில் இருந்து நம்மூர் அழகிய பெரியவன் வரை இடம் பெறுவர்..
ஆரம்பம்:
இலக்கியம் என்பது என்ன?
இலக்கியங்கள் என்பது ஒரு இலக்கோடு அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப அங்கு நிலவிய சமூக சூழலை.. அங்கு வாழும் மக்களின்
வாழ்க்கை முறையை.. காதலை, வீரத்தை, போர்கள் பற்றி.. அவலங்களை..
இப்படியாக ஏற்படும் பாதிப்புகளை பதிய ஒரு ஊடகம் தேவை..
அந்த ஊடகங்கள் தான் ஓவியம், சிற்பம், கவிதை, கட்டிடம்.. இப்படி ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு..
இவைகளுக்குத்தான் இலக்கியம் என்று பெயர் என்று எனது சிற்றறிவு கூறுகிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதை வெளிப்படுத்துதல் என்பதே
இலக்கியம் எனும் சொல்லுக்கு கோட்பாடாக இருக்கலாம்.
இலக்கியங்கள் என்று கூறப்படுகிறதே? அப்படியென்றால் என்ன?
இலக்கியங்கள் என்பது மொழிவாரியாக, பிராந்தியங்கள் வாரியாக, காலகட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலக காலத்தை யுகங்களாக பிரித்திருப்பது போல் இதை இசங்களாக பிரித்துள்ளனர்.
அதற்காக சங்ககாலம்.. தொல்கப்பியம் என்றெல்லாம் விலாவாரியாக விவரித்து சொல்லப்போவதில்லை..
நான் எடுத்துக் கையாளப்போகும் கால கட்டம் என்பது கிபி 1400ல் இருந்து இன்றைய தேதிவரை..
உலக இலக்கியங்களின் வரலாறு, பரிணாமவளர்ச்சி, அதில் இருந்து சில மேற்கோள்கள்.. அவ்வளவே..
இத்துடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன்..
Reniassance = Rebirth என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து தொடங்குகிறேன்..
தொடரும்....