சிவா.ஜி
04-08-2007, 07:51 AM
சொந்தத்தில் ஓர்
முதிர்ந்த உறவின்
சிதைந்த ஆசைகளை
அதிர்ந்த மனதுடன்
அருகிருந்து கண்டதில்
உதிர்கிறது
உறவுகளில் நம்பிக்கை!
ஓய்ந்த வயதில்
சாய்ந்தமர ஒரு
சாய்ந்த மர நாற்காலி.
அது மட்டுமே அவ்வுறவின் ஆசை!
அதுவும் மறுக்கப்பட்டது....
மற்றவராலல்ல மகனால்!
நாளை என்னிலை, எந் நிலை?
பிள்ளையிடம் வருமா
இல்லையென்ற சொல்?
வராது என்பது உறுதி,இருப்பினும்
வரவேண்டாமெனக் கருதி
சேமிப்பில் வாங்கினேன்
சாய்வு நாற்காலி−எனக்கான
ஓய்வு நாற்காலி!
நின்று பார்த்த பிள்ளை
ஒன்றும் சொல்லாதது
வலித்தது!
திறந்திருந்த கதவு வழி
அவன் குரல்
ஒலித்தது,
'தன் மானம் மிக்கவன்
என் தகப்பன்
அவரால் பிறப்பு
எனக்குச் சிறப்பு'
மகன் மொழி கேட்டு
மனதில் களிப்பு
ஆனந்த ஆடலில்
நாற்காலியின் ஒலிப்பு!
முதிர்ந்த உறவின்
சிதைந்த ஆசைகளை
அதிர்ந்த மனதுடன்
அருகிருந்து கண்டதில்
உதிர்கிறது
உறவுகளில் நம்பிக்கை!
ஓய்ந்த வயதில்
சாய்ந்தமர ஒரு
சாய்ந்த மர நாற்காலி.
அது மட்டுமே அவ்வுறவின் ஆசை!
அதுவும் மறுக்கப்பட்டது....
மற்றவராலல்ல மகனால்!
நாளை என்னிலை, எந் நிலை?
பிள்ளையிடம் வருமா
இல்லையென்ற சொல்?
வராது என்பது உறுதி,இருப்பினும்
வரவேண்டாமெனக் கருதி
சேமிப்பில் வாங்கினேன்
சாய்வு நாற்காலி−எனக்கான
ஓய்வு நாற்காலி!
நின்று பார்த்த பிள்ளை
ஒன்றும் சொல்லாதது
வலித்தது!
திறந்திருந்த கதவு வழி
அவன் குரல்
ஒலித்தது,
'தன் மானம் மிக்கவன்
என் தகப்பன்
அவரால் பிறப்பு
எனக்குச் சிறப்பு'
மகன் மொழி கேட்டு
மனதில் களிப்பு
ஆனந்த ஆடலில்
நாற்காலியின் ஒலிப்பு!