rambal
31-05-2003, 03:39 PM
சிற்றிதழ் எழுத்தாளர் ஆக.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..
சிற்றிதழ்கள் என்பது இலக்கியத்தரம் வாய்ந்தவை எனும் கருத்தோடு ஒட்டி அமைந்த
எழுத்தாளர்களின் கொட்டாரம்... அந்த வகை எழுத்தாளர்களாக எப்படி ஆவது என்பது பற்றிய
எடக்கு முடக்கு சிந்தனை இது..
1. பெயர் குதர்க்கமாக இருக்க வேண்டும். (ஞாநி.. ஆத்மாநாம்.. யாது.. இது போன்று)
2. லத்தீன் அமெரிக்கா, பல்கேரியா, ருவாண்டா போன்ற நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள்
கொஞ்சப் பேரை (பெயர்களை மட்டும்) தெரிந்திருத்தல் முக்கியமானது..
3. எதற்கெடுத்தாலும் வாயில் நுழையாத ஸ்பானிஸ் எழுத்தாளர் இப்படிச் சொன்னார்.. அப்படிச் சொன்னார்..
என்று ஏகத்திற்கு சொல்ல வேண்டும்.. (யாருக்கும் ஸ்பானிஸ் தெரியாது என்ற நம்பிக்கைதான்)
4. முக்கியமாக தாடி வைத்துக் கொள்ளவேண்டும்.. (குறைந்த பட்சம் கண்ணாடி அணிந்திருத்தல் அவசியம்)
5. உள்ளூர் இலக்கியம் பேசுவதென்றால் மலையாள இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..
இல்லை எனில் தலித் இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..
6. எழுதுவது என்றால் யாருக்கும் புரியக்கூடாது எனும் வகையில் எழுத வேண்டும்.. (ஜீனியஸ் என்று சொல்ல வேண்டும் அல்லவா)
7. யாராவது எழுத்தை விமர்சித்தால் இது இந்த இசம் என்று சொல்ல வேண்டும்.. அதுதான் ஏகத்திற்கு
விதவிதமாக சரவணபவன் ரசம் போல் இசங்கள் இருக்கிறதே..(சர்ரியலிசம், எக்ஸ்டென்சியலிசம்..)
8. முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், வேறொரு சிற்றிதழில் எழுதும் மற்றொரு
எழுத்தாளரை சகட்டுமேனிக்கு விமர்சிக்கவேண்டும்..
9. புத்தகங்களை வித்யாசமான முறையில் வெளியிடவேண்டும்..
ரயிலில் இருந்து தூக்கி எறிதல்.. விபச்சாரி கையில் முதல் பிரதி கொடுத்து..
குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி.. (குப்பைத் தொட்டிகள் கண்டனத்தீர்மனாங்கள் நிறைவேற்றி வழக்கு போடப் போவதாக ஒரு தகவல்)
10. பேட்டி எடுக்க வந்தால்.. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் தாய் என்னிடம் பாப்லொ நெருதா பற்றி விவாதித்தாள்.. என்று புழுக வேண்டும்..
மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் நீங்களும் சிற்றிதழ் எழுத்தாளராக ஜொலிக்கலாம்..
சிற்றிதழ்கள் என்பது இலக்கியத்தரம் வாய்ந்தவை எனும் கருத்தோடு ஒட்டி அமைந்த
எழுத்தாளர்களின் கொட்டாரம்... அந்த வகை எழுத்தாளர்களாக எப்படி ஆவது என்பது பற்றிய
எடக்கு முடக்கு சிந்தனை இது..
1. பெயர் குதர்க்கமாக இருக்க வேண்டும். (ஞாநி.. ஆத்மாநாம்.. யாது.. இது போன்று)
2. லத்தீன் அமெரிக்கா, பல்கேரியா, ருவாண்டா போன்ற நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள்
கொஞ்சப் பேரை (பெயர்களை மட்டும்) தெரிந்திருத்தல் முக்கியமானது..
3. எதற்கெடுத்தாலும் வாயில் நுழையாத ஸ்பானிஸ் எழுத்தாளர் இப்படிச் சொன்னார்.. அப்படிச் சொன்னார்..
என்று ஏகத்திற்கு சொல்ல வேண்டும்.. (யாருக்கும் ஸ்பானிஸ் தெரியாது என்ற நம்பிக்கைதான்)
4. முக்கியமாக தாடி வைத்துக் கொள்ளவேண்டும்.. (குறைந்த பட்சம் கண்ணாடி அணிந்திருத்தல் அவசியம்)
5. உள்ளூர் இலக்கியம் பேசுவதென்றால் மலையாள இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..
இல்லை எனில் தலித் இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..
6. எழுதுவது என்றால் யாருக்கும் புரியக்கூடாது எனும் வகையில் எழுத வேண்டும்.. (ஜீனியஸ் என்று சொல்ல வேண்டும் அல்லவா)
7. யாராவது எழுத்தை விமர்சித்தால் இது இந்த இசம் என்று சொல்ல வேண்டும்.. அதுதான் ஏகத்திற்கு
விதவிதமாக சரவணபவன் ரசம் போல் இசங்கள் இருக்கிறதே..(சர்ரியலிசம், எக்ஸ்டென்சியலிசம்..)
8. முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், வேறொரு சிற்றிதழில் எழுதும் மற்றொரு
எழுத்தாளரை சகட்டுமேனிக்கு விமர்சிக்கவேண்டும்..
9. புத்தகங்களை வித்யாசமான முறையில் வெளியிடவேண்டும்..
ரயிலில் இருந்து தூக்கி எறிதல்.. விபச்சாரி கையில் முதல் பிரதி கொடுத்து..
குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி.. (குப்பைத் தொட்டிகள் கண்டனத்தீர்மனாங்கள் நிறைவேற்றி வழக்கு போடப் போவதாக ஒரு தகவல்)
10. பேட்டி எடுக்க வந்தால்.. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் தாய் என்னிடம் பாப்லொ நெருதா பற்றி விவாதித்தாள்.. என்று புழுக வேண்டும்..
மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் நீங்களும் சிற்றிதழ் எழுத்தாளராக ஜொலிக்கலாம்..