இனியவள்
31-07-2007, 01:07 PM
மனதினை பாரம் அழுத்த
கிணற்று நீர் போல் கண்களில்
கண்ணீர் குடி கொண்டது....
எதிர்பாராமல் கிடைத்த உறவு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போய் விடுமோவென
இதயம் பட படக்க கண்களில்
கண்ணீர் அருவியாய் கொட்டியது....
மரங்களில் இருந்து உதிர உதிர
துளிர்க்கும் இலை போன்று
நீ விலக விலக உன்னில்
என் அன்பு மென்மேலும்
துளிர்க்கின்றது....
உன்னைக் காணாத நொடி
மனதில் இருளை உண்டாக்க
ரீங்காரம் இட்டு வரும்
குறுஞ்செய்தி ஒளிபாய்ச்சுகின்றது....
தொல்லைபேசியாய் இருந்த
அலைபேசி உன்னைக் கண்டபின்
என் மூன்றாம் கையாய் என்னோடு
நிழல் போல் தொடர்ந்தது.....
என் இதயப் புத்தகத்தில்
என் உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி உனக்கென
நான் வடித்த காவியம் காத்திருக்கிறது
உன் பார்வைக்காய்
கிணற்று நீர் போல் கண்களில்
கண்ணீர் குடி கொண்டது....
எதிர்பாராமல் கிடைத்த உறவு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போய் விடுமோவென
இதயம் பட படக்க கண்களில்
கண்ணீர் அருவியாய் கொட்டியது....
மரங்களில் இருந்து உதிர உதிர
துளிர்க்கும் இலை போன்று
நீ விலக விலக உன்னில்
என் அன்பு மென்மேலும்
துளிர்க்கின்றது....
உன்னைக் காணாத நொடி
மனதில் இருளை உண்டாக்க
ரீங்காரம் இட்டு வரும்
குறுஞ்செய்தி ஒளிபாய்ச்சுகின்றது....
தொல்லைபேசியாய் இருந்த
அலைபேசி உன்னைக் கண்டபின்
என் மூன்றாம் கையாய் என்னோடு
நிழல் போல் தொடர்ந்தது.....
என் இதயப் புத்தகத்தில்
என் உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி உனக்கென
நான் வடித்த காவியம் காத்திருக்கிறது
உன் பார்வைக்காய்