ரிஷிசேது
30-07-2007, 06:14 PM
உன் கனுக்காலுக்கு சற்றேமேலே
திராட்சை விதை போல
ஓர் மச்சம்.....
காவிரியில் நீயிறங்க
உயரத்தூக்கிய துணிமுடிவில்
உரசித் தெரிந்தது நல்லழகாய்
தரையில் சொர்கம், ரங்கம்
முட்டிப்பிரியும் முக்கொம்பு
நீ என் கைபிடித்தேரிய
மலைக்கோயில்
முள்ளொடத்து நீ
எழுதிய உன் என் பெயர்கள்
அப்படியேதானிருக்கு
திருச்சியிலே.....
நேற்று இன்று நாளையென
மாறிப்போன பொழுதுகளில்
நீயும் நானும் கூட மாறித்தான் போனோம்
ம்.....
திராட்சை விதை போல்
ஓர் மச்சம்
உன் கனுக்காலிலும்
என் மனதிலும்.....
திராட்சை விதை போல
ஓர் மச்சம்.....
காவிரியில் நீயிறங்க
உயரத்தூக்கிய துணிமுடிவில்
உரசித் தெரிந்தது நல்லழகாய்
தரையில் சொர்கம், ரங்கம்
முட்டிப்பிரியும் முக்கொம்பு
நீ என் கைபிடித்தேரிய
மலைக்கோயில்
முள்ளொடத்து நீ
எழுதிய உன் என் பெயர்கள்
அப்படியேதானிருக்கு
திருச்சியிலே.....
நேற்று இன்று நாளையென
மாறிப்போன பொழுதுகளில்
நீயும் நானும் கூட மாறித்தான் போனோம்
ம்.....
திராட்சை விதை போல்
ஓர் மச்சம்
உன் கனுக்காலிலும்
என் மனதிலும்.....