சிவா.ஜி
30-07-2007, 09:32 AM
தன்னையே ஆண்டவனாய் அறிவித்துக்கொண்ட அந்த ஆன்மீகவாதிக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள். அவருடைய பக்தர்களெல்லாம் இந்த விழாவை மிக விமரிசையாக கொண்டாட முடிவெடுத்து,நகரிலேயே மிகப்பெரிதான அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக தருவதற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் முன் வந்திருந்தது.எங்கெங்கு காணிணும் சிவப்பு மயமாகத்தெரிந்தது.
அரங்கத்தில் ஒரு திடீர் பரபரப்பு..சிங்காரஅடிகளார்வந்துவிட்டார்.பக்தர்களின்
ஓம் கோஷம் அரங்கத்தையே அதிரவைத்தது.அடிகளார் எண்னை மண்டி செட்டியார் போல,வயிற்றை மட்டும் உரம் போட்டு வளர்த்து வைத்திருந்தார்.சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு மெல்ல நகர்ந்து மேடையை அடைந்தார். மேடையின் நடுவில் பிரம்மாண்டமான இருக்கையில் சென்று அமர்ந்தார்.பக்தர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி அடிகளாரின் ஆசியை பெற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு ஒருவனாய் மேடையேறிய ஒரு இளைஞன் திடீரென்று அடிகளாரின் அருகில் சென்று அவர் கையை தன் கையுடன் விலங்கால் பிணைத்துக் கொண்டான். அரங்கமே அதிர்ச்சியில் அமைதியானது. அடிகளார் சுத்தமாக ஆடிப்போய்விட்டது அவரின் நடுக்கத்திலேயே தெரிந்தது.என்ன அவன் நோக்கம் என்று தெரியாமல் அதிர்ச்சியில் அசையாது நின்றுவிட்டார்.
இளைஞன் பேசத்தொடங்கினான்" அரங்கத்தில் இருக்கிற எல்லோரும் கொஞ்சம் என்னை கவனிங்க. என் உடம்பை சுத்தி பாம் வெச்சிருக்கேன். இதோ கையில இருக்கிற ரிமோட்ட அழுத்தினா அடிகளார் ஆட்டம் குளோஸ். எனக்குத்தேவை பணமோ வேற எந்த பொருளோ கிடையாது. உண்மை, வெறும் உண்மை. அதுதான் வேணும். இந்த அடிகளாரைப் பத்தின உண்மை அதுவும் அவரோட வாயாலயே சொல்லனும். ஓடிக்கிட்டிருகிற கேமரா எதையும் அனைக்கக் கூடாது.இந்த நல்லவரோட உண்மையான முகம் எதுன்னு இப்ப பாத்துக்கிட்டிருக்கிற எல்லாரும் தொடர்ந்து பாக்கனும்." பேசி விட்டு அடிகளாரைப் பார்த்து 'ம்..சொல்லு" என்றான்.
'எதை சொல்லச் சொல்ற' குழப்பமாய் கேட்ட அடிகளாரைப் பார்த்து
"உன்னப் பத்தி,நீ யாரு எப்படி இப்ப இருக்கிற இந்த நிலைக்கு வந்த,திரை மறைவில என்ன செஞ்சுக்கிட்டிருக்க எல்லாம்..எல்லாம் சொல்லு ஹீம்" மிரட்டலான தொனியில் அவன் சொன்னதும் எதைச் சொல்வது என்று சிறிதுயோசித்து விட்டு" இங்க பாருப்பா நான் ரொம்ப சாதாரணமானவன். இறைப்பணி செய்யறதுதான் எனக்கு இறைவன் இட்ட கட்டளை.என்னை ஏதோ குற்றவாளி மாதிரி கேக்கறியே என்னன்னு சொல்ல" வழக்கமாய் பக்தர்களை வசியம் செய்ய உபயோகிக்கும் அதே தந்திர பேச்சை அப்போதும் உபயோகப்படுத்தினார்.
இந்த நடிப்பை வெச்சுத்தான இத்தனை பேர நம்ப வெச்சிருக்கெ..இப்ப எனக்குத்தேவை
உண்மை....சொல்லு அடிக்குரலில் அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் பார்வையை ரிமோட்டுக்கு கொண்டு சென்றதைப் பார்த்ததும் பதறிக்கொண்டு,
சொல்லிடறேன் ஒண்ணும் பண்ணிடாதே..அலறி விட்டு.....எங்கிருந்து தொடங்குவது என்று சிறிது தயங்கி....பின் சொல்லத்தொடங்கினார்.
30 வருஷத்துக்கு முன்ன எங்க கிராமத்துல நானும் இன்னும் நாலு கூட்டாளிங்களும் சேர்ந்து ஆடு மாடு திருடிக்கிட்டிருந்தோம்.அப்படி திருடப்போனப்ப ஒரு தடவை ஊர்காரங்க பாத்துட்டாங்க. அவங்ககிட்ட மாட்டிக்காம ஓடி வந்தப்ப,பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தவங்ககிட்டருந்து தப்பிக்கறதுக்காக நாங்க அஞ்சு பேரும் வேற வேற திசையில ஓட ஆரம்பிச்சோம். நான் மட்டும் ஓடிப்போய் அங்க இருந்த சின்ன அம்மன் கோயிலுக்குள்ள கதவை உள் பக்கமா தாப்பா போட்டுக்கிட்டு உக்காந்துட்டேன்.தொரத்திக்கிட்டு வந்தவங்க கொஞ்ச நேரம் வெளியில உக்காந்து பாத்துட்டு திரும்பி போய்ட்டாங்க. சரி போய்ட்டாங்கன்னு நெனைச்சுட்டு வெளியில வந்தா இன்னும் நாலு பேரை கூட்டிகிட்டு வந்துகிட்டு இருந்தாங்க.பயந்துபோய் மறுபடியும் உள்ளப் போயிட்டேன். ரெண்டு நாள் உள்ளயே இருந்தேன். அதுக்கப்பறம் தாக்குப்பிடிக்க முடியாம வெளியில வந்தவன்,உள்ள இருக்கும்போதே யோசிச்சி வெச்ச படி அருள் வந்த மாதிரி நடிச்சேன். ஆத்தா எனக்குள்ள எறங்கிட்டான்னு சொல்லி நான் ஆடுன ஆட்டத்துல அந்த அப்பாவிங்களும் நம்பிட்டாங்க. அப்பதான் எனக்கு தோனுச்சி,இனிமே சின்ன சின்னதா திருடி பொழைக்கறத விட இத வெச்சே பணம் சம்பாதிக்கலாங்கற எண்னம். கூட்டாளிங்கள வெச்சு ஆடு மாடுங்கள திருடச்சொல்லி வேற ஊருங்கள்ல ஒளிச்சு வெக்கச் சொல்லி,நான் அருள் வந்து குறி சொல்லி அதுங்க இருக்கிற எடத்த காமிச்சுக் கொடுத்தேன். கிராமத்து ஜனங்க அத உண்மைன்னு நம்பி காணிக்கை குடுத்து குறி கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் அந்த கோவில்லயே உக்காந்து என் தொழில செய்ய ஆரம்பிச்சேன். நெறைய பணம் சேர ஆரம்பிச்சதும் என்னோட கிரிமினல் புத்திய உபயோகிச்சி ஒரு இயக்கமா தொடங்கி,வேற வேற ஊர்ல இருந்த என்னோட கூட்டாளி களவானிப் பசங்களையெல்லாம் அந்தந்த ஊருக்கு அமைப்பாளரப் போட்டு எல்லா ஊர் ஜனங்களையும் ஏமாத்தி பணம் சேத்தோம். அதுல அந்த பயலுங்களுக்கு 20 பர்செண்டு எனக்கு மீதின்னு பிரிச்சிக்கிட்டோம்.
கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தன் சித்து வேலை சரித்திரத்தை தொடர்ந்தார்.
பணம் அதிகமா சேர ஆரம்பிச்சதும் இந்த அரசியல்வாதிங்களும்,அரசாங்க அதிகாரிகளும் தொல்லை கொடுக்க தொடங்கிட்டாங்க.அவனுங்கள கைக்குள்ள போட்டுக்கறதுக்காக என் அமைப்புக்கு ஆசி வாங்க வர்ற குடும்ப பொம்பளைங்கள தீர்த்தம்ன்னு சொல்லி போதை மருந்த கலந்து குடுத்து,மயக்கமா இருக்கும்போதே அந்த பெரிய மனுஷனுங்களுக்கு சப்ளை பன்னேன். அதுக்கப்பறந்தான் பணம் கொட்ட ஆரம்பிச்சிச்சு.இப்ப என்கிட்ட 2000 கோடி இருக்கு.நம்ம நாட்டு ஜனங்கள ஆன்மீகத்தால ஏமாத்துறது ரொம்ப சுலபம். சொல்லிவிட்டு இன்னும் என்ன வேனும் என்பது போல அவனைப் பார்த்தார்.
யோவ் பன்னாடை,இப்ப சொன்னியே குடும்பப் பொம்பளைங்கள சப்ளை பன்னேன்னு அதுல ஒருத்திதான்யா எங்க அக்கா. உன்னையும் ஒரு சாமியார்ன்னு நெனைச்சு வந்தவள நாசப்படுத்திட்ட. அங்கருந்து திரும்பி வந்தப்பவே ஒரு மாதிரியாத்தான் இருந்தா.இன்னும் ஒருமாசத்துல கல்யாணம் நிச்சயிச்சிருந்தாங்க அவளுக்கு.அந்த சந்தோஷத்துல அவளுக்கு என்ன ஆச்சுங்கறதையே மறந்துட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தா.அவ வாழ்க்கையே சிரிப்பா சிரிக்கப் போவுதுன்னு தெரியாம.கல்யாணம் ஆயி ஒரே வாரத்துல அவ கர்ப்பம் ஆனப்போ,இது ரெண்டாவது மாசம்ன்னு டாக்டர் சொன்னதும் ஆடிப்போய்ட்டாங்க அவ புருஷன் வீட்டுக்காரங்க.எங்க குடும்பத்தையே கேவலப்படுத்திடியேடி பாவின்னு கழுத்தப்பிடிச்சி தள்ளிட்டாங்க. அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தவ,யார்கிட்டயும் எதுவும் பேசாம,அடுத்தநாள் என்ன தனியா கூப்புட்டுஅந்த சாமியாரப் பாக்கப் போன எடத்துலதாண்டா தம்பி எனக்கு என்னவோ ஆயிருக்குன்னு சொல்லி அழுதா.எனக்கு ரத்தம் கொதிச்சுது.ஆனா அப்போதைக்கு அவ வாழ்க்கைக்கு என்ன வழின்னு யோசனைதான் இருந்திச்சி. அதுக்குள்ள அவ தொங்கிட்டாய்யா.தாலி மஞ்சள் காயறதுக்குள்ளயே பாவி செத்துபோய்ட்டா. அன்னிக்குத்தாண்டா நெனைச்சேன் எப்படியாவது உன் வேஷத்தக் கலைச்சு இனிமேலும் எந்த சகோதரிக்கும் இந்த நிலைமை வரவிடக்கூடாதுன்னு.இப்ப கூட உன்ன என்னால கொல்ல முடியும். ஆனா நீ ஒருத்தன் செத்துபோய்ட்டா இன்னொருத்தன் உன் வாரிசா வருவான். அதுவுமில்லாம உனக்கு ஒரு கோவில் கட்டி கும்புட ஆரம்பிச்சுடுவாங்க இந்த அறிவில்லாத ஜனங்க.இப்பஎத்தனை லட்சம் பேரு இதை பாத்துக்கிட்டிருப்பாங்க.அவங்க எல்லாருக்கும்உறைக்கும்,அவங்க செஞ்சது எத்தனை பெரிய தப்புன்னு.இன்னொருத்தன் கிட்ட ஏமாற்றதுக்கு முன்னால கண்டிப்பா யோசிப்பாங்க. அதுதான் எனக்கு வேனும். சொல்லிவிட்டு பக்கத்தில் துப்பாக்கியில் கையை வைத்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்த காவலதிகாரியிடம் திரும்பி வாங்க சார். இப்ப உங்க கடமையை செய்யுங்க. என்றான்.
அரங்கத்தில் ஒரு திடீர் பரபரப்பு..சிங்காரஅடிகளார்வந்துவிட்டார்.பக்தர்களின்
ஓம் கோஷம் அரங்கத்தையே அதிரவைத்தது.அடிகளார் எண்னை மண்டி செட்டியார் போல,வயிற்றை மட்டும் உரம் போட்டு வளர்த்து வைத்திருந்தார்.சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு மெல்ல நகர்ந்து மேடையை அடைந்தார். மேடையின் நடுவில் பிரம்மாண்டமான இருக்கையில் சென்று அமர்ந்தார்.பக்தர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி அடிகளாரின் ஆசியை பெற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு ஒருவனாய் மேடையேறிய ஒரு இளைஞன் திடீரென்று அடிகளாரின் அருகில் சென்று அவர் கையை தன் கையுடன் விலங்கால் பிணைத்துக் கொண்டான். அரங்கமே அதிர்ச்சியில் அமைதியானது. அடிகளார் சுத்தமாக ஆடிப்போய்விட்டது அவரின் நடுக்கத்திலேயே தெரிந்தது.என்ன அவன் நோக்கம் என்று தெரியாமல் அதிர்ச்சியில் அசையாது நின்றுவிட்டார்.
இளைஞன் பேசத்தொடங்கினான்" அரங்கத்தில் இருக்கிற எல்லோரும் கொஞ்சம் என்னை கவனிங்க. என் உடம்பை சுத்தி பாம் வெச்சிருக்கேன். இதோ கையில இருக்கிற ரிமோட்ட அழுத்தினா அடிகளார் ஆட்டம் குளோஸ். எனக்குத்தேவை பணமோ வேற எந்த பொருளோ கிடையாது. உண்மை, வெறும் உண்மை. அதுதான் வேணும். இந்த அடிகளாரைப் பத்தின உண்மை அதுவும் அவரோட வாயாலயே சொல்லனும். ஓடிக்கிட்டிருகிற கேமரா எதையும் அனைக்கக் கூடாது.இந்த நல்லவரோட உண்மையான முகம் எதுன்னு இப்ப பாத்துக்கிட்டிருக்கிற எல்லாரும் தொடர்ந்து பாக்கனும்." பேசி விட்டு அடிகளாரைப் பார்த்து 'ம்..சொல்லு" என்றான்.
'எதை சொல்லச் சொல்ற' குழப்பமாய் கேட்ட அடிகளாரைப் பார்த்து
"உன்னப் பத்தி,நீ யாரு எப்படி இப்ப இருக்கிற இந்த நிலைக்கு வந்த,திரை மறைவில என்ன செஞ்சுக்கிட்டிருக்க எல்லாம்..எல்லாம் சொல்லு ஹீம்" மிரட்டலான தொனியில் அவன் சொன்னதும் எதைச் சொல்வது என்று சிறிதுயோசித்து விட்டு" இங்க பாருப்பா நான் ரொம்ப சாதாரணமானவன். இறைப்பணி செய்யறதுதான் எனக்கு இறைவன் இட்ட கட்டளை.என்னை ஏதோ குற்றவாளி மாதிரி கேக்கறியே என்னன்னு சொல்ல" வழக்கமாய் பக்தர்களை வசியம் செய்ய உபயோகிக்கும் அதே தந்திர பேச்சை அப்போதும் உபயோகப்படுத்தினார்.
இந்த நடிப்பை வெச்சுத்தான இத்தனை பேர நம்ப வெச்சிருக்கெ..இப்ப எனக்குத்தேவை
உண்மை....சொல்லு அடிக்குரலில் அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் பார்வையை ரிமோட்டுக்கு கொண்டு சென்றதைப் பார்த்ததும் பதறிக்கொண்டு,
சொல்லிடறேன் ஒண்ணும் பண்ணிடாதே..அலறி விட்டு.....எங்கிருந்து தொடங்குவது என்று சிறிது தயங்கி....பின் சொல்லத்தொடங்கினார்.
30 வருஷத்துக்கு முன்ன எங்க கிராமத்துல நானும் இன்னும் நாலு கூட்டாளிங்களும் சேர்ந்து ஆடு மாடு திருடிக்கிட்டிருந்தோம்.அப்படி திருடப்போனப்ப ஒரு தடவை ஊர்காரங்க பாத்துட்டாங்க. அவங்ககிட்ட மாட்டிக்காம ஓடி வந்தப்ப,பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தவங்ககிட்டருந்து தப்பிக்கறதுக்காக நாங்க அஞ்சு பேரும் வேற வேற திசையில ஓட ஆரம்பிச்சோம். நான் மட்டும் ஓடிப்போய் அங்க இருந்த சின்ன அம்மன் கோயிலுக்குள்ள கதவை உள் பக்கமா தாப்பா போட்டுக்கிட்டு உக்காந்துட்டேன்.தொரத்திக்கிட்டு வந்தவங்க கொஞ்ச நேரம் வெளியில உக்காந்து பாத்துட்டு திரும்பி போய்ட்டாங்க. சரி போய்ட்டாங்கன்னு நெனைச்சுட்டு வெளியில வந்தா இன்னும் நாலு பேரை கூட்டிகிட்டு வந்துகிட்டு இருந்தாங்க.பயந்துபோய் மறுபடியும் உள்ளப் போயிட்டேன். ரெண்டு நாள் உள்ளயே இருந்தேன். அதுக்கப்பறம் தாக்குப்பிடிக்க முடியாம வெளியில வந்தவன்,உள்ள இருக்கும்போதே யோசிச்சி வெச்ச படி அருள் வந்த மாதிரி நடிச்சேன். ஆத்தா எனக்குள்ள எறங்கிட்டான்னு சொல்லி நான் ஆடுன ஆட்டத்துல அந்த அப்பாவிங்களும் நம்பிட்டாங்க. அப்பதான் எனக்கு தோனுச்சி,இனிமே சின்ன சின்னதா திருடி பொழைக்கறத விட இத வெச்சே பணம் சம்பாதிக்கலாங்கற எண்னம். கூட்டாளிங்கள வெச்சு ஆடு மாடுங்கள திருடச்சொல்லி வேற ஊருங்கள்ல ஒளிச்சு வெக்கச் சொல்லி,நான் அருள் வந்து குறி சொல்லி அதுங்க இருக்கிற எடத்த காமிச்சுக் கொடுத்தேன். கிராமத்து ஜனங்க அத உண்மைன்னு நம்பி காணிக்கை குடுத்து குறி கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் அந்த கோவில்லயே உக்காந்து என் தொழில செய்ய ஆரம்பிச்சேன். நெறைய பணம் சேர ஆரம்பிச்சதும் என்னோட கிரிமினல் புத்திய உபயோகிச்சி ஒரு இயக்கமா தொடங்கி,வேற வேற ஊர்ல இருந்த என்னோட கூட்டாளி களவானிப் பசங்களையெல்லாம் அந்தந்த ஊருக்கு அமைப்பாளரப் போட்டு எல்லா ஊர் ஜனங்களையும் ஏமாத்தி பணம் சேத்தோம். அதுல அந்த பயலுங்களுக்கு 20 பர்செண்டு எனக்கு மீதின்னு பிரிச்சிக்கிட்டோம்.
கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தன் சித்து வேலை சரித்திரத்தை தொடர்ந்தார்.
பணம் அதிகமா சேர ஆரம்பிச்சதும் இந்த அரசியல்வாதிங்களும்,அரசாங்க அதிகாரிகளும் தொல்லை கொடுக்க தொடங்கிட்டாங்க.அவனுங்கள கைக்குள்ள போட்டுக்கறதுக்காக என் அமைப்புக்கு ஆசி வாங்க வர்ற குடும்ப பொம்பளைங்கள தீர்த்தம்ன்னு சொல்லி போதை மருந்த கலந்து குடுத்து,மயக்கமா இருக்கும்போதே அந்த பெரிய மனுஷனுங்களுக்கு சப்ளை பன்னேன். அதுக்கப்பறந்தான் பணம் கொட்ட ஆரம்பிச்சிச்சு.இப்ப என்கிட்ட 2000 கோடி இருக்கு.நம்ம நாட்டு ஜனங்கள ஆன்மீகத்தால ஏமாத்துறது ரொம்ப சுலபம். சொல்லிவிட்டு இன்னும் என்ன வேனும் என்பது போல அவனைப் பார்த்தார்.
யோவ் பன்னாடை,இப்ப சொன்னியே குடும்பப் பொம்பளைங்கள சப்ளை பன்னேன்னு அதுல ஒருத்திதான்யா எங்க அக்கா. உன்னையும் ஒரு சாமியார்ன்னு நெனைச்சு வந்தவள நாசப்படுத்திட்ட. அங்கருந்து திரும்பி வந்தப்பவே ஒரு மாதிரியாத்தான் இருந்தா.இன்னும் ஒருமாசத்துல கல்யாணம் நிச்சயிச்சிருந்தாங்க அவளுக்கு.அந்த சந்தோஷத்துல அவளுக்கு என்ன ஆச்சுங்கறதையே மறந்துட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தா.அவ வாழ்க்கையே சிரிப்பா சிரிக்கப் போவுதுன்னு தெரியாம.கல்யாணம் ஆயி ஒரே வாரத்துல அவ கர்ப்பம் ஆனப்போ,இது ரெண்டாவது மாசம்ன்னு டாக்டர் சொன்னதும் ஆடிப்போய்ட்டாங்க அவ புருஷன் வீட்டுக்காரங்க.எங்க குடும்பத்தையே கேவலப்படுத்திடியேடி பாவின்னு கழுத்தப்பிடிச்சி தள்ளிட்டாங்க. அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தவ,யார்கிட்டயும் எதுவும் பேசாம,அடுத்தநாள் என்ன தனியா கூப்புட்டுஅந்த சாமியாரப் பாக்கப் போன எடத்துலதாண்டா தம்பி எனக்கு என்னவோ ஆயிருக்குன்னு சொல்லி அழுதா.எனக்கு ரத்தம் கொதிச்சுது.ஆனா அப்போதைக்கு அவ வாழ்க்கைக்கு என்ன வழின்னு யோசனைதான் இருந்திச்சி. அதுக்குள்ள அவ தொங்கிட்டாய்யா.தாலி மஞ்சள் காயறதுக்குள்ளயே பாவி செத்துபோய்ட்டா. அன்னிக்குத்தாண்டா நெனைச்சேன் எப்படியாவது உன் வேஷத்தக் கலைச்சு இனிமேலும் எந்த சகோதரிக்கும் இந்த நிலைமை வரவிடக்கூடாதுன்னு.இப்ப கூட உன்ன என்னால கொல்ல முடியும். ஆனா நீ ஒருத்தன் செத்துபோய்ட்டா இன்னொருத்தன் உன் வாரிசா வருவான். அதுவுமில்லாம உனக்கு ஒரு கோவில் கட்டி கும்புட ஆரம்பிச்சுடுவாங்க இந்த அறிவில்லாத ஜனங்க.இப்பஎத்தனை லட்சம் பேரு இதை பாத்துக்கிட்டிருப்பாங்க.அவங்க எல்லாருக்கும்உறைக்கும்,அவங்க செஞ்சது எத்தனை பெரிய தப்புன்னு.இன்னொருத்தன் கிட்ட ஏமாற்றதுக்கு முன்னால கண்டிப்பா யோசிப்பாங்க. அதுதான் எனக்கு வேனும். சொல்லிவிட்டு பக்கத்தில் துப்பாக்கியில் கையை வைத்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்த காவலதிகாரியிடம் திரும்பி வாங்க சார். இப்ப உங்க கடமையை செய்யுங்க. என்றான்.