PDA

View Full Version : மறுக்கின்றாய்



இனியவள்
29-07-2007, 05:52 AM
மொட்டுக்களின் மறைவு
பூக்களின் உதயம்
பூக்களின் மறைவு
கனிகளின் உதயம்
கனிகளின் மறைவு
விதைகளின் உதயம்
விதைகளின் மறைவு
மரங்களின் உதயம்...

சூரியனின் மறைவு
நிலவின் உதயம்
நிலவின் மறைவு
சூரியனின் உதயம்...

ஒன்று மறைய இன்னொன்று
உதயமாவாது இயற்கையின்
விந்தை...

மானிடா நீ மட்டும் ஏன்
மறைந்ததை நினைத்து
உதயத்தை நினைக்க
மறுக்கின்றாய்...

விகடன்
29-07-2007, 05:53 AM
உதயமும் நாளை மறைந்துவிடுமல்லவா?

இனியவள்
29-07-2007, 05:56 AM
உதயமும் நாளை மறைந்துவிடுமல்லவா?

உலகில் எதுவும் நிரந்தரமில்லையே

கடந்ததை நினைத்து
வாழ்வைக் கெடுப்பது
ஏன் ??

நான் சொல்ல வந்த கருத்து அது தான்...

அமரன்
29-07-2007, 09:10 AM
நல்ல கருத்தை சொல்லும் கவிதை..பாராட்டுக்கள்.இனியவள்.

ரிஷிசேது
29-07-2007, 10:43 AM
கவிதை அருமை பாராட்டுகள்

சிவா.ஜி
29-07-2007, 11:06 AM
ஓன்று மறைந்து ஒன்று உதயமாவது இயற்கையின் விந்தை மட்டுமல்ல அதுதான் இயற்கையின் நியதியும். உணர்ந்து கொண்டால் வாழ்வில் இன்பமே. நல்ல கருத்துடன் களமிறங்கியிருக்கும் இனியவளுக்கு பாராட்டுக்கள்.

விகடன்
29-07-2007, 11:27 AM
உலகில் எதுவும் நிரந்தரமில்லையே

கடந்ததை நினைத்து
வாழ்வைக் கெடுப்பது
ஏன் ??

நான் சொல்ல வந்த கருத்து அது தான்...

அட என்னங்க இதுக்குப்போய் இப்படி கோவிச்சுக்கிறீங்க.
சும்ம ஒரு தொடரிற்கு எழுதினேங்க.

உங்கள் கவிதை :icon_good: :icon_good: :icon_good:

இனியவள்
29-07-2007, 12:40 PM
நல்ல கருத்தை சொல்லும் கவிதை..பாராட்டுக்கள்.இனியவள்.

நன்றி அமர்

இனியவள்
29-07-2007, 12:41 PM
கவிதை அருமை பாராட்டுகள்

நன்றி ரிஷி

இனியவள்
29-07-2007, 12:42 PM
ஓன்று மறைந்து ஒன்று உதயமாவது இயற்கையின் விந்தை மட்டுமல்ல அதுதான் இயற்கையின் நியதியும். உணர்ந்து கொண்டால் வாழ்வில் இன்பமே. நல்ல கருத்துடன் களமிறங்கியிருக்கும் இனியவளுக்கு பாராட்டுக்கள்.

நன்றி சிவா....

இனியவள்
29-07-2007, 12:43 PM
அட என்னங்க இதுக்குப்போய் இப்படி கோவிச்சுக்கிறீங்க.
சும்ம ஒரு தொடரிற்கு எழுதினேங்க.
உங்கள் கவிதை :icon_good: :icon_good: :icon_good:

அட இதுக்கு பெயர் கோபம் இல்லைங்க

அரசன்
29-07-2007, 02:09 PM
அச்சோ... சூப்பர் கவிதை இனி. உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள்.

இனியவள்
29-07-2007, 03:03 PM
அச்சோ... சூப்பர் கவிதை இனி. உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள்.

நன்றி மூர்த்தி

நலமா மூர்த்தி
கொஞ்ச நாட்களாய் காணவில்லையே உங்களை