ரிஷிசேது
28-07-2007, 02:55 PM
இங்கு
கூர்முனை இலை மரங்களில்
முட்கள் இல்லை பூக்களுமில்லை
நகரா பொழுதுகளில்
தொலைப்பதற்கோ, தேடுவதற்கோ
எதுவுமில்லை.
அம்மாவின் மடிவாசமோ
ஐப்பசி மழை மண்வாசமோ இல்லை
அங்கு
இந்நேரம் மழை பெய்திருக்கும்
குடுகுடுப்பைக்காரன் கொடுத்துப்போன பயத்தை
குரங்காட்டியோ, பூம்பூம் மாட்டுக்காரனோ
எடுத்துப்போயிருப்பான்
நீ
வாய்க்கு ருசியாய் ஓர்
காரப்பொறியோ, கடலையோ அல்லது
வடாமோ கொறித்துக்கொண்டிருப்பாய்
சாயங்காலம் வந்த விருந்தாளியாய்
மழை தொடர்ந்திருக்கும்
நாய்கள் சுருட்டிப் படுத்திருக்கும்
அவ்விரவில் நட்சத்திரமோ ஆடும்
வேப்பமர இலையிடுக்கில் நுழைந்துவிடும்
நிலாவொளியோ இல்லாமல்
வெட்டுமின்னல் இடியில்- என்றும்
துணைக்கு வாரா அர்சுனனை
அழைத்துக்கொண்டிருப்பாய்
இங்கு
எந்த அறிவிப்புமின்றி
வந்துபோகும் மழையோ
கீறும் மின்னலோ- அர்சுனனம் வாரா
கடுமிடியோ-
ரசிப்பாயில்லை. ரசிப்பாருமில்லை.
அங்கு
நீ முடிந்த மழையை திட்டிக்கொண்டோ
வடியா நீரை கம்புவைத்து குத்திக்கொண்டோ
காயாத்துணிகளை உதறிக்கொண்டோ
மழை மொள்ளப்போகும் மேகங்களை
கடிந்து கொண்டோயிருப்பாய்
இங்கு
கூர்முனை இலை மரங்களில்
முட்களில்லை பூக்களுமில்லை
குடுகுடுப்பைக்காரனோ குரங்காட்டியோ இல்லை
கூர்முனை இலை மரங்களில்
முட்கள் இல்லை பூக்களுமில்லை
நகரா பொழுதுகளில்
தொலைப்பதற்கோ, தேடுவதற்கோ
எதுவுமில்லை.
அம்மாவின் மடிவாசமோ
ஐப்பசி மழை மண்வாசமோ இல்லை
அங்கு
இந்நேரம் மழை பெய்திருக்கும்
குடுகுடுப்பைக்காரன் கொடுத்துப்போன பயத்தை
குரங்காட்டியோ, பூம்பூம் மாட்டுக்காரனோ
எடுத்துப்போயிருப்பான்
நீ
வாய்க்கு ருசியாய் ஓர்
காரப்பொறியோ, கடலையோ அல்லது
வடாமோ கொறித்துக்கொண்டிருப்பாய்
சாயங்காலம் வந்த விருந்தாளியாய்
மழை தொடர்ந்திருக்கும்
நாய்கள் சுருட்டிப் படுத்திருக்கும்
அவ்விரவில் நட்சத்திரமோ ஆடும்
வேப்பமர இலையிடுக்கில் நுழைந்துவிடும்
நிலாவொளியோ இல்லாமல்
வெட்டுமின்னல் இடியில்- என்றும்
துணைக்கு வாரா அர்சுனனை
அழைத்துக்கொண்டிருப்பாய்
இங்கு
எந்த அறிவிப்புமின்றி
வந்துபோகும் மழையோ
கீறும் மின்னலோ- அர்சுனனம் வாரா
கடுமிடியோ-
ரசிப்பாயில்லை. ரசிப்பாருமில்லை.
அங்கு
நீ முடிந்த மழையை திட்டிக்கொண்டோ
வடியா நீரை கம்புவைத்து குத்திக்கொண்டோ
காயாத்துணிகளை உதறிக்கொண்டோ
மழை மொள்ளப்போகும் மேகங்களை
கடிந்து கொண்டோயிருப்பாய்
இங்கு
கூர்முனை இலை மரங்களில்
முட்களில்லை பூக்களுமில்லை
குடுகுடுப்பைக்காரனோ குரங்காட்டியோ இல்லை