PDA

View Full Version : தவிக்கின்றேன்



இனியவள்
26-07-2007, 07:03 AM
கண்களில் உன்னை சிறைப்பிடித்தேன்
கண்ணீராய் வெளியேறுகின்றாய்....

மூச்சுக்காற்றாய் உன்னை
சுவாசிக்கின்றேன் காபனீரொட்சைட்டாய்
வெளியேறுகின்றாய்.....

கனவுலகத்தில் உன்னோடு
சஞ்சரித்தேன் கானலாய்
போனாய்....

அருவிபோன்று ஓடிக்கொண்டிருந்த
என் வாழ்க்கையில் அணையாய்
வந்து என்னைத் தேக்கிவைத்துவிட்டாய்...

அணையை உடைத்து ஓட
முடியாமல் முட்டி மோதி
தவிக்கின்றேன் உன் நினைவுகளோடு....

lolluvathiyar
26-07-2007, 10:01 AM
நேற்று கூட மாறிய மாதிரி தெரிந்தது திரும்பவும் ஏங்க ஆரம்பிச்சுட்டீங்களே.
அனையாய் வந்து தேக்கி விட்டதா.
முட்டி மோதி தவிக்கும் இனியவளுக்கு அனையை உடைக்கும் ஆற்றல் தர நான் பிராத்திகிறேன்

விகடன்
26-07-2007, 10:04 AM
காட்டாறாக இருந்த இனியவளை இப்படி
கட்டிப்போட்ட பாவி யாரோ?
திரி திரியாய் புலம்புகிறார்!
பரிவுகாட்ட யாருளரோ?

ஷீ-நிசி
26-07-2007, 10:10 AM
பூவின் மீது அம்புகளை எய்து −இன்று
புலம்பல்களை ஒலிக்க செய்தவன் எவனோ?!
பூவின் மீது எய்த அம்புகள் −சீக்கிரம்
பூப்போன்ற அம்புகளாய் மாறி
இனியவளின் இதயத்தினை வருடட்டும்!

அமரன்
26-07-2007, 10:11 AM
அணையாய் வருகையில்
அணைப்பான் எனநினைக்க.
அணையா விளக்காய்
நினைவுகளை இணைத்து
அணைத்துச் சென்றானோ
காதல் விளக்கை..


பாராட்டுக்கள் இனியவள்.


ஷீ கலக்கல் கவிதை.

இனியவள்
26-07-2007, 10:14 AM
ஆளாளுக்கு போட்டு வாங்கிறாங்களே

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்

ஷீ உங்கள் கவி கலக்கல் வாழ்த்துக்கள் :4_1_8:

ஓவியன்
26-07-2007, 11:20 AM
அணை போட்டு
மறித்தால் தானே
அணையாகும் வாழ்விற்கு
ஆற்று நீர்!

அணை போட்டு
மறித்த உங்கள்
காதலும் அணையாகி
வாழ்விற்கு உரம் சேர்க்கட்டும்!.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இனியவள்!.

இனியவள்
26-07-2007, 03:41 PM
நன்றி ஓவியன்