lenram80
24-07-2007, 03:51 PM
என்று உன்னை காதலிக்க ஆரம்பித்தேனோ
அன்றிலிருந்து அனைவருக்கும் ஸ்நேகிதி ஆகி விட்டேனோ?
இப்போதெல்லாம் தூறலைக் கண்டால்
ஒரு துள்ளல் ஆட்டம் போடுகிறேன்!
ஒருவேளை மயில்களுக்கு நண்பி ஆகி விட்டேனோ?
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்!
நீ தூங்கும் போது நான் விழித்து உன் தலை கோதுகிறேன்!
உன்னை சந்திக்கும் சமயம், நான் சொர்க்க பௌர்ணமி!
நீ விடை பெறும் விநாடி, நான் நரக அமாவாசை!
ஒருவேளை நிலவோடு நெருக்கம் ஆகி விட்டேனோ?
உன்னிடம் பேசும் போது
என் கன்னம் சிவக்கிறதே!
என் வார்த்தைகளே எனக்கு இனிக்கிறதே!
ஒருவேளை பழங்களோடு பந்தம் ஆகி விட்டேனோ?
உனக்கும் நான் எலுமிச்சையாய் தெரிகிறேனா?
என் இதயத்தை இப்படி பிழிந்து எடுக்கிறாயே!
அன்பையே ஆயுதமாக்கி என் அமைதி கெடுக்கிறாயே!
பாசத்தையே பாசக்கயிறாக்கி என் உயிர் எடுக்கிறாயே!
நீயும் நானும் பேருந்தில் சென்ற போது
"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?" எங்கேயோ இருந்து கேட்க
"உனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" உன் காதில் நான் பாட
புருவம் உயர்த்தி ஒரு புன்சிரிப்பு சிரித்தாயே!
என் இதயம் உரித்து என் உயிர் பறித்தாயே!
உனக்கு தெரியுமா?
அந்நாள் வரை எந்த ஆண் மகனும்
எனக்கு அப்படி ஒரு அழகாய் தெரிந்ததில்லை!
என் உணர்வுகளை நான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாய்!
கூடவே இருந்தால் ஏதாவது சண்டை போட்டு இருந்து கொள்வாய்!
அதற்கு நான் சின்னதாய் கோபப்பட்டால், தற்காலிகமாய் பேசாமல் பிரிந்து கொல்வாய்!
நீ எனக்கு மழை மாதிரி!
கூட வந்தாலும் தொல்லை! அறவே வராவிட்டாலும் தொல்லை!
பரவாயில்லை, நீ தானே என் செல்லப் பிள்ளை!
உன் குறட்டை சத்தம் எங்கே என்னை தொல்லைப்படுத்தும்
என்று நீ என்னிடம் வருத்தப் பட்டாய்!
கவலைப்படாதே!
கூட்டல்களை மட்டும் விரும்பினால் அது கவர்ச்சி!
கழித்தல்களையும் சேர்த்து விரும்பினால் தான் அது காதல்!
உன் வளங்களோடு, உன் வற்றல்களையும்
உன் பலங்களோடு, உன் பள்ளங்களையும் காதலிப்பவள் நான்!
ஆக, உன் சத்தங்களோடும் நான் தூங்குவேன்!
உன் குறட்டை சந்தங்களோடும் சேர்ந்து நான் பாடுவேன்!
உஷ்ஷ்ஷ்ஷ்!!!! காதைக் கொடு!
நானும் கொஞ்சம் குறட்டை அடிப்பேன்!
(பொய்யாக)ஆ...வலிக்குது... என்னை அடிக்காதே! :)
ஏனடா! என் ஆரவாரக் காதலா!
என்னுடன் நீ செய்வது கலவரக் காதலா?
அன்றிலிருந்து அனைவருக்கும் ஸ்நேகிதி ஆகி விட்டேனோ?
இப்போதெல்லாம் தூறலைக் கண்டால்
ஒரு துள்ளல் ஆட்டம் போடுகிறேன்!
ஒருவேளை மயில்களுக்கு நண்பி ஆகி விட்டேனோ?
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்!
நீ தூங்கும் போது நான் விழித்து உன் தலை கோதுகிறேன்!
உன்னை சந்திக்கும் சமயம், நான் சொர்க்க பௌர்ணமி!
நீ விடை பெறும் விநாடி, நான் நரக அமாவாசை!
ஒருவேளை நிலவோடு நெருக்கம் ஆகி விட்டேனோ?
உன்னிடம் பேசும் போது
என் கன்னம் சிவக்கிறதே!
என் வார்த்தைகளே எனக்கு இனிக்கிறதே!
ஒருவேளை பழங்களோடு பந்தம் ஆகி விட்டேனோ?
உனக்கும் நான் எலுமிச்சையாய் தெரிகிறேனா?
என் இதயத்தை இப்படி பிழிந்து எடுக்கிறாயே!
அன்பையே ஆயுதமாக்கி என் அமைதி கெடுக்கிறாயே!
பாசத்தையே பாசக்கயிறாக்கி என் உயிர் எடுக்கிறாயே!
நீயும் நானும் பேருந்தில் சென்ற போது
"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ?" எங்கேயோ இருந்து கேட்க
"உனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" உன் காதில் நான் பாட
புருவம் உயர்த்தி ஒரு புன்சிரிப்பு சிரித்தாயே!
என் இதயம் உரித்து என் உயிர் பறித்தாயே!
உனக்கு தெரியுமா?
அந்நாள் வரை எந்த ஆண் மகனும்
எனக்கு அப்படி ஒரு அழகாய் தெரிந்ததில்லை!
என் உணர்வுகளை நான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாய்!
கூடவே இருந்தால் ஏதாவது சண்டை போட்டு இருந்து கொள்வாய்!
அதற்கு நான் சின்னதாய் கோபப்பட்டால், தற்காலிகமாய் பேசாமல் பிரிந்து கொல்வாய்!
நீ எனக்கு மழை மாதிரி!
கூட வந்தாலும் தொல்லை! அறவே வராவிட்டாலும் தொல்லை!
பரவாயில்லை, நீ தானே என் செல்லப் பிள்ளை!
உன் குறட்டை சத்தம் எங்கே என்னை தொல்லைப்படுத்தும்
என்று நீ என்னிடம் வருத்தப் பட்டாய்!
கவலைப்படாதே!
கூட்டல்களை மட்டும் விரும்பினால் அது கவர்ச்சி!
கழித்தல்களையும் சேர்த்து விரும்பினால் தான் அது காதல்!
உன் வளங்களோடு, உன் வற்றல்களையும்
உன் பலங்களோடு, உன் பள்ளங்களையும் காதலிப்பவள் நான்!
ஆக, உன் சத்தங்களோடும் நான் தூங்குவேன்!
உன் குறட்டை சந்தங்களோடும் சேர்ந்து நான் பாடுவேன்!
உஷ்ஷ்ஷ்ஷ்!!!! காதைக் கொடு!
நானும் கொஞ்சம் குறட்டை அடிப்பேன்!
(பொய்யாக)ஆ...வலிக்குது... என்னை அடிக்காதே! :)
ஏனடா! என் ஆரவாரக் காதலா!
என்னுடன் நீ செய்வது கலவரக் காதலா?