ро░ро┐ро╖ро┐роЪрпЗродрпБ
21-07-2007, 01:43 PM
எல்லாக் கதவுகளும்
மூடியே தானிருக்கிறது
கதவினை தட்டும்போது
பயம் கலந்த எதிர்பார்ப்புмண்டு
யாரெனும் தெரிந்தவராயுமிருக்கலாம் - தட்டுவது
சந்தேகம் தீர்க்க சின்ன துளைபோட்டு
கதவினிலே கண்பார்வை கண்ணாடியும்
வைத்தாயிற்று - தட்டுவது யாரெனப் பார்க்க.
யார் மீதும் நம்பிக்கையில்லை
எதிர் வீடு பக்கத்து வீடென
யார் மீதும் நம்பிக்கையில்லை
மனைவி சொல்வது போல்
எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?
ஒவ்வொரு முறையும்
எதிர்வீட்டுக் கதவு
தட்டப்படும்போதோ
திறக்கப்படும்போதோ
என்னையும் மீறி
என் பார்வை நீளும்
அவர்கள் வீட்டின
திறக்கப்படாத
அந்தரங்கமறிய ..
அவர்களின் அனுமதியின்றி
அவ்வப்போது வெளியே
போய் திரும்பும் மகனை
கடிந்து கொள்கிறாள்
இன்னுமொரு திறக்கப்படாத
கதவினையுடைய
பக்கத்து வீட்டுக்காரி..
அலுவலகத்திலிருந்து
முன்னதாக வீடு திரும்பிய நான் இன்னும் அனுமதிக்கப்படவேயில்லை
என் வீட்டிற்குள்..
மனைவி கதவில் பொருத்தப்பட்ட சிறுகண்ணாடி வழியே பார்த்த பின்னும்
என் செல்லில் பேசி சந்தேகம் தீர்ந்த பின்
கதவு திறக்கையில்,
சந்தோஷமாய் வெளியேறிற்று
புழுக்கமாய் அடைபட்டிருந்த காற்று ..
நகரங்கள் இன்னமும்
ஒரு நம்பிக்கையின்
வரையறைக்குள்
வரவியலாத நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கும்
சூழ்நிலையில் ..
கிராமங்களில்
இன்னமும்
சில வீடுகளுக்கு
கதவுகளேயில்லை என்பதும்
யார் வரினும்
தலைமுறைகளை
நினைவு கூறும் பெரிசுகளும்
பிரியங்கள் நிறைந்த
பாஷையில் தரும்
வர்ணிக்கவியலா பாதுகாப்பை
நகரத்தின்
கிரீச்சிடும் கதவுகளும்
துருப்பிடித்த தாட்பாளும்
கேள்விக்குறியாக்கி
தனித்தீவை உருவாக்குவதில்
எனக்குடன்பாடில்லை
தைரியமிருந்தால் வாருங்கள்
என் பக்கத்து, எதிர்வீட்டு
நண்பர்களே
உடைத்தெரிவோம்
கதவுகளை ..
மூடியே தானிருக்கிறது
கதவினை தட்டும்போது
பயம் கலந்த எதிர்பார்ப்புмண்டு
யாரெனும் தெரிந்தவராயுமிருக்கலாம் - தட்டுவது
சந்தேகம் தீர்க்க சின்ன துளைபோட்டு
கதவினிலே கண்பார்வை கண்ணாடியும்
வைத்தாயிற்று - தட்டுவது யாரெனப் பார்க்க.
யார் மீதும் நம்பிக்கையில்லை
எதிர் வீடு பக்கத்து வீடென
யார் மீதும் நம்பிக்கையில்லை
மனைவி சொல்வது போல்
எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?
ஒவ்வொரு முறையும்
எதிர்வீட்டுக் கதவு
தட்டப்படும்போதோ
திறக்கப்படும்போதோ
என்னையும் மீறி
என் பார்வை நீளும்
அவர்கள் வீட்டின
திறக்கப்படாத
அந்தரங்கமறிய ..
அவர்களின் அனுமதியின்றி
அவ்வப்போது வெளியே
போய் திரும்பும் மகனை
கடிந்து கொள்கிறாள்
இன்னுமொரு திறக்கப்படாத
கதவினையுடைய
பக்கத்து வீட்டுக்காரி..
அலுவலகத்திலிருந்து
முன்னதாக வீடு திரும்பிய நான் இன்னும் அனுமதிக்கப்படவேயில்லை
என் வீட்டிற்குள்..
மனைவி கதவில் பொருத்தப்பட்ட சிறுகண்ணாடி வழியே பார்த்த பின்னும்
என் செல்லில் பேசி சந்தேகம் தீர்ந்த பின்
கதவு திறக்கையில்,
சந்தோஷமாய் வெளியேறிற்று
புழுக்கமாய் அடைபட்டிருந்த காற்று ..
நகரங்கள் இன்னமும்
ஒரு நம்பிக்கையின்
வரையறைக்குள்
வரவியலாத நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கும்
சூழ்நிலையில் ..
கிராமங்களில்
இன்னமும்
சில வீடுகளுக்கு
கதவுகளேயில்லை என்பதும்
யார் வரினும்
தலைமுறைகளை
நினைவு கூறும் பெரிசுகளும்
பிரியங்கள் நிறைந்த
பாஷையில் தரும்
வர்ணிக்கவியலா பாதுகாப்பை
நகரத்தின்
கிரீச்சிடும் கதவுகளும்
துருப்பிடித்த தாட்பாளும்
கேள்விக்குறியாக்கி
தனித்தீவை உருவாக்குவதில்
எனக்குடன்பாடில்லை
தைரியமிருந்தால் வாருங்கள்
என் பக்கத்து, எதிர்வீட்டு
நண்பர்களே
உடைத்தெரிவோம்
கதவுகளை ..