இனியவள்
21-07-2007, 06:48 AM
புல்நுனிப் பனித்துளிபோல்
உன் உதட்டோரத்தில் ஒரு நொடி
அரும்பும் புன்னகை கண்டு
சிறகு முளைக்கும் பறவை
போல் ஆகாயத்தை அடைய
பறக்கின்றேன்....
பட்டாம் பூச்சியின் வர்ணங்கள்
உன்னோடு சென்று விட நிறங்கள்
இன்றி தவிக்கின்றன....
பூக்களின் வாசனை உன் கூந்தலோடு
சங்கமிக்க வாசனையின்றி வாடுகின்றன
மலர்கள்....
பசுமை தன் குளிர்மையைத்
உனக்கு தத்துக்கொடுக்க உன்
கண்கள் அள்ளித் தருகின்றன
இனிமையை....
குயில்கள் தனது குரலை உனக்கு
தாரைவார்த்து இன்னொர் குரலைத்
தேடி நான்குலோகம் அலைகின்றன...
மயில்கள் தனது ஓய்யார நடனத்தை
உனக்குத் தந்து உனது விசிறியாய்
மாறி உன் நாட்டியத்தை இமை
வெட்டாது ரசிக்கின்றன....
கடவுள் படைத்த அனைத்தும்
தன்னிடம் உள்ள சிறப்பைத் தர
என்னிடம் உள்ள ஒரே சிறப்பான
உயிரை தாரை வார்க்கின்றேன்
உன் உயிரோடு..........
உன் உதட்டோரத்தில் ஒரு நொடி
அரும்பும் புன்னகை கண்டு
சிறகு முளைக்கும் பறவை
போல் ஆகாயத்தை அடைய
பறக்கின்றேன்....
பட்டாம் பூச்சியின் வர்ணங்கள்
உன்னோடு சென்று விட நிறங்கள்
இன்றி தவிக்கின்றன....
பூக்களின் வாசனை உன் கூந்தலோடு
சங்கமிக்க வாசனையின்றி வாடுகின்றன
மலர்கள்....
பசுமை தன் குளிர்மையைத்
உனக்கு தத்துக்கொடுக்க உன்
கண்கள் அள்ளித் தருகின்றன
இனிமையை....
குயில்கள் தனது குரலை உனக்கு
தாரைவார்த்து இன்னொர் குரலைத்
தேடி நான்குலோகம் அலைகின்றன...
மயில்கள் தனது ஓய்யார நடனத்தை
உனக்குத் தந்து உனது விசிறியாய்
மாறி உன் நாட்டியத்தை இமை
வெட்டாது ரசிக்கின்றன....
கடவுள் படைத்த அனைத்தும்
தன்னிடம் உள்ள சிறப்பைத் தர
என்னிடம் உள்ள ஒரே சிறப்பான
உயிரை தாரை வார்க்கின்றேன்
உன் உயிரோடு..........