ரிஷிசேது
20-07-2007, 03:31 PM
இது இலையுதிர் காலம்
இங்கு மரங்கள்
மொட்டையாய்...
நீதிபதியாய் இருந்தவராம்
மகன்கள் மூன்றுண்டாம்
இருவர் வெளிநாட்டில்
மூன்றாமவன்
கொண்டுவிட்டான்
பைத்தியமென்று
இவர் அவனை பைத்தியமென்கிறார்...
நீ சொல்வாயே
குதிரை ஓட்டும் போது
லகான்களை மட்டுமல்ல
சாட்டையையும்
பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டுமென்று...
நான் சாட்டையைத் தொலைத்துவிட்டு
குதிரையை ஓட்டிக்கொண்டிருந்தேன்....
இரயில் எஞ்சின் ஓட்டுபவராம்
பிள்ளைகள் இரண்டுண்டாம்
இருவரும் சேர்ந்தே கொண்டுவந்துவிட்டார்கள்...
இவர் தண்டவாளங்கள் சேராதவரை
பயணம் இனிதென்கிறார்...
இது இலையுதிர்காலம்
வசந்தத்திற்கு பின்வரும் காலம்
நீ சொல்வாயே
பீஷ்மரை போலொரு தாத்தா
தசரதன் போலொரு தந்தை
பரதன் போலொரு தம்பி
வேண்டுமென்று
எனக்கு அது போலவே
வாய்த்திருந்தது- ஆனால்
நான் வேண்டியது
அபிமன்யு போலொரு
பிள்ளைக்கல்லவா?....
இங்கு எனக்கு எல்லாமே
கிடைக்கிறது...
நல்ல நண்பர்களும் கூட
ஆனாலும் எனக்கு
எதோ வேண்டும்போல் ......
நீ சொல்வாயே
உறவுகளைக் கத்தியைப் போல்
கையாளவேண்டுமென்றும்
உறைக்குள் வைத்திருப்பதில்
பயனில்லை எப்போதும்
பயன்ப்டுத்திக் கொண்டிருக்கவேண்டுமென்றும்...
நான் பயன்படுத்தத் தெரியாமல்
கையையல்லவா
நறுக்கிக்கொண்டேன்....
எப்படியிருக்கிறான்
என் பேரன்
போனமுறை வந்தபோது
சொன்னானென்று
வாங்கி வைத்திருக்கிறேன்
நிறைய இனிப்புகளை...
இது இலையுதிர் காலம்
நீயிப்போது
வசந்தத்திலிருக்கிறாய்
நானும்கூட இப்படியிருந்தவன்தானே
எனக்கு நடப்பதுதான்
உனக்கும் -
இது
சாபமல்ல
எச்சரிக்கை
உன் பிள்ளையை
மகாபாரதம் படிக்கச்சொல்
உனக்கு உதவியாயிருக்கும்......
அப்புறம்....
இது இலையுதிர்காலம்
இங்கு நிழலில்லை
அடிக்கடி இங்கு வந்து
அலையாதே
உனக்கு
வெயில் ஆகாது....
ஏனெனில்
இன்னமும்
நீ
என் மகனல்லவா?......
இங்கு மரங்கள்
மொட்டையாய்...
நீதிபதியாய் இருந்தவராம்
மகன்கள் மூன்றுண்டாம்
இருவர் வெளிநாட்டில்
மூன்றாமவன்
கொண்டுவிட்டான்
பைத்தியமென்று
இவர் அவனை பைத்தியமென்கிறார்...
நீ சொல்வாயே
குதிரை ஓட்டும் போது
லகான்களை மட்டுமல்ல
சாட்டையையும்
பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டுமென்று...
நான் சாட்டையைத் தொலைத்துவிட்டு
குதிரையை ஓட்டிக்கொண்டிருந்தேன்....
இரயில் எஞ்சின் ஓட்டுபவராம்
பிள்ளைகள் இரண்டுண்டாம்
இருவரும் சேர்ந்தே கொண்டுவந்துவிட்டார்கள்...
இவர் தண்டவாளங்கள் சேராதவரை
பயணம் இனிதென்கிறார்...
இது இலையுதிர்காலம்
வசந்தத்திற்கு பின்வரும் காலம்
நீ சொல்வாயே
பீஷ்மரை போலொரு தாத்தா
தசரதன் போலொரு தந்தை
பரதன் போலொரு தம்பி
வேண்டுமென்று
எனக்கு அது போலவே
வாய்த்திருந்தது- ஆனால்
நான் வேண்டியது
அபிமன்யு போலொரு
பிள்ளைக்கல்லவா?....
இங்கு எனக்கு எல்லாமே
கிடைக்கிறது...
நல்ல நண்பர்களும் கூட
ஆனாலும் எனக்கு
எதோ வேண்டும்போல் ......
நீ சொல்வாயே
உறவுகளைக் கத்தியைப் போல்
கையாளவேண்டுமென்றும்
உறைக்குள் வைத்திருப்பதில்
பயனில்லை எப்போதும்
பயன்ப்டுத்திக் கொண்டிருக்கவேண்டுமென்றும்...
நான் பயன்படுத்தத் தெரியாமல்
கையையல்லவா
நறுக்கிக்கொண்டேன்....
எப்படியிருக்கிறான்
என் பேரன்
போனமுறை வந்தபோது
சொன்னானென்று
வாங்கி வைத்திருக்கிறேன்
நிறைய இனிப்புகளை...
இது இலையுதிர் காலம்
நீயிப்போது
வசந்தத்திலிருக்கிறாய்
நானும்கூட இப்படியிருந்தவன்தானே
எனக்கு நடப்பதுதான்
உனக்கும் -
இது
சாபமல்ல
எச்சரிக்கை
உன் பிள்ளையை
மகாபாரதம் படிக்கச்சொல்
உனக்கு உதவியாயிருக்கும்......
அப்புறம்....
இது இலையுதிர்காலம்
இங்கு நிழலில்லை
அடிக்கடி இங்கு வந்து
அலையாதே
உனக்கு
வெயில் ஆகாது....
ஏனெனில்
இன்னமும்
நீ
என் மகனல்லவா?......