PDA

View Full Version : ஊனம்



இனியவள்
20-07-2007, 06:26 AM
தன்னம்பிக்கை உனக்கு
இருந்தால் ஊனத்தைக்
கலைத்துவிடும்...

அவநம்பிக்கை நிலத்தில்
விதைக்கும் விதைபோல்
ஊனத்தை விதைத்துவிடும்
உனக்குள்.....

namsec
20-07-2007, 06:34 AM
அவநம்பிக்கை உள்ள ஒவ்வொரு மனிதனும் ஊனமுற்றவன் என்பதை உணர்த்துகிறது உங்களின் கவிதை

அக்னி
20-07-2007, 06:36 AM
முளைக்க முடியாத
அவயவங்களின்..,
மாற்றீடு... தன்னம்பிக்கை...
தழைக்க விடாமல்
அழித்துவிடும்..,
தலையீடு... அவநம்பிக்கை...

சிறந்த கருவில், உண்மையான வரிகள்...
ஆனால், தன்னம்பிக்கையுடன் அங்கவீனத்தை வென்றவர்களை,
நாம் தட்டிக்கொடுக்கின்றோமா..?
என்றால், அது வேதனைக்குரிய விடயமே...

ஷீ−நிசி அவர்களும்
இவர்கள் தவழும் குழந்தைகள்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10645)
என்ற கவிதையில் அங்கவீனமுற்றவர்களுக்கு தேவை என்ன என்பதை மிக அழகாக கூறியிருந்தார்...
அதனையும் இங்கே சுட்டுவது பொருந்தும் என்பதால், இணைக்கின்றேன்...

பாராட்டுக்கள் இனியவளே...

அமரன்
20-07-2007, 08:46 AM
இனியவள் நல்ல கருத்தான கவிதை. பாராட்டுக்கள்.

ஓவியன்
20-07-2007, 01:48 PM
அவ நம்பிக்கைதான் ஊனமென்று உரைத்த இனியவளுக்கு ஒரு சபாஷ்!.

இனியவள்
24-07-2007, 09:31 AM
அவநம்பிக்கை உள்ள ஒவ்வொரு மனிதனும் ஊனமுற்றவன் என்பதை உணர்த்துகிறது உங்களின் கவிதை

நன்றி சித்தரே

இது புரிந்தவர் சிலர்
புரியாதவர் சிலர்
புரிந்தும் புரியாதவர் பலர்

இனியவள்
24-07-2007, 09:31 AM
நன்றி அக்னி

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்

இனியவள்
24-07-2007, 09:32 AM
இனியவள் நல்ல கருத்தான கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி அமர்


அவ நம்பிக்கைதான் ஊனமென்று உரைத்த இனியவளுக்கு ஒரு சபாஷ்!.

நன்றி ஓவியன்

சிவா.ஜி
24-07-2007, 09:40 AM
ஊனம் மனதில் இல்லை உடலில் மட்டும்தான். அதை தன்னம்பிக்கையால்
வென்றுவிடலாம். அருமையான கருத்து இனியவள். பாராட்டுக்கள்.

இனியவள்
24-07-2007, 07:39 PM
ஊனம் மனதில் இல்லை உடலில் மட்டும்தான். அதை தன்னம்பிக்கையால்
வென்றுவிடலாம். அருமையான கருத்து இனியவள். பாராட்டுக்கள்.

நன்றி சிவா..

விகடன்
02-08-2007, 04:16 AM
அழகான வரிகள். இனியவள்.

இன்னொன்றும் சொல்லுவார்கள்.
களவு எடுத்தவனுக்கு ஒரு தண்டனையாம் ஆனால் களவு கொடுத்தவனுக்கு ஆயிரம் தண்டனையாம்.


ஏனெனில் களவு எடுத்தவன் செய்த பாவம் களவு என்றதே. ஆனால் களவு கொடுத்தவன் இருக்கும் எல்லார் மீதும் சந்தேகித்து அனைவரது பாவத்தையும் சேர்க்கிறாம்.