ரிஷிசேது
19-07-2007, 07:10 PM
அப்பா எப்படி இருக்கிறீர்கள்?
கூட்டுப்புழுவை ரசித்தபடி
ஆரம்பித்த நம் சினேகம்
மீட்டர்பெட்டியில் கட்டிய
குருவிக்கூட்டைக் கலைத்ததில்
முடிந்துபோனது-பின் நாம்
அப்பா பிள்ளைகளானோம்....
அப்பா ஞாபகமிருக்கிறதா?
நடுங்கும் பயத்தோடு
தவளை தின்னும் பாம்பை
அருகிருந்து படம்பிடித்தோமே
அந்த அசாத்திய தைரியம் இப்போது
எனக்குக் கொஞ்சம் விட்டுத்தான் போயிற்று
நீங்களில்லாது....
அலையடித்த ஈரம் காய்வதற்குள்
கவிதை சொல்லும்
போட்டி வைத்துக்கொள்வோமே
அதில்தான் நான்
கவிதைச்சூத்திரம் கற்றேன்...
இப்போது கவிதைசொல்லிகளிடம்
போட்டியிட அதுதான் உதவுகிறது
உங்களுக்கு உடன்பாடில்லா
என் கவிதைகளைத்தான்
நான் இப்போது விற்றுக்கொண்டிருக்கிறேன்
உடைந்த பலூன் வைத்து விளையாட முயலும்
பலூன்காரனின் குழந்தைகள் போல...
அம்மாவின் பட்டுப்புடவையில்
நீங்கள் வண்ணம் ரசித்தபோது
நான் அதில் நெளியும்
செத்தபுழுக்களின்
நைந்த உடல் கண்டேன் -
அப்போதுதான் நீங்களும் நானும்
வேறுபட ஆரம்பித்தோம்
கவிதைகளாலும்...
அப்பா காலம் எவ்வளவு வேடிக்கையானது
பிரிவே இல்லாத உறவுகளே இல்லையா?
ஞாபகமிருக்கிறதா நம்
மொட்டைமாடி இரவுகளும்
சம்பாஷணைகளும்..?
உங்களுக்குப்பிடிக்காத என்
கவிதைகளைப் போலத்தான்
உங்களுக்கு அவளையும் பிடிக்கவில்லை
அவள் அவளுக்குப் பிடித்தவர்களையல்லவா
விட்டு விட்டு வந்திருக்கிறாள்?
நீங்கள் சொல்வீர்களே
எப்போதும் ஆசானாய் இருக்க முயலும்
உறவுகள் வெறுக்கத்தக்கவை - நீயே
உனக்கு ஆசானாயிரு என்று
அதில் எனக்கு சம்மதம்
ஆனால் உங்களுக்கு?....
அப்பா நான் என் குழந்தைக்கு
இப்போது மொட்டைமாடி
இரவுகளில் நகரும் நட்சத்திரங்களையும்
தேயும் நிலவையும்
ரசிக்க சொல்லித்தருகிறேன்...
அப்பா என்னோடு வந்துவிடுங்கள்
காலம் இன்னமும்
ரசிக்கமுடிந்ததாய்த்தானிருக்கிறது
என் வீடு மீட்டர் பெட்டிகளில்லாதது
ஆனால் இங்கே நிறைய மரங்களும்
பூக்களும் பறவைகளுமுண்டு ...
அப்பா எனக்கு நிறைய
நம்பிக்கையிருக்கிறது
நீங்கள் வருவீர்கள் என்று..
ஏனெனில்,
இன்னமும் நீங்கள்
தூறலில் நனையும்
வானவில்லையும்
இரவில் நகரும்
நட்சத்திரங்களையும்
ரசித்திருக்கிறீர்களாமே...
கூட்டுப்புழுவை ரசித்தபடி
ஆரம்பித்த நம் சினேகம்
மீட்டர்பெட்டியில் கட்டிய
குருவிக்கூட்டைக் கலைத்ததில்
முடிந்துபோனது-பின் நாம்
அப்பா பிள்ளைகளானோம்....
அப்பா ஞாபகமிருக்கிறதா?
நடுங்கும் பயத்தோடு
தவளை தின்னும் பாம்பை
அருகிருந்து படம்பிடித்தோமே
அந்த அசாத்திய தைரியம் இப்போது
எனக்குக் கொஞ்சம் விட்டுத்தான் போயிற்று
நீங்களில்லாது....
அலையடித்த ஈரம் காய்வதற்குள்
கவிதை சொல்லும்
போட்டி வைத்துக்கொள்வோமே
அதில்தான் நான்
கவிதைச்சூத்திரம் கற்றேன்...
இப்போது கவிதைசொல்லிகளிடம்
போட்டியிட அதுதான் உதவுகிறது
உங்களுக்கு உடன்பாடில்லா
என் கவிதைகளைத்தான்
நான் இப்போது விற்றுக்கொண்டிருக்கிறேன்
உடைந்த பலூன் வைத்து விளையாட முயலும்
பலூன்காரனின் குழந்தைகள் போல...
அம்மாவின் பட்டுப்புடவையில்
நீங்கள் வண்ணம் ரசித்தபோது
நான் அதில் நெளியும்
செத்தபுழுக்களின்
நைந்த உடல் கண்டேன் -
அப்போதுதான் நீங்களும் நானும்
வேறுபட ஆரம்பித்தோம்
கவிதைகளாலும்...
அப்பா காலம் எவ்வளவு வேடிக்கையானது
பிரிவே இல்லாத உறவுகளே இல்லையா?
ஞாபகமிருக்கிறதா நம்
மொட்டைமாடி இரவுகளும்
சம்பாஷணைகளும்..?
உங்களுக்குப்பிடிக்காத என்
கவிதைகளைப் போலத்தான்
உங்களுக்கு அவளையும் பிடிக்கவில்லை
அவள் அவளுக்குப் பிடித்தவர்களையல்லவா
விட்டு விட்டு வந்திருக்கிறாள்?
நீங்கள் சொல்வீர்களே
எப்போதும் ஆசானாய் இருக்க முயலும்
உறவுகள் வெறுக்கத்தக்கவை - நீயே
உனக்கு ஆசானாயிரு என்று
அதில் எனக்கு சம்மதம்
ஆனால் உங்களுக்கு?....
அப்பா நான் என் குழந்தைக்கு
இப்போது மொட்டைமாடி
இரவுகளில் நகரும் நட்சத்திரங்களையும்
தேயும் நிலவையும்
ரசிக்க சொல்லித்தருகிறேன்...
அப்பா என்னோடு வந்துவிடுங்கள்
காலம் இன்னமும்
ரசிக்கமுடிந்ததாய்த்தானிருக்கிறது
என் வீடு மீட்டர் பெட்டிகளில்லாதது
ஆனால் இங்கே நிறைய மரங்களும்
பூக்களும் பறவைகளுமுண்டு ...
அப்பா எனக்கு நிறைய
நம்பிக்கையிருக்கிறது
நீங்கள் வருவீர்கள் என்று..
ஏனெனில்,
இன்னமும் நீங்கள்
தூறலில் நனையும்
வானவில்லையும்
இரவில் நகரும்
நட்சத்திரங்களையும்
ரசித்திருக்கிறீர்களாமே...