View Full Version : காதல் 1
இனியவள்
19-07-2007, 05:39 PM
ஏழை பணக்காரன்
கெட்டவன் நல்லவன்
ஆரோக்கியமானவன் நோயாளி
பார்த்து வீசுவதில்லை தென்றல்
நீ மட்டும் ஏன் இவை
அனைத்தும் பார்த்து வருகின்றாய்
>><<காதல்>><<
இணைய நண்பன்
19-07-2007, 07:22 PM
உண்மைக்காதல்
தென்றல் போல்− அது
சாதி மதம்
நல்லது கெட்டது
உயர்வு தாழ்வு
சுகம் துக்கம்
பாராமல் எல்லோருக்கும்
பொதுவாய் வீசும்
ஆனால்
சுயநலக்காதல்
எல்லாம் பார்த்துவரும்
எல்லாம் பாரது வருவது
என்றென்றும் தென்றலே
ஓவியன்
19-07-2007, 07:33 PM
பார்த்து வருவதில்லை காதல்!
யாரோ சொன்னான்
பைத்தியக் காரன்!
அவனுக்கெங்கே தெரியும்
உன்னைப் பார்த்துத்தான்
எனக்குக் காதல் வந்ததென்று!.
இனியவள்
19-07-2007, 07:37 PM
பார்த்து வருவதில்லை காதல்!
யாரோ சொன்னான்
பைத்தியக் காரன்!
அவனுக்கெங்கே தெரியும்
உன்னைப் பார்த்துத்தான்
எனக்குக் காதல் வந்ததென்று!.
உன்னைப் பார்த்ததில் இருந்து
உண்டானது உன் மேலான
காதல் எனக்கு....
என் பணத்தைப்
பார்த்ததால் உண்டானது
என் மேலான உன் காதல்
உண்டான காதல்
உருண்டோடியது...
வாகனம் என் மேல்
ஏறிச் சென்றதால்..
ஓவியன்
19-07-2007, 07:41 PM
கலங்கடிக்கிறீர்கள் இனியவள்!
இதற்கு எதிராக என்னிடம் பதில் கவிதை இல்லை − மன்னிக்கவும்
அன்புரசிகன்
19-07-2007, 07:54 PM
உண்டான காதல்
உருண்டோடியது...
வாகனம் என் மேல்
ஏறிச் சென்றதால்..
ஏறியிருக்கலாம் என்மேல்
அந்த வாகனம்
உன்வசைகள் அறிந்திரேன்
என் ஆவி கலைந்திருந்தால்.
அமரன்
20-07-2007, 05:15 PM
வாகனம் என் மேல்
ஏறிச் சென்றதால்..
நீதானே சொன்னாய்
தினமும் கொல்லாதே
ஒரே நாளில் கொன்றுவிடு.
யாருக்குத் தெரியும்
லாரிக்காரன் ஏமாத்துவானெண்று...
அஹ் ஹ.... நல்ல சிந்தனை இனியவள்.... ஆனால் நம் தென்றலிடம் இந்த கேள்வியைக் கேட்டீர்களென்றால் உங்களுக்கு ஒரு ஆப்பாயில் போட்டுக் கொடுப்பார்.. ஹி ஹி...
பின்னூட்டக்கவிதைகள் அனைத்தும் அழகு... பின்னி எடுக்கிறீர்கள் இனியவள்..
இனியவள்
20-07-2007, 07:44 PM
அஹ் ஹ.... நல்ல சிந்தனை இனியவள்.... ஆனால் நம் தென்றலிடம் இந்த கேள்வியைக் கேட்டீர்களென்றால் உங்களுக்கு ஒரு ஆப்பாயில் போட்டுக் கொடுப்பார்.. ஹி ஹி...
பின்னூட்டக்கவிதைகள் அனைத்தும் அழகு... பின்னி எடுக்கிறீர்கள் இனியவள்..
நன்றி ஆதவா
தென்றல்ட கேட்க போய் என்னை ஆம்லட் போடப் போற :grin:
நன்றி ஆதவா
தென்றல்ட கேட்க போய் என்னை ஆம்லட் போடப் போற :grin:
ஆம்லெட் போடுவது எப்படி என்று ஒரு திரி ஆரம்பிக்கலாமென்று இருந்தேன். அதற்குள் தென்றல் முந்திவிட்டார். சரி. நமக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.. :grin:
lolluvathiyar
21-07-2007, 05:10 AM
தென்றலுக்கு பசி எடுக்காது,
ஆனால் கதலிக்கு பசி எடுக்குமே