View Full Version : குடி
இனியவள்
18-07-2007, 07:31 PM
குடியை நீ
குடிக்க*
உன்னுயிரைக் குடி
குடிக்கின்றது
ஓவியன்
18-07-2007, 07:35 PM
குடி குடி கெடுக்கும்...........
சும்மாவா சொன்னார்கள்.........
ஆனால் கண்டு கொள்கிறார்கள் இல்லையே.....
வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.
அமரன்
18-07-2007, 07:36 PM
எத்தனை பேர் சொன்னாலும்
எத்தனை பேர் எழுதினாலும்.
எத்தனை விதமாக எழுதினாலும்
திருந்தாதோருக்கு இன்னொரு
நெருஞ்சி முள்.....
பாராட்டுக்கள் இனியவள்.
குடினி
குடி நீ
குடிக்க.
இனியவள்
18-07-2007, 07:38 PM
குடி குடி கெடுக்கும்...........
சும்மாவா சொன்னார்கள்.........
ஆனால் கண்டு கொள்கிறார்கள் இல்லையே.....
வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.
குடி குடியைக் கெடுக்கும்
எச்சரிக்கைத் துண்டு
விநியோகம் செய்து
சாராயக் கடைக்கு
அனுமதிப் பத்திரம்
குடுக்கும் இரட்டை
வேடம் கலையும்
மட்டும் குடி குடியைக்
கெடுத்துக் கொண்டே
இருக்கும்
நன்றி ஓவியன்
alaguraj
18-07-2007, 07:40 PM
நல்லவேளை நான் எப்பவாவது முகர்ந்து பாக்கரதோட சரி...ரொம்ப குடிக்கரதில்ல...
சும்மா நச்சுன்னு இருக்கு.....இனி.
(ஆமா....அடுத்த பார்ட்டி எப்ப எங்கேன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா...ரொம்ம காய்ஞ்சு கிடக்கரோம்)
இனியவள்
18-07-2007, 07:41 PM
எத்தனை பேர் சொன்னாலும்
எத்தனை பேர் எழுதினாலும்.
எத்தனை விதமாக எழுதினாலும்
திருந்தாதோருக்கு இன்னொரு
நெருஞ்சி முள்.....
பாராட்டுக்கள் இனியவள்.
குடினி
குடி நீ
குடிக்க.
நன்றி அமர்
குடி நீ(ர்)
உன் பிணியை
நீக்கும்
குடி நீ
உனக்கு
பிணியைக்
கொடுக்கும்...
முடிவு உன் கையில்
ஓவியன்
18-07-2007, 07:43 PM
குடி கெடுக்கும்
குடிக்கு குடில்
வைத்துக் கடை
பரப்ப அனுமதித்து
நம் குடி கெடுத்து
தம் குடி வளர்கின்றனர்
அரசியல்வாதிகள்!.
இனியவள்
18-07-2007, 07:57 PM
நல்லவேளை நான் எப்பவாவது முகர்ந்து பாக்கரதோட சரி...ரொம்ப குடிக்கரதில்ல...
சும்மா நச்சுன்னு இருக்கு.....இனி.
(ஆமா....அடுத்த பார்ட்டி எப்ப எங்கேன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா...ரொம்ம காய்ஞ்சு கிடக்கரோம்)
அடடா பார்ட்டியா அப்படி என்றால்
என்னங்கோ எனக்கும் சொல்லுங்க*
:wuerg019:
ஓவியன்
18-07-2007, 08:01 PM
அடடா [ப்]பா(ர்)ட்டியா[/B] அப்படி என்றால்
என்னங்கோ எனக்கும் சொல்லுங்க*
:wuerg019:
உங்க அம்மாவின் அம்மா!!!.......... :grin:
இனியவள்
18-07-2007, 08:01 PM
குடி கெடுக்கும்
குடிக்கு குடில்
வைத்துக் கடை
பரப்ப அனுமதித்து
நம் குடி கெடுத்து
தம் குடி வளர்கின்றனர்
அரசியல்வாதிகள்!.
குடியால் குடியைக்
கெடுப்பவர்களை துடப்பம்
கொண்டு துப்பரவு செய்தால்( அது தானுங்கோ அடி)
கூட்ட கூட்ட வரும் குப்பையை
முடிவில் வரவிடாமலே
செய்யும் தகமை இருந்தும்
ஊக்கப் படுத்தும் சில
துணைவிகள் இருக்கும்
வரை குடி குடியைக்
கெடுத்துக்கொண்டே இருக்கும்
ஓவியன்
18-07-2007, 08:18 PM
குடி
குடியைக்
குடிக்கிறது
உன் வாயால்!
இனியவள்
18-07-2007, 08:22 PM
குடி
குடியைக்
குடிக்கிறது
உன் வாயால்!
பசித்த வயிற்றுக்கு
சோறு போட நீ
முனையவில்லை குடி
தந்த மயக்கத்தில்
கடைசியில் வாய்க்கரிசி
போடுகின்றது குடி
இனியவள்
18-07-2007, 08:23 PM
உங்க அம்மாவின் அம்மா!!!.......... :grin:
அம்மாவின் அம்மாவை
அம்மம்மா என்று நான்
அழைக்கபோய் விளங்கவில்லையே
அம்மா என்று நீ அழைக்க*
அம்மா அம்மாடியோவ் ஆகி
விட்டது கடைசியில் :1:
ஓவியன்
18-07-2007, 08:38 PM
அம்மாடியோவ்..................
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கோ.........
இனியவள்
18-07-2007, 08:41 PM
அம்மாடியோவ்..................
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கோ.........
பிச்சை கேடுப் போனான்
பசியால் வாடியவை இல்லை
போ சீ நாயே என்று
விரட்டி விட்டு விருந்து
வைக்கிறார்கள் வாயில்லா
நாலு கால் ஜீவனுக்கு
அதற்கு இருக்கும் மரியாதை
கூட உனக்கு இல்லையே
உணர்ந்து கொள் உழைப்புக்கு
இருக்கும் மரியாதை எதற்கும்
இல்லை
ஹீ ஹீ ஓவியன்
ஓவியன்
18-07-2007, 08:43 PM
ஹீ!,ஹீ!
எனக்கு கண்ணைக் கட்டுது இனியவள்!.
இனியவள்
18-07-2007, 08:46 PM
ஹீ!,ஹீ!
எனக்கு கண்ணைக் கட்டுது இனியவள்!.
எது துணியா :music-smiley-010:
அமரன்
19-07-2007, 08:12 AM
ஓவியன் எனி ஹெல்ப்...?
மனோஜ்
19-07-2007, 08:15 AM
இனி இனி இனிமைதான் நீங்கள்
இனியவள்
19-07-2007, 10:30 AM
ஓவியன் எனி ஹெல்ப்...?
ஹீ ஹீ அமர் அது சும்மா
தாமாசுக்கு ஓவியன் ஓடிட்டார்
alaguraj
19-07-2007, 11:24 AM
விடாத ஓவியா...நீ முன்னாடி நில்லு தளபதி மாதிரி, நாங்க எல்லாரும் பின்னாலே இருக்கோம்..பயந்து போய் சங்கத்தை கலச்சுடாத.....
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு...ஓவியரே கல்யாணிய கொஞ்சம் உள்ள விட்டு பட்டய கிளப்பு நீ.
இதுகெல்லாம் பின் வாங்கிட்டா, என்ன ஆகிறது நம்ம* கெளரவம்
அரசன்
19-07-2007, 01:20 PM
குடி குடி கெடுக்கும்...........
சும்மாவா சொன்னார்கள்.........
ஆனால் கண்டு கொள்கிறார்கள் இல்லையே.....
வரிகளுக்குப் பாராட்டுக்கள் இனியவள்!.
யார் சொன்னார்கள் குடி குடியை கெடுக்கும் என்று. சில குடிகள் பலரை கொடுத்துள்ளது தெரியுமா? அதில்,
குன்னக்குடி வைத்தியநாதனை கொடுத்திருக்கிறது.
மன்னார்குடி கருவை.கலியமூர்த்தியை கொடுத்திருக்கிறது.(தமாசு)
இனியவள்
19-07-2007, 03:38 PM
யார் சொன்னார்கள் குடி குடியை கெடுக்கும் என்று. சில குடிகள் பலரை கொடுத்துள்ளது தெரியுமா? அதில்,
குன்னக்குடி வைத்தியநாதனை கொடுத்திருக்கிறது.
மன்னார்குடி கருவை.கலியமூர்த்தியை கொடுத்திருக்கிறது.(தமாசு)
மூர்த்தி இந்த லொள்ளு தான வேண்டாம் என்கிறது
:icon_cool1:
விகடன்
02-08-2007, 09:29 AM
நினைவை மறைக்கவும் நினைவை அழிக்கவும் மது பயன்படுகிறது.
எல்லாம் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். அளவோடிருந்தால் ஆரோக்கியம்.
ஏன் அப்படி எல்லோரும் பார்க்கிறீர்கள். தப்பா பார்க்காதீர்கள்....:icon_shades:
குடித்தவனாக சொல்லவில்லை. படித்தவனாகத்தான் சொல்கிறேன்.