ரிஷிசேது
18-07-2007, 05:59 PM
என் வீடு உல்லாசமானது
அங்கு எந்த இரைச்சலுமில்லை
எப்போதும் வாலாட்டும் ஓர் நாட்டுநாயும்
அவ்வப்போது வந்துபோகுமொரு பூனையும்
இன்னபிற மாடுகன்றுகளும்-எந்தவித
ஆக்கிரமிப்பில்லாமல் விடியுமென் பொழுதுகளும்
என் வீடு மிக உல்லாசமானது
கிராமத்து வீட்டு முற்றம்-வானமே
கூரையாய் நட்சத்திரங்களே விளக்குகளாய்
என் வீட்டு முற்றம் முழுக்க மல்லிகைபூக்கள்
மழையும் சூரியனும் அடிக்கடி வீடு வந்துபோகும்
அப்போதெல்லாம் படுத்தவுடன் தூக்கம் வரும்
நகரத்தின் சாயம் பூசிய என்
புதியவீடு கிராமத்திற்கு
பொருந்தாமல் போயிற்று
சாண வாசமில்லாத்தரை
வழுக்கிப்போயிற்று ஆறே மாதத்தில்
என் அப்பத்தாவை
வீடென்பது வெறும் வண்ணச்சுவர்களாலோ
வழுக்கும் தரையாலோ நிச்சயிக்கப்படுவதல்ல
வீடு வரையரையில்லா சந்தோஷத்தாலானது-ஒரு
அன்யோன்யமும் இயல்பாய் இருத்தலுமானது
என் பழைய வீட்டில் எத்தனையோமுறை நாய்களும்
கோழிகளும் வந்துபோயின அசிங்கம்கூட செய்தன
என் புதியவீடு பலத்த பாதுகாப்பிற்குட்படுத்தப்பட்டது
எல்லா வழிகளும் எப்போதும் அடைபட்டும்
தானியங்கி கதவுகள் கொண்டதாயுமிருக்கிறது
தொலைகாட்சியில்
தொலைந்துபோயிற்று என் வீடு
இப்போது நகரமுமற்று கிராமமுமில்லா
ஒரு கொலையுண்ட நிலையிலிருக்கிறது
முற்றத்தை வாஸ்து எடுத்துக்கொண்டான்
குழந்தைகள் கணினியிலும் சுட்டியிலும்
விளையாடின
நான் என் பழைய வீட்டின் வாசனைகளை தேடி
இறந்துகொண்டிருக்கிறேன்
அந்த வீடு மிக உல்லாசமானது....
அங்கு எந்த இரைச்சலுமில்லை
எப்போதும் வாலாட்டும் ஓர் நாட்டுநாயும்
அவ்வப்போது வந்துபோகுமொரு பூனையும்
இன்னபிற மாடுகன்றுகளும்-எந்தவித
ஆக்கிரமிப்பில்லாமல் விடியுமென் பொழுதுகளும்
என் வீடு மிக உல்லாசமானது
கிராமத்து வீட்டு முற்றம்-வானமே
கூரையாய் நட்சத்திரங்களே விளக்குகளாய்
என் வீட்டு முற்றம் முழுக்க மல்லிகைபூக்கள்
மழையும் சூரியனும் அடிக்கடி வீடு வந்துபோகும்
அப்போதெல்லாம் படுத்தவுடன் தூக்கம் வரும்
நகரத்தின் சாயம் பூசிய என்
புதியவீடு கிராமத்திற்கு
பொருந்தாமல் போயிற்று
சாண வாசமில்லாத்தரை
வழுக்கிப்போயிற்று ஆறே மாதத்தில்
என் அப்பத்தாவை
வீடென்பது வெறும் வண்ணச்சுவர்களாலோ
வழுக்கும் தரையாலோ நிச்சயிக்கப்படுவதல்ல
வீடு வரையரையில்லா சந்தோஷத்தாலானது-ஒரு
அன்யோன்யமும் இயல்பாய் இருத்தலுமானது
என் பழைய வீட்டில் எத்தனையோமுறை நாய்களும்
கோழிகளும் வந்துபோயின அசிங்கம்கூட செய்தன
என் புதியவீடு பலத்த பாதுகாப்பிற்குட்படுத்தப்பட்டது
எல்லா வழிகளும் எப்போதும் அடைபட்டும்
தானியங்கி கதவுகள் கொண்டதாயுமிருக்கிறது
தொலைகாட்சியில்
தொலைந்துபோயிற்று என் வீடு
இப்போது நகரமுமற்று கிராமமுமில்லா
ஒரு கொலையுண்ட நிலையிலிருக்கிறது
முற்றத்தை வாஸ்து எடுத்துக்கொண்டான்
குழந்தைகள் கணினியிலும் சுட்டியிலும்
விளையாடின
நான் என் பழைய வீட்டின் வாசனைகளை தேடி
இறந்துகொண்டிருக்கிறேன்
அந்த வீடு மிக உல்லாசமானது....