குந்தவை
18-07-2007, 09:38 AM
தமிழனே!
ஏனடா திமிர் உனக்கு??
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்தக்குடி என்பதாலா?
வீரத்தின் விளைநிலத்துக்கு உரியவன் என்பதாலா?
எத்தனையோ மக்களைப் பார்த்தாலும்
தமிழ்மகனைப் பார்த்தால்
ஒரு பாசம் வருகிறதே
அது ஏன்?
தமிழனே!
ஆழமான அறிவும்
அதற்கேற்ற கர்வமும்தான்
உன் அடையாளம்!!!
பாரதியின் தலை தாழ்ந்த்தில்லை
கட்டபொம்மனின் தலை தாழ்ந்த்தில்லை
காமராசரின் தலை தாழ்ந்த்தில்லை
என்றும் தமிழனின் தலை தாழக்கூடாது!
இயற்கையனைத்தும்
உன்னை நேசிப்பதை
உணர்ந்து கொள்ளடா!
பிறரை மதிப்பதும்
மதிப்பைப் பெறுவதும்
உனக்கு கைவந்த கலை!
ஊரோடு ஒத்துவாழ்
என் சகோதரனே!
அன்பை பரிமாறுவதில்
நம்மை மீற ஆளில்லை!!!
ஆனால்
எனக்கு ஒரு சந்தேகம்!
புராணங்களிலும் புதினங்களிலும்
வாழ்கிறேனா நான்?
நா.பா.வின் அரவிந்தனும்
குந்தவையின் வந்தியத்தேவனும்
சிவகாமியின் நரசிம்மரும்
கல்கி விளக்கிய ஆதித்தனும்
இன்றும் வாழ்கிறார்களா?
விடையளிப்பாயா என் வீரச்சகோதரனே???
பி.கு.
எனக்கு தெரிந்ததை எழுதினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
ஏனடா திமிர் உனக்கு??
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றிய மூத்தக்குடி என்பதாலா?
வீரத்தின் விளைநிலத்துக்கு உரியவன் என்பதாலா?
எத்தனையோ மக்களைப் பார்த்தாலும்
தமிழ்மகனைப் பார்த்தால்
ஒரு பாசம் வருகிறதே
அது ஏன்?
தமிழனே!
ஆழமான அறிவும்
அதற்கேற்ற கர்வமும்தான்
உன் அடையாளம்!!!
பாரதியின் தலை தாழ்ந்த்தில்லை
கட்டபொம்மனின் தலை தாழ்ந்த்தில்லை
காமராசரின் தலை தாழ்ந்த்தில்லை
என்றும் தமிழனின் தலை தாழக்கூடாது!
இயற்கையனைத்தும்
உன்னை நேசிப்பதை
உணர்ந்து கொள்ளடா!
பிறரை மதிப்பதும்
மதிப்பைப் பெறுவதும்
உனக்கு கைவந்த கலை!
ஊரோடு ஒத்துவாழ்
என் சகோதரனே!
அன்பை பரிமாறுவதில்
நம்மை மீற ஆளில்லை!!!
ஆனால்
எனக்கு ஒரு சந்தேகம்!
புராணங்களிலும் புதினங்களிலும்
வாழ்கிறேனா நான்?
நா.பா.வின் அரவிந்தனும்
குந்தவையின் வந்தியத்தேவனும்
சிவகாமியின் நரசிம்மரும்
கல்கி விளக்கிய ஆதித்தனும்
இன்றும் வாழ்கிறார்களா?
விடையளிப்பாயா என் வீரச்சகோதரனே???
பி.கு.
எனக்கு தெரிந்ததை எழுதினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.