lenram80
17-07-2007, 06:57 PM
நீ எனக்கு நிலவு போல!
ஆராய்ந்ததால் தானே காற்றும் நீரும்
நிலவில் இல்லை என்று தெரிந்தது!
அங்கு வாழலாம் என்ற நம்பிக்கை உடைந்தது!
என் மேல் நம்பிக்கை வைத்து நம்பி கை வைத்தவள் நீ!
நான் உன்னை ஆராயப்போவது இல்லை!
என் நிலவில்
கொட்டும் அருவி நீ! சுற்றும் சுத்தக் காற்று நீ!
நீ ஒன்றும் குறைகளே இல்லாத தேவதை இல்லை!
சின்னதாய் சிறகை உடைத்துக்கொண்ட சிட்டுக்குருவி நீ!
நொண்டி முயலை வைத்துக்கொண்டு
வாலையும் சேர்த்து எண்ணி நான்கு கால்
என்று வாதாடும் வழக்கறி்ஞர் நீ!
குறைகளும் சேர்ந்து குலுங்கும் குமரி தான் நீ!
நானும் நிறை மழை பொழியும் நெடு வானம் இல்லை!
ராஜபட்டை கட்டிக்கொண்ட ராஜகுமாரன் இல்லை!
கறை உள்ள கதர் துணி தான் நானும்!
குறைகளை வைத்து கட்டப்பட்ட கோட்டை தான் நானும்!
குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தால்
சிவனையும் கண்டு சிறை பிடிக்க வேண்டும்!
நம் வலிகளை நாமே உடைப்போம்!
நம் வழிகளை நாமே துடைப்போம்!
நிறை ஜல்லிகளை பாசத் தாரில் கலந்து
நம் குண்டு குழிகளை நாமே அடைப்போம்!
இனி,
உன் கன்னத்தில் குழி இல்லாமல் போனதற்காக வருத்தப்படாமல்
உன் கன்னப் பருக்களின் மேடுகளில் சறுக்கி விளையாடலாம் வா!
சின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்
சிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா!
இன்று வாடிய பூக்கள் என்று சொல்லாமல்
இவை எல்லாம் நேற்று பாடிய பூக்கள் என்று மகிழலாம் வா!
நெறுப்பு உன்னை சுட்டது என்று சொல்லாமல்
நெறுப்பூ உன்னை தொட்டது என்று நெகிழலாம் வா!
உன்னை திட்டினேன் என்று நினைக்காமல்
உரிமையோடு உன்னை மட்டும் தானே திட்ட முடியும்
ஆசையோடு உன்னை மட்டும் தானே அள்ள முடியும்
என்று அளாவலாம் வா!
கன்னத்தில் முத்தமிட்டோம் என்று சொல்லாமல்
கன நேரம் சொர்க்கம் தொட்டோம் என்று சொல்லி திளைப்போம் வா!
தீர்மானித்து விடுவோம் தீர்க்கமாக!
அறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்!
காதலோடு காதல் மட்டும் செய்வோம்!
இனி,
நம்மிடம் நமக்கே
பிடிக்காதவைகளை தூர எறிவோம்!
பிடித்தவைகளில் ஊர நனைவோம்!
நம் கனவு தீர தீர காதல் புனைவோம்!
நம் ஆசை ஆர ஆர அன்பில் பினைவோம்!
காதல் குளிரில் ஒன்றாய் வாழ்நாள் முழுதும் அனைவோம்!
குறை குறைப்போம்! நிறை நிறைப்போம்!
உடல் ஓயும் வரை ஒன்றாய் உயிர்ப்போம்!
ஆராய்ந்ததால் தானே காற்றும் நீரும்
நிலவில் இல்லை என்று தெரிந்தது!
அங்கு வாழலாம் என்ற நம்பிக்கை உடைந்தது!
என் மேல் நம்பிக்கை வைத்து நம்பி கை வைத்தவள் நீ!
நான் உன்னை ஆராயப்போவது இல்லை!
என் நிலவில்
கொட்டும் அருவி நீ! சுற்றும் சுத்தக் காற்று நீ!
நீ ஒன்றும் குறைகளே இல்லாத தேவதை இல்லை!
சின்னதாய் சிறகை உடைத்துக்கொண்ட சிட்டுக்குருவி நீ!
நொண்டி முயலை வைத்துக்கொண்டு
வாலையும் சேர்த்து எண்ணி நான்கு கால்
என்று வாதாடும் வழக்கறி்ஞர் நீ!
குறைகளும் சேர்ந்து குலுங்கும் குமரி தான் நீ!
நானும் நிறை மழை பொழியும் நெடு வானம் இல்லை!
ராஜபட்டை கட்டிக்கொண்ட ராஜகுமாரன் இல்லை!
கறை உள்ள கதர் துணி தான் நானும்!
குறைகளை வைத்து கட்டப்பட்ட கோட்டை தான் நானும்!
குறை கண்டுபிடிக்க ஆரம்பித்தால்
சிவனையும் கண்டு சிறை பிடிக்க வேண்டும்!
நம் வலிகளை நாமே உடைப்போம்!
நம் வழிகளை நாமே துடைப்போம்!
நிறை ஜல்லிகளை பாசத் தாரில் கலந்து
நம் குண்டு குழிகளை நாமே அடைப்போம்!
இனி,
உன் கன்னத்தில் குழி இல்லாமல் போனதற்காக வருத்தப்படாமல்
உன் கன்னப் பருக்களின் மேடுகளில் சறுக்கி விளையாடலாம் வா!
சின்னதாய் மூக்கு வந்ததற்காக வருத்தப்படாமல்
சிக்கனமாய் வந்ததற்காக சிலிர்க்கலாம் வா!
இன்று வாடிய பூக்கள் என்று சொல்லாமல்
இவை எல்லாம் நேற்று பாடிய பூக்கள் என்று மகிழலாம் வா!
நெறுப்பு உன்னை சுட்டது என்று சொல்லாமல்
நெறுப்பூ உன்னை தொட்டது என்று நெகிழலாம் வா!
உன்னை திட்டினேன் என்று நினைக்காமல்
உரிமையோடு உன்னை மட்டும் தானே திட்ட முடியும்
ஆசையோடு உன்னை மட்டும் தானே அள்ள முடியும்
என்று அளாவலாம் வா!
கன்னத்தில் முத்தமிட்டோம் என்று சொல்லாமல்
கன நேரம் சொர்க்கம் தொட்டோம் என்று சொல்லி திளைப்போம் வா!
தீர்மானித்து விடுவோம் தீர்க்கமாக!
அறிவியலோடு மட்டும் ஆராய்ச்சி செய்வோம்!
காதலோடு காதல் மட்டும் செய்வோம்!
இனி,
நம்மிடம் நமக்கே
பிடிக்காதவைகளை தூர எறிவோம்!
பிடித்தவைகளில் ஊர நனைவோம்!
நம் கனவு தீர தீர காதல் புனைவோம்!
நம் ஆசை ஆர ஆர அன்பில் பினைவோம்!
காதல் குளிரில் ஒன்றாய் வாழ்நாள் முழுதும் அனைவோம்!
குறை குறைப்போம்! நிறை நிறைப்போம்!
உடல் ஓயும் வரை ஒன்றாய் உயிர்ப்போம்!