பாரதி
16-07-2007, 06:12 PM
அன்பு நண்பர்களே,
தற்செயலாக எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடப் புத்தகத்தை காண நேர்ந்தது. அதில் இருந்த சில விசயங்கள் இது வரை நான் அறியாதது. அவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன். இதில் வராதவற்றை அறிந்த நண்பர்கள் அறியத்தந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
காப்பியம்: கதைத்தலைவனின் வாழ்க்கையின் முழுமையைப் பாடியது காப்பியம்.
பிரபந்தம்: ஒருவரின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை விரிவாக்கிப் பாடியது. சிற்றிலக்கியம் என்பதைப் பிரபந்தம் என்றும் அழைப்பர்.தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன.
பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவது.
சதகம்: ஒரு பொருளைக் குறித்து நூறு செய்யுள் பாடுவது.
அந்தாதி: அந்தம்+ஆதி. ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ,
அசையோ, சீரோ, அடியோ அதைத் தொடர்ந்து வரும் செய்யுளின் முதலாக அமையும். (அவ்வாறு நூறு வெண்பாக்கள் பாடுவதை அந்தாதி இலக்கியம் என்பர்)
உலா: ஒரு தலைவன் வீதியில் உலாவரும் போது அவனைப் பார்த்த மகளிர் அவனை நினைத்து, அவன் வயப்பட்டு வருந்துவதை உலாப்பிரபந்தம் என்பர். அவ்வாறு வருந்துபவர் ஏழு பருவத்துப் பெண்டிராவர்.
5-7 வயது உள்ளவர் - பேதை
8-11 வயது உள்ளவர் - பெதும்பை
12-13 வயது உள்ளவர் - மங்கை
14-19 வயது உள்ளவர் - மடந்தை
20-25 வயது உள்ளவர் - அரிவை
26-31 வயது உள்ளவர் - தெரிவை
32-40 வயது உள்ளவர் - பேரிளம் பெண்
உலா வரும் தலைவன் இறைவனாகவோ, மன்னனாகவோ ஒப்பற்றதோர் தலைவனாகவோ இருத்தல் வேண்டும்.
பிள்ளைத்தமிழ்:தெய்வத்தையோ, அரசனையோ, ஒப்பற்ற பெரியார் ஒருவரையோ பிள்ளைப்பருவத்தில் வைத்துப்பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். பிள்ளை பிறந்து மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத்தோராம் திங்கள் முடியவுள்ள காலப்பகுதியைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பாடுவர். பருவத்துக்கு பத்து ஆசிரிய விருத்தங்கள் பாடப்பெறும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறு தேர், சிறுபறை என்பன அப்பத்துப்பருவங்கள். இவையனைத்தும் ஆண்பாற்பிள்ளைத்தமிழுக்கு உரியன. இவற்றில் சிற்றில், சிறுபறை, சிறு தேர் ஆகியவற்றை நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக கழங்கு, அம்மானை,ஊசல், நீராடல் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றை சேர்த்துப்பாடுவது பெண்பாற் பிள்ளைத் தமிழாகும்.
கலம்பகம்: பலவகை மலர்களைக் கோத்துக் கதம்பம் கட்டுவது போலப் பலவகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டு செய்யப்பெறும் இலக்கிய வகையைக் கலம்பகம் என்பர்.
பரணி: போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வெற்றி வீரனுக்குத்தான் பரணி பாடப்படும். போரில் தோற்றவனின் பெயர் நூலுக்குச் சூட்டப்பெறும்!
==========================================================
ஏலாதி: ஏலம்+ஆதி = ஏலாதி.ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருட்கள் சேர்ந்த மருந்து உடல் பிணி போக்கி நலம் செய்யும். அது போல இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்களும் மக்களுடைய மன
நோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவைத் தர வல்லன.
மூன்று மருந்துப்பொருட்களின் பெயரால் அமைந்த மருந்தின் பெயரைக் கொண்டது 'திரிகடுகம்'. (ஆங்கில வார்த்தை மூன்று 'திரீ' எவ்வாறு இத்துடன் தொடர்புடையதாய் அமைந்தது!?)
ஐந்து மருந்துப்பொருட்களின் கலப்பால் அமைந்த பொருட்களின் பெயரைக்கொண்டது சிறுபஞ்ச மூலம்.
நன்றி: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்.
தற்செயலாக எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடப் புத்தகத்தை காண நேர்ந்தது. அதில் இருந்த சில விசயங்கள் இது வரை நான் அறியாதது. அவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன். இதில் வராதவற்றை அறிந்த நண்பர்கள் அறியத்தந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
காப்பியம்: கதைத்தலைவனின் வாழ்க்கையின் முழுமையைப் பாடியது காப்பியம்.
பிரபந்தம்: ஒருவரின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை விரிவாக்கிப் பாடியது. சிற்றிலக்கியம் என்பதைப் பிரபந்தம் என்றும் அழைப்பர்.தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன.
பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவது.
சதகம்: ஒரு பொருளைக் குறித்து நூறு செய்யுள் பாடுவது.
அந்தாதி: அந்தம்+ஆதி. ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ,
அசையோ, சீரோ, அடியோ அதைத் தொடர்ந்து வரும் செய்யுளின் முதலாக அமையும். (அவ்வாறு நூறு வெண்பாக்கள் பாடுவதை அந்தாதி இலக்கியம் என்பர்)
உலா: ஒரு தலைவன் வீதியில் உலாவரும் போது அவனைப் பார்த்த மகளிர் அவனை நினைத்து, அவன் வயப்பட்டு வருந்துவதை உலாப்பிரபந்தம் என்பர். அவ்வாறு வருந்துபவர் ஏழு பருவத்துப் பெண்டிராவர்.
5-7 வயது உள்ளவர் - பேதை
8-11 வயது உள்ளவர் - பெதும்பை
12-13 வயது உள்ளவர் - மங்கை
14-19 வயது உள்ளவர் - மடந்தை
20-25 வயது உள்ளவர் - அரிவை
26-31 வயது உள்ளவர் - தெரிவை
32-40 வயது உள்ளவர் - பேரிளம் பெண்
உலா வரும் தலைவன் இறைவனாகவோ, மன்னனாகவோ ஒப்பற்றதோர் தலைவனாகவோ இருத்தல் வேண்டும்.
பிள்ளைத்தமிழ்:தெய்வத்தையோ, அரசனையோ, ஒப்பற்ற பெரியார் ஒருவரையோ பிள்ளைப்பருவத்தில் வைத்துப்பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். பிள்ளை பிறந்து மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத்தோராம் திங்கள் முடியவுள்ள காலப்பகுதியைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பாடுவர். பருவத்துக்கு பத்து ஆசிரிய விருத்தங்கள் பாடப்பெறும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறு தேர், சிறுபறை என்பன அப்பத்துப்பருவங்கள். இவையனைத்தும் ஆண்பாற்பிள்ளைத்தமிழுக்கு உரியன. இவற்றில் சிற்றில், சிறுபறை, சிறு தேர் ஆகியவற்றை நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக கழங்கு, அம்மானை,ஊசல், நீராடல் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றை சேர்த்துப்பாடுவது பெண்பாற் பிள்ளைத் தமிழாகும்.
கலம்பகம்: பலவகை மலர்களைக் கோத்துக் கதம்பம் கட்டுவது போலப் பலவகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டு செய்யப்பெறும் இலக்கிய வகையைக் கலம்பகம் என்பர்.
பரணி: போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வெற்றி வீரனுக்குத்தான் பரணி பாடப்படும். போரில் தோற்றவனின் பெயர் நூலுக்குச் சூட்டப்பெறும்!
==========================================================
ஏலாதி: ஏலம்+ஆதி = ஏலாதி.ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருட்கள் சேர்ந்த மருந்து உடல் பிணி போக்கி நலம் செய்யும். அது போல இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்களும் மக்களுடைய மன
நோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவைத் தர வல்லன.
மூன்று மருந்துப்பொருட்களின் பெயரால் அமைந்த மருந்தின் பெயரைக் கொண்டது 'திரிகடுகம்'. (ஆங்கில வார்த்தை மூன்று 'திரீ' எவ்வாறு இத்துடன் தொடர்புடையதாய் அமைந்தது!?)
ஐந்து மருந்துப்பொருட்களின் கலப்பால் அமைந்த பொருட்களின் பெயரைக்கொண்டது சிறுபஞ்ச மூலம்.
நன்றி: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்.