PDA

View Full Version : அரிய செய்திகள்



aromabest
16-07-2007, 05:15 PM
தாடியுடன் பிறந்த ஆண்குழந்தை

இந்தோனேசியாவில், தாடியுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தையை தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர். இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசி மாகாணத்தின் சிறியதொரு நகர்ப்பிரதேசமொன்றில், கடந்த வாரம் ஒரு தம்பதியருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குப் பிறக்கும் போதே, அதன் முகக்கடவாயிலிருந்து, மூன்று சென்ரிமீற்றர் நீளத்திற்கு, பழுப்புநிறத்தில் சாம்பல் கலந்த வர்ணத்தில் சிறிய தாடிகள் முளைத்துக் காணப்பட்டுள்ளது. இவை கன்னங்களின் ஓரத்திற்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தொகுப்பு :- அரோமா பெஸ்ட்

அரசன்
16-07-2007, 05:22 PM
http://i158.photobucket.com/albums/t117/murthykmd/thaadi.jpg

இது போன்று ஒரு 11 வயது சிறுவன். தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம்.

அமரன்
16-07-2007, 05:31 PM
அடடா..எத்தனை ரகமான சோதனைகள்..இறைவ*னைப் பிரார்த்திப்போம்..

aromabest
17-07-2007, 09:39 AM
புதிய உலக அதிசயஙகள் 7

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_world-1.JPG

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_world-2.JPG

ஓவியன்
17-07-2007, 10:07 AM
அரோமபெஸ்ட் உங்களது திரியினது தலைப்பை அரிய செய்திகள் அல்லது புதுமையான செய்திகள் என்று மாற்றலாமே?

இணைய நண்பன்
17-07-2007, 07:45 PM
அருமையான பதிவுகள்.அரோமா பெஸ்ட் அவர்களே பெயருக்கேற்ப உங்கள் சேவை நறுமணம் வீசட்டும்.வாழ்த்துக்கள்

அக்னி
17-07-2007, 07:52 PM
ஓவியன் கூறிய தலைப்பைப் பரிசோதியுங்கள்...
கிடைத்தற்கரிய பல தகவல்கள் எங்களை வந்து சேரும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

ஆதவா
18-07-2007, 05:48 AM
செய்தித் தொகுப்புகள் அருமைஅ அரோமா..... இந்த பகுதியை செய்திச் சொலைப் பகுதிக்கு மாற்றுகிறேன்... உங்கள் பணி தொடரட்டும்..

aromabest
27-07-2007, 03:18 PM
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_hair_01.jpg
மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது. இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியாமல் டாக்டர்கள் தங்கள் சோதனையில் தோல்வி அடைந்து விட்டனர். சமீபத்தில் சாங்கிலி கிராமத்தில் வித்தியாசமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிகிச்சை பெறுவதற்காக பெற்றோருடன் பிருத்விராஜ் பாட்டீல் வந்திருந்தான். டாக்டர்கள் முயற்சி வெற்றி பெறுமா? காத்திருந்து பார்ப்போம்

மனோஜ்
27-07-2007, 03:48 PM
புதிய தகவல்கள் அருமை நன்றி தொடருங்கள் நண்பரே

aromabest
27-07-2007, 03:57 PM
பயங்கரம் ஆனால் உண்மை வாகன ஓட்டுனர்களே இது உங்களின் அவதானத்திற்கு

(தயவுசெய்து நீங்கள் சிறுவர்களாகவோ அள்றில் மனவலிமை அற்றவர்களாகவோ இருந்தால் இதனைப் பார்வையிட வேண்டாம்.)
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/2_ac001.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac002.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac003.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac004.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac005.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac006.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_sa007.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_ac008.jpg

aromabest
28-07-2007, 08:08 AM
உலக வெப்ப அதிகரிப்பால் விபரீதம் ஆரம்பமா?

உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஆரம்பமாகி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக வெப்பம் அதிகரித்து வருகிறது. செயற்கை எரிபொருள் அதிகம் பயன்படுத்துவதால், வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இப்படியே போனால், 2020 ஆம் ஆண்டில், உலகில் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். இப்போது, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துவிட்டது. வானிலை மாற்றம் ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட சிலநாடுகளில் வெள்ளம் அதிகரிக்க வெப்பமயமாதல் தான் காரணம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். வானிலை மாற்றம் ஆராய்ச்சி தொடர்பாக, பிரிட்டன் ஈட்ஸ் ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பின், தலைவர் பில் ஜோன்ஸ் கூறியதாவது; உலகின் வெப்ப நிலை கடந்த 1860 ஆம் ஆண்டுக்கு முன் ஓரிரு ஆண்டுகள் மிகவும் அதிகரித்தது. அதன் பின், 1998 ஆம் ஆண்டில், வெப்பம் மிக அதிகமாக இருந்தது. இரண்டாவது முறையாக, கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த அளவை வைத்துப்பார்த்தால், இரண்டாவது அதிக வெப்பம் நிலவிய ஆண்டு என்று சொல்ல முடியும். வரட்சி அதிகரித்ததால் தான், பனிப்பாறைகள் உருகி, புயலும் அதிகரித்து, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியா,பாகிஸ்தான், ஆப்பகானிஸ்தான் நாடுகளில் வெள்ளத்தில் 500 பேர் இறந்தனர். அசாதாரணமாக ஏற்பட்ட மழை வெள்ள சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது, உலக வெப்பமயமாதல் விபரீதம் ஆரம்பித்துவிட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில், இப்படி திடீர் புயல், வெள்ளம், வரட்சியும் அதிகரிக்கலாம். இவ்வாறு பில்ஜோன்ஸ் கூறினார்.

aromabest
28-07-2007, 05:02 PM
ரிமோட்டில் இயங்கும் புதிய விமானம்
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_Boying.jpg

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா புதிய ரக விமானத்தை கண்டு பிடித்து இருக்கிறது. `போயிங் எக்ஸ்48பி' என்ற இந்த விமானத்தில் எல்லாபக்கங்களிலும் சிறகுகள் உள்ளன. சோதனை ரீதியில் இது வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது. 500 இறாத்தல் எடையுள்ள இந்த விமானம் 3 என்ஜின்களை கொண்டது. ரிமோட் மூலம் இயங்கும். 7500 அடி உயரத்தில் அரை மணி நேரம்பறந்து மீண்டும் பத்திரமாக தரை இறங்கியது. எரிபொருள் செலவும் மிக குறைவு. அதிக பயணிகள் செல்லும் வகையில் மிக விரைவில் இந்த புதிய விமானம் அறிமுகம் ஆகிறது

aromabest
29-07-2007, 03:12 PM
ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் குடும்பம் மறுப்பு


சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு முகம் கொடுத்திருக்கும் ரிசானாவை மீட்பதற்கான வாய்ப்புக்கள் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ரிசானாவின் கவனக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 மாதக் குழந்தையின் குடும்பத்தினர் அவருக்கு எதுவித கருணையும் அளிக்க மறுத்துவிட்டதாக அரேபிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி சென்றிருந்த சிறிலங்கா பிரதி அமைச்சர் உசைன் பைலா, அக்குடும்பத்தினரை கடந்த வாரம் நேரில் சந்தித்துப் பேசியபோது எதுவித கருணையும் தாங்கள் காட்ட முடியாது என்று கூறியுள்ளனர் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும் சவுதி அரேபிய நாளிதழின் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

சவுதி சென்றிருந்த ரிசானாவின் பெற்றோர் ஏற்கெனவே சிறிலங்காவுக்குத் திரும்பிவிட்டனர். அமைச்சர் பைலா இன்று சிறிலங்காவுக்கு திரும்புகிறார்

leomohan
29-07-2007, 03:33 PM
ஐயோ பாக்கவே கொடுமையா இருக்கே (பயங்கரம்.....)

aromabest
29-07-2007, 03:36 PM
எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அலெக்சாண்டரியா நகருக்கு அடியில் புராதன நகரம் இருந்ததை அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜீன்-டேனியன் ஸ்டான்லி தலைமையிலான குழுவினர் இந்த புராதன நகரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் குழுவினர் எகிப்தில் அலெக்சாண்டர் நிறுவிய அலெக்சாண்டரியா நகரில் உள்ள துறைமுகத்தில் நீருக்கு அடியில் தோண்டியபோது இந்த பழைய நகரம் இருப்பது தெரியவந்தது. அலெக்சாண்டர், கி.மு. 331 இல் அலெக்ஸாண்டரியா நகரை நிறுவினார் என்பது வரலாறு. அங்கு உலகிலேயே மிகப்பெரிய நூலகத்தை நிறுவினார். அங்குள்ள பரோஸ் தீவில் 119 மீற்றர் உயரமுள்ள கலங்கரை விளக்கத்தை நிறுவினார். ஆனால், அதற்கு முன் அலெக்ஸாண்டரியா நகருக்கு கீழே அதாவது கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் மீனவ கிராமம் ஒன்று அங்கு இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். ரகோடிஸ் என்ற அந்த கிராமத்தில் மீன்பிடித் தொழில் மும்முரமாக நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரகோடிஸ் கிராமத்தில் அதிகம் பேர் வசித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பு குறித்த விவரம், அமெரிக்க நில அமைப்பியல் சங்கம் வெளியிட்டுள்ள மாதாந்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ்
29-07-2007, 03:56 PM
தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி தொடர்ந்து தாருங்கள்

விகடன்
29-07-2007, 04:07 PM
பிருத்விராஜ் பாட்டீல் இனுடைய கதை சோகக்கதைதான். சக வயதினரைப்பார்க்கும் அந்தப் பாலகனின் உள்ளம் எப்படி சஞ்சலப்படும்.

குணமடைய பிரார்த்திப்போமாக ..... கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு

விகடன்
29-07-2007, 04:18 PM
வீதிவிபத்தை பார்க்கும்போதே தலை சுற்றுகிறது. காலத்தைத்தான் நொந்துகொள்ள முடியும்.


ரிசானாவின் நிலை ப*ரிதாப*த்திற்குரிய*தே.

aromabest
01-08-2007, 07:56 AM
கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்துதான் (ஃபிரிட்ஜ்) வாசனை வருவது தெரிய வந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேபாது அதில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர். அந்தப் பிணம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலையைச் செய்தது அந்த ஆணின் மனைவி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொல்லப்பட்ட நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். கொலை செய்த அந்தப் பெண் சரவாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர். விமானப் பணிப்பெண்ணாக அவர் பணியாற்றி வருகிறார். இதையடுத்து தீவிர வேட்டை நடத்திய போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுடன், அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலருக்கு வலை வீசப்பட்டுள்ளது. கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

aromabest
02-08-2007, 06:39 AM
1 http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_L_Printer01.jpg
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_L_Printer-02.jpg

சிகரெட் பிடிப்பதை விட லேசர் பிரிண்டரால் அதிக ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சில வகை லேசர் பிரிண்டர்கள் அச்சிடும்போது "டோனர்' எனப்படும் நுண்ணிய துகள்களை வெளியிடுகின்றன. இந்தத் துகள்கள் நாம் சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்றுவிடும். இதனால் சிகரெட் புகையால் விளையும் தீமையை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பேராசிரியர் லிடியா மொராவ்ஸ்காவை மேற்கொள்காட்டி "சிட்னி மார்னிங் ஹெரால்டு' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிகரெட் புகையில் வெளியாகும் துகள்களைப் போலவே லேசர் பிரிண்டர் துகள்களும் நுரையீரலுக்குள் செல்வதால் எரிச்சல், இதய நோய், புற்றுநோய் ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பல்கலைக்கழகத்தின் சர்வதேச காற்றின் தரம் மற்றும் சுகாதார ஆய்வகத்தில் 62 பிரிண்டர்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 17 பிரிண்டர்கள் "டோனர்' துகள்களை வெளியிடுபவையாக இருந்தது தெரியவந்தது.

"டோனர்' துகள்களை வெளியிடுவது பிரிண்டர் தயாரிப்பு நிறுவனம், பிரிண்டரை உபயோகிக்கும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

aromabest
02-08-2007, 03:18 PM
தூக்குக்கயிற்றை முத்தமிட இருக்கும் 17 வயது இளம் பெண்: குடும்பத்தை காப்பாற்ற சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவளின் சோகக்கதை

குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற 17 வயது பெண் ஒருத்தி, கொலை வழக்கில் சிக்கி, மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறாள். இலங்கையை சேர்ந்தவள் ரிசானா. 17 வயதான அவள் ஒரு மரம் வெட்டியின் மகள் ஆவாள். அவள் தந்தை முகமது சுல்தான் நபீக். இவர்கள் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது அவர்கள் வசித்த வீடு கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் தான் குடும்பத்துக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு செல்ல ரிசானா முன்வந்தாள். அவள் அந்த நாட்டுக்கு சென்றாள். சவுதி அரேபியா சென்ற 2 வாரங்களிலேயே அவள் வேலை பார்த்த வீட்டுக்காரர்கள் 4 மாதக்குழந்தையை அவள் பொறுப்பில் விட்டு விட்டு வெளியே சென்றனர். அப்போது அந்த குழந்தை இறந்து போனது. இதற்கு அவள் தான் காரணம் என்று கூறி அவள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. அதற்கு அவள் பால் குடித்த குழந்தையின் தொண்டையில் பால் அடைத்து கொண்டு அதன் காரணமாக அது இறந்து போனது என்று கூறினாள். ஆனால் அவள் சொன்னது கோர்ட்டின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவளுக்கு கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அவள் தலை துண்டிக்கப்பட இருக்கிறது.


மகளை காப்பாற்ற அவள் தந்தை முயற்சி செய்து வருகிறார். அவர் இலங்கை மந்திரியுடன் சவுதி அரேபியா சென்றார். அங்கு இறந்து போன குழந்தையின் உறவினர்களிடம் பேசி மன்னிப்பு பெற முயன்றார். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

அல்லாவிடம் பிரார்த்தனை

சவுதி அரேபியா நாட்டுச்சட்டப்படி, கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெறவேண்டுமானால், கொலையானவர்களின் குடும்பத்தினர் கொலையாளியை மன்னிக்க வேண்டும். இறந்து போன குழந்தையின் பெற்றோர்கள், ரிசானாவின் குடும்பத்தினரையும், இலங்கை அதிகாரிகளையும் சந்திக்க மறுத்து விட்டனர். என் மகளை காப்பாற்றும்படி அல்லாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இதை தவிர இப்போது வேறுவழி தெரியவில்லை என்கிறார் நபீக்.

இலங்கை மந்திரி உசேன் பைலா கூறுகையில், இது தொடர்பாக இறந்து போன குழந்தை எந்த பழங்குடி இனத்தை சேர்ந்ததோ, அந்த பழங்குடி இனத்தின் தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறோம். அவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் பேசுவார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரிஸ்வானா தூக்குமேடையில் இருந்து தப்பித்து விடுவாள் என்று தெரிவித்தார்.

விடுதலைக்காக அனைவரும் பிராத்திப்போம்.

aromabest
02-08-2007, 03:21 PM
விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டவர் வேன் மோதி பலி!

கரூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டவர், அந்த ஆம்புலன்ஸ் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோவில்பாளைய் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம். இவர் கோவை ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயக்கமானார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். காயமடைந்த சண்முகத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆண்டாங்கோவில் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது எதிரே வந்த மாருதி வேன் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் ஏற்கனவே காயமடைந்திருந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் கொடுமை என்னவென்றால் சண்முகத்தை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸின் டிரைவர், குடிபோதையில் இருந்ததுதான். அந்த டிரைவரும் விபத்தில் காயமடைந்தார்.

aromabest
05-08-2007, 08:44 AM
நாயகனைத் தேடிவந்த நட்புப் பறவை - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? (படம் இணைப்பு)
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/2_para1.jpg
மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள்.

குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அதிசயப் பறவை ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துநின்றது.
கடந்த மே மாதத்தில் இந்தப் புதிய பற வையை கண்டஇளைஞன் தங்கராஜா றேகன் அதனைப் பிடித்து கலைவாணி வீதியில் உள்ள வீட்டிற்குப் பிடித்துச் சென்று தனது செல்லப் பிராணியாக வளர்த்தார்.
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_para2.jpg
எனினும் பிராணிகள் வதையைத் தவிர்க்கும் நோக்குடன், பிரதேச செயலரின் ஆலோ சனைப்படி அந்தப் பகுதி கிராமசேவகர் முன்னிலையில் அந்தப் பறவை சுதந்திர மாகப் பறக்கவிடப்பட்டது.
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_para3.jpg
கட்டி வளர்க்கப்பட்டிருந்தாலும், வேறு சூழலில் வாழ்ந்திருந்தாலும் தனது வளர்ப் போனிடம் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஐந்து அடி நீள இறக்கைகள் கொண்ட அந்த அதிசயப் பறவை. கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி தனது செல்லப்பறவை தன்னைத் தேடி தனது வீட்டுக்கு வந்ததாக மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் இளைஞன் றேகன்.

அதிசப் பறவையைத் தான் கட்டி வளர்ப் பதில்லை என்றும், இரவில் வீட்டில் உள்ள மரம் ஒன்றில் உறங்கச் சென்று காலையில் இறங்கி வீட்டிற்குள் வந்துவிடும் என்றும் கூறுகிறார் அவர்.

நாளாந்தம் சுமார் மூன்று கிலோ மீனை அதற்கு உணவாக வழங்குவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

aromabest
05-08-2007, 06:57 PM
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_iphone.jpg

ஐபோன் (iPhone)

அதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_iphone_2.jpg
இதன் விலை $499 (251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.

விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் தடம்பதிக்கப் போகின்றது.

iTunes music & Video களஞ்சியத்துடன் செயற்படக்கூடியதாக இருப்பதால் இன்னமும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பா, மற்றும் உலகின் மற்றய பகுதிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை!!!

aromabest
05-08-2007, 07:01 PM
யாகூ மெயிலில் சாட்டிங்

ஜீமெயில் போல யாகூவும் உள்ளமைந்து சாட் வசதியை ஏற்படுத்தியுள்ளது. காலை யாகூ மெயிலைப் பார்த்த போது இதைக் கண்டுகொண்டேன். கீழே திரைக்காட்சியை இணைத்துள்ளேன் பாருங்கள்!!!!!
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_yahoochat.jpg
இதன் மூலம் யாகூ அதிகளவு பயர்களை யாகூ சாட்டுக்குப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை!!!

aromabest
08-08-2007, 08:55 AM
சட்டை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும் மொபைல்!

மொபைல் போன், சார்ஜ் தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான்! பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, பேஸ்மேக்கர் கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், சார்ஜ் செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். பேஸ் மேக்கர் கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், பேஸ்மேக்கர் இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, பேஸ் மேக்கர் கருவியில், மிகச்சிறிய அளவில், ஜெனரேட்டர் கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, பேஸ் மேக்கரில் சக்தி வாய்ந்த, ஜெனரேட்டர் இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், சார்ஜ் செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள்.


பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், ஜெனரேட்டர் கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவோர், சார்ஜ் செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, ஜெனரேட்டர் இயங்கி, மின்சக்தியை தந்து, சார்ஜ் செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும்.

aromabest
20-09-2007, 03:51 PM
http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_Star_Pallam.jpg
நட்சத்திர கல் வீழ்ந்ததால் ஏற்பட்ட பள்ளம்
படத்தில் இருக்கும் பள்ளம் பேரு நாட்டில் புனோ பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் தோண்டியது அல்ல. சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து எரி நட்சத்திர கல் விழுந்ததால் இப்பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவம் நடந்ததில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு தலைவலி, சுவாச கோளாறு போன்றவை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இப்போது பலரும் நட்சத்திரம் விழுந்த இடத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

சூரியன்
20-09-2007, 03:57 PM
மிகவும் அரிய தகவல்கள்..
நன்றி தோழரே..தொடருங்கள் உங்கள் பணியை..

என்னவன் விஜய்
20-09-2007, 04:19 PM
அறிந்து கொண்டேன் பல அரிய தகவல்களை
நன்றி நண்பரே

அறிஞர்
20-09-2007, 04:30 PM
வாவ்.. புது புதுத்தகவல்கள்...

இன்னும் உம் வாசனை (செய்திகள்).... எங்கும் பரவட்டும் நண்பரே..

ஜெயாஸ்தா
10-10-2007, 02:52 PM
பல கேள்விப்படாத புதிய தகவல்களை படத்துடன் தந்திருக்கிறீர்கள் அரோமா. தொடருங்கள்.

aromabest
31-05-2008, 08:27 PM
எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டவர் பெண்ணாக மாறுகிறார

எய்ட்ஸ் மருந்து சாப்பிட்டு வருபவர், பெண்ணாக மாறி வருகிறார்; அவருக்கு மார்பகம் உருவாகி, பெரிதாகி வருகிறது.மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரை சேர்ந்தவர் சனஜோபா; வயது 38.
இவருக்கு எய்ட்ஸ் அறிகுறி இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் நிலை எய்ட்ஸ் தடுப்பு மருந்துகளை இவர் சாப்பிட்டு வந்தார். ஓராண்டு இந்த மருந்துகளை சாப்பிட்டுவந்த சனஜோபா உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவரின் மார்பு திடீரென பெரிதாக ஆரம்பித்தது; பெண் களை போல மார்பகம் வளர்ந்து வருகிறது.

இதையடுத்து, அவர் போக்கிலும் மாற்றம் ஏற்பட் டது. ஆண்களுடன் பேசுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதையறிந்த டாக்டர்கள், இவரை வரவழைத்து பரிசோதித்துப்பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. "மருத்துவ வரலாற்றில்மிகவும் அரிதான வளர்ச்சி இது. டில்லியில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தான் இவரை பரிசோதித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்' என்று கூறினர்.எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் தலைவர் பிரியோகுமார் கூறுகையில்," எய்ட்ஸ் மருந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பகம் பெரிதாக வாய்ப்பு அதிகம். ஆனால், ஆணுக்கு இப்படி மார்பகம் வளர்ந்துள்ளது இது தான் முதன் முறை' என்று தெரிவித்தார்.எய்ட்ஸ் மருந்தால் தான், இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

aromabest
31-05-2008, 08:39 PM
பிரேஸ் காட்டுக்குள் மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின் இனம் எதுவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஹெலிகப்டரில் இருந்து படம் எடுக்கும் போது அவர்கள் அதை நோக்கி அம்பெறிந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேஸில் நாட்டின் ஏக்கர் மாநிலத்தின் பெரு நாட்டின் எல்லைப்பகுதியில் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_30_01.jpg

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_30_02.jpg

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_30_03.JPG

http://www.tamilmantram.com/photogal/images/1692/medium/1_30_04.jpg



தொகுக்கப் பட்டவைகள்

aromabest
31-05-2008, 08:46 PM
இறந்த பெண் உயிருடன் 17 மணி நேரத்தில் எழுந்தார்
[ Tuesday, 27 May 2008,

மூளை முடங்கி விட்ட நிலையில், இறந்து விட்டதாக டாக்டரால் அறிவிக்கப்பட்ட பெண், 17 மணி நேரத் திற்கு பின் உயிருடன் எழுந்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அமெரிக்காவில், மேற்கு விர்ஜினியா மாநிலத்தில் கார்ல்ஸ்டன் பகுதியை சேர்ந்தவர் விலா தாமஸ் வயது 59. இரண்டு முறை மாரடைப்பு வந்து உயிர் மீண்டவர். சமீபத்தில் அவருக்கு மூளை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அவருக்கு "சுவாச சாதனத்தின்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மூளையில் எந்த அதிர்வும் இல்லாததை அடுத்து, டாக்டர்கள் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

ஆனால், உறவினர்கள் நம்பவில்லை. சில மணி நேரம் மருத்துவமனையில் வைத்திருந்து சிகிச்சை அளிக்கும் படி கூறினர். அதன் படி, 17 மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் மூளையில் எந்த அதிர்வும் இல்லாததால், அவர் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர் உடலில் இருந்து ஒயர்கள் நீக்கப்பட்டு, செயற்கை சுவாச மிஷின் அகற்றப்பட்டது. 10 நிமிடம் ஆன நிலையில், படுக்கையில் இருந்த தாமஸ் கால்கள் அசைய ஆரம்பித் தன. இதனால், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்டர்களை அழைத்து பரிசோதித்தனர். எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அதிசயம் நடந்தது. நோயாளி விலா தாமஸ், திடீரென கண்களை திறந்தார். கைகளை அசைத்து, தன் உறவினர்களை அழைத்தார். அவர்களுடன் பேசவும் செய்தார். டாக்டர்கள் நம்பவே முடியாமல் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டனர். படுக்கையில் எழுந்து உட்கார்ந்த விலா தாமஸ் கூறுகையில்,"கடவுள் என்னை அழைக்க மாட்டார் என்று தெரியும். அவர் எனக்கு காட்டிய கருணை தான், நான் உயிருடன் இருக்க காரணம்' என்று கூறினார். "உடலில் வெப்ப சக்தி பரவியதும், விலா தாமஸ் மூளையில் அதிர்வுகள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளன. அவர் உயிர் மீண்டது எப்படி என்பது அவரை முழுமையாக பரிசோதித்தால் தான் தெரியவரும்' என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.