இனியவள்
16-07-2007, 12:56 PM
முட்களாய் நீ என்னைக் குத்த
மலராய் உன் நினைவுகள்
என்னை வருடிச் செல்கின்றன....
நீ தந்த அழகிய உயிரற்ற
பரிசுப்பொருட்கள் அனைத்தும்
உயிர்பெற்றென்னை தள்ளுகின்றன
சோகக்கடலிலே.....
காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் உன்னை
மீண்டுமடைய காற்றை நூலாக்கி
விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை....
மேகமாய் இருக்கும் என்
சோகத்தை காற்றாய் மாறி
கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமை
போல் நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்....
உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...
நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....
மலராய் உன் நினைவுகள்
என்னை வருடிச் செல்கின்றன....
நீ தந்த அழகிய உயிரற்ற
பரிசுப்பொருட்கள் அனைத்தும்
உயிர்பெற்றென்னை தள்ளுகின்றன
சோகக்கடலிலே.....
காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் உன்னை
மீண்டுமடைய காற்றை நூலாக்கி
விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை....
மேகமாய் இருக்கும் என்
சோகத்தை காற்றாய் மாறி
கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமை
போல் நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்....
உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...
நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....