இனியவள்
15-07-2007, 01:19 PM
உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம்
பகிர்ந்த என்னால் பிரிவை
சொல்ல முடியவில்லை...
உன் முகத்தில் இருக்கும்
சாந்தம் என்னை கட்டிப்
போட்டு விடும் அன்பே...
உன் பூ முகத்தில்
மகிழ்ச்சி என்னும் தேனை
அருந்திவிட்டு பிரிவு
என்னும் விஷத்தை
பரிசளித்துச் செல்ல
வந்துள்ள வண்டு நான் என்று
கூற என் இதயத்தின்
ஓர் ஒரத்தில் கசிந்து
கொண்டிருக்கும் ஈரம்
இடம் கொடுக்க வில்லை.....
பிரித்து விடுவேன் எனதுயிரை
உடலை விட்டு பிரிவென்ற ஒர்
அரக்கம் நம்மிடையே புகுந்து
அரசு செய்யும் காலம் வந்தால்
எனக்கு கூறிய நானே இன்று
பிரிவென்ற அஸ்திரத்தைக் கையில்
எடுக்கின்றேன் என் குடும்பத்திற்காக.....
உன் கரத்தை விட்டுப் பிரியாத
என் கரத்தை பிரிக்கின்றேன் இன்று
முதல் வேறொருத்தி கரம் பிடிக்க...
என் நினைவுகளை உதறித் தள்ளி
விடு உன் உயிரில் சென்று ஆட்சி
செய்வதற்கிடையில்......
நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....
உன் வலிகளை என்னுள்
உள்வாங்கி சந்தோஷத்தை
அள்ளித் தந்த நானே − இன்று
உனக்கு அழிவில்லா துன்பத்தை
தந்து விட்டு செல்வேன் என
கனவில் கூட நினைக்கவில்லையே....
காதலர்கள் என்னும் பட்டத்திலிருந்து
தம்பதிகள் என்னும் பந்தத்தை
உருவாக்கி கனவுலகில் மின்மீன்கள்
போல் மிதந்து கொண்டிருக்கின்றாய் − நீ
ஆனால் இன்று முதல் உன் முன்னாள்
காதலன்.....
மன்னிப்பு என்ற ஒர் வார்த்தைக்கு
அருகதையற்றவன் நான் ஆனாலும்
உன் கால் பணிந்து மன்னிப்பு என்னும்
வரம் கேட்கின்றேன் மன்னித்து விடு
பெண்ணே.......
உன் திருமண செய்தியே என்
மன்னிப்பு வரமாக வருமென
காத்துக்கொண்டிருப்பேன் .
உன் நல்வாழ்வை விரும்பும் அந்நாள் காதலன்
இந்நாள் நலன் விரும்பி.......
காதலனே உன் கடிதம் கண்டு
கொக்கலித்த என் மனம் உன்
செய்தி கண்டு செயலிழந்து
விட்டது....
உன் திருமண செய்தி தாங்கி
வந்த கடிதம் கண்டு கண்ணீர்
விட்ட கண்கள் இன்று ஒளி
வீசிக் கொண்டிருக்கின்றன
வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை
என்பதனை அறிந்து கொண்டதில்...
தோல்விகளை வெற்றியாக
பண்டமாற்று செய்ய சொல்லித்
தந்தவனே நீ தானே உன் பிரிவு
எனக்கு பெரும் துயர் அன்பே
அத் துயரைக் கூட இன்பமாய்
மாற்ற நீ கற்றுத் தந்த வித்தை
என்னிடம் நிறைய இருக்கின்றது...
நீ என்னை ஏமாற்றியதற்காக
இன்னொருவரை ஏமாற்ற நான்
ஒன்றும் கொடுரமானவள் அல்லவே
ஒரு நாளில் ஒரு நிமிடத்தில் உன்
நினைவு என்னை மேகம் போல்
சூழாமல் இருக்கும் பட்சத்தில்
என் மனதை பரிபூரணமாய்
கையளிப்பேன் என்னைப் புரிந்து
கொண்டவனிடம்....
இப்படிக்கு முன்னொரு காலத்தில்
உன் இதயத்தில் குடி கொண்டவள்
என் காதலை உன்னிடம்
பகிர்ந்த என்னால் பிரிவை
சொல்ல முடியவில்லை...
உன் முகத்தில் இருக்கும்
சாந்தம் என்னை கட்டிப்
போட்டு விடும் அன்பே...
உன் பூ முகத்தில்
மகிழ்ச்சி என்னும் தேனை
அருந்திவிட்டு பிரிவு
என்னும் விஷத்தை
பரிசளித்துச் செல்ல
வந்துள்ள வண்டு நான் என்று
கூற என் இதயத்தின்
ஓர் ஒரத்தில் கசிந்து
கொண்டிருக்கும் ஈரம்
இடம் கொடுக்க வில்லை.....
பிரித்து விடுவேன் எனதுயிரை
உடலை விட்டு பிரிவென்ற ஒர்
அரக்கம் நம்மிடையே புகுந்து
அரசு செய்யும் காலம் வந்தால்
எனக்கு கூறிய நானே இன்று
பிரிவென்ற அஸ்திரத்தைக் கையில்
எடுக்கின்றேன் என் குடும்பத்திற்காக.....
உன் கரத்தை விட்டுப் பிரியாத
என் கரத்தை பிரிக்கின்றேன் இன்று
முதல் வேறொருத்தி கரம் பிடிக்க...
என் நினைவுகளை உதறித் தள்ளி
விடு உன் உயிரில் சென்று ஆட்சி
செய்வதற்கிடையில்......
நிகழ்காலம் என்னும் அழிப்பான்
கொண்டு அழித்து விடு − நம்
காதல் என்னும் கடந்த காலத்தை....
உன் வலிகளை என்னுள்
உள்வாங்கி சந்தோஷத்தை
அள்ளித் தந்த நானே − இன்று
உனக்கு அழிவில்லா துன்பத்தை
தந்து விட்டு செல்வேன் என
கனவில் கூட நினைக்கவில்லையே....
காதலர்கள் என்னும் பட்டத்திலிருந்து
தம்பதிகள் என்னும் பந்தத்தை
உருவாக்கி கனவுலகில் மின்மீன்கள்
போல் மிதந்து கொண்டிருக்கின்றாய் − நீ
ஆனால் இன்று முதல் உன் முன்னாள்
காதலன்.....
மன்னிப்பு என்ற ஒர் வார்த்தைக்கு
அருகதையற்றவன் நான் ஆனாலும்
உன் கால் பணிந்து மன்னிப்பு என்னும்
வரம் கேட்கின்றேன் மன்னித்து விடு
பெண்ணே.......
உன் திருமண செய்தியே என்
மன்னிப்பு வரமாக வருமென
காத்துக்கொண்டிருப்பேன் .
உன் நல்வாழ்வை விரும்பும் அந்நாள் காதலன்
இந்நாள் நலன் விரும்பி.......
காதலனே உன் கடிதம் கண்டு
கொக்கலித்த என் மனம் உன்
செய்தி கண்டு செயலிழந்து
விட்டது....
உன் திருமண செய்தி தாங்கி
வந்த கடிதம் கண்டு கண்ணீர்
விட்ட கண்கள் இன்று ஒளி
வீசிக் கொண்டிருக்கின்றன
வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை
என்பதனை அறிந்து கொண்டதில்...
தோல்விகளை வெற்றியாக
பண்டமாற்று செய்ய சொல்லித்
தந்தவனே நீ தானே உன் பிரிவு
எனக்கு பெரும் துயர் அன்பே
அத் துயரைக் கூட இன்பமாய்
மாற்ற நீ கற்றுத் தந்த வித்தை
என்னிடம் நிறைய இருக்கின்றது...
நீ என்னை ஏமாற்றியதற்காக
இன்னொருவரை ஏமாற்ற நான்
ஒன்றும் கொடுரமானவள் அல்லவே
ஒரு நாளில் ஒரு நிமிடத்தில் உன்
நினைவு என்னை மேகம் போல்
சூழாமல் இருக்கும் பட்சத்தில்
என் மனதை பரிபூரணமாய்
கையளிப்பேன் என்னைப் புரிந்து
கொண்டவனிடம்....
இப்படிக்கு முன்னொரு காலத்தில்
உன் இதயத்தில் குடி கொண்டவள்