PDA

View Full Version : வணிக செய்திகள்(தமிழக அரசு NO: 1)



namsec
15-07-2007, 04:37 AM
அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவில் 'இ-டிக்கெட்'

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், வரும் செப்டம்பர் மாதம் 'இ-டிக்கெட்' முறையை அறிமுகப் படுத்த விரைவு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் 955 பஸ் சேவைகளை மாநிலம் முழுவதும் இயக்கி வருகிறது. சாதாரண விரைவு பஸ்களை விட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பினும், பயணிகள் இப்பஸ்களில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்டவரிசையில் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்தினால், பயணிகளுக்கு சிரமங்கள் குறைவதோடு, டிக்கெட் விற்பனையும் 35 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

ஆன்- லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய விரைவு போக்குவரத்துக் கழகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரயில்களில் கம்ப் யூட்டர் மூலம் முன்பதிவு செய்வதை போல, இம்முறையில் எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு எளிதாக பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் மையங்கள் பெங்களூரு, கோவை, ஈரோடு, ஓசூர், கோயம்பேடு, கும்பகோணம், கன்னியாகுமரி, மதுரை, மார்த்தாண்டம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி, ராமேஸ்வரம், செங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவனந்தபுரம், திருப்பதி, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட 24 மையங் களில் 34 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டன. இதில் சில மையங்களைத் தவிர மற்ற இடங்களில் ஆன்-லைன் வசதி உண்டு. தினமும் ஐந்து ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் குறித்து மேலாண்மை இயக்குனர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:

ஆன்- லைன் மூலம் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

சென்னை கோயம் பேடு மையத்தில் நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த கவுன்ட்டர்களில் தினமும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றன.

ஆன்-லைன் திட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக செயல்பட துவங்கியவுடன், 'இ-டிக்கெட்' திட்டத்தையும் செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 'இ-டிக்கெட்' நடைமுறைக்கு வந்தவுடன் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கான டிக்கெட் டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆம்னி பஸ்களை மிஞ்சும் வகையில் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் 200 புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் 50 பஸ்கள் குளிர்சாதன வசதிகளோடு பயணிகளை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

நன்றி தினமலர்

namsec
16-07-2007, 05:30 AM
சிங்கப்பூர் கம்பெனியை வாங்கியது 'விப்ரோ'

சிங்கப்பூரில் உள்ள பிரபல அழகு சாதன நிறுவனமான, 'அன்சா'வை விலைக்கு வாங்கி விட்டது, இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் 'விப்ரோ'.சாப்ட்வேர் நிறுவனம், 'விப்ரோ' நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புக்காக, 'விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங்' நிறுவனத்தை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனமான, 'அன்சா' பல கோடி ரூபாய் மதிப்புக்கு, அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தை, இரண்டு மாதம் முன்பே, விப்ரோ வாங்கிவிட்டது. ஆனால், அதை மூச்சு காட்டாமல் இருந்தது. இந்த நிறுவனத்தை வாங்கவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இப்போது, சிங்கப்பூர் நிறுவனத்தை வாங்கியதை உறுதிப்படுத்தி விட்டது.இந்த சிங்கப்பூர் நிறுவனத்தை வாங்க, இந்தியாவின் பிரபலமான டாபர், இமாமி, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களும் போட்டி போட்டன. யுனிலிவர், கால்கேட் பாமலிவ், சாரா லிவ் போன்ற நிறுவனங் களும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இவ்வளவு போட்டி இருக்கும் போது, திடீரென விப்ரோ வாங்கியது யாருக்கும் தெரியாமல் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் தான் உறுதியான தகவல் தெரியவந்துள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தை விப்ரோ நிறுவனம், ரூ.1250 கோடி தொகை கொடுத்து வாங்கியுள்ளது. வெளிநாட்டு அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனமான சிங்கப்பூர் நிறுவனத்தை விப்ரோ வாங்கியிருப்பது பலரையும் வியப் படைய வைத்துள்ளது.

நன்றி தினமலர்

namsec
19-07-2007, 12:59 PM
எரிக்ஸன் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவின் பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், சுவீடனின் எரிக்ஸன் நிறுவனத்துடன் ரூ.8 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில், தனியார் நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பது இதுவே முதல் முறை. தங்களது தகவல் தொழில் விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் அஹில் குப்தா தெரிவித்தார். இந்தியாவில் 15 இடங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அமைக்கும் ஜிஎஸ்எம் நெட்வொர்க் சேவையை, எரிக்ஸன் நிறுவனம் திட்டமிட்டு, வடிவமைத்து, நிறுவி, நிர்வாகம் செய்யும் என்பது போன்ற விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. பி எஸ் என் எல் நிவுவனம் ஏற்கனவே தங்களது நெட்வொர்க் சேவை விரிவாக்கத்திற்காக எரிக்ஸன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பின் அது சிக்கலாகிப்போனதை அடுத்து பார்தி ஏர்டெல் நிறுவனம் அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

நன்றி தினமலர்

namsec
19-07-2007, 01:00 PM
சென்னையில் அடுத்தாண்டு 8வது சர்வதேச தொழில் கண்காட்சி
சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள அக்மி கண்காட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (அய்மா) மற்றும் அய்மா தொழில்நுட்ப மையம் (ஏ.டி.சி.,) ஆகியவற்றின் சார்பில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.அடுத்தாண்டு ஜூன் மாதம் 19 முதல் 23ம் தேதி வரை சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கவுள்ள இக்கண்காட்சிக்கு ஐ.டி.பி.ஓ., அங்கீகாரம் வழங்கி உள்ளது. கண்காட்சியில் 15 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் வர்த்தகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சிவா.ஜி
19-07-2007, 01:17 PM
எல்லாமே எனக்குத்தெரியாத புது விஷயங்கள் நாம்செக் அவர்களே. புதிய செய்திகளை தெரிந்துகொள்ள உதவியதற்கு மிக்க நன்றி.

namsec
20-07-2007, 05:08 AM
ரூபாய் மதிப்பு உயர்வால் ஐ.டி., தொழிலுக்கு பாதிப்பா? விப்ரோ நிறுவன தலைவர் பிரேம்ஜி பேட்டி

""இந்திய தகவல் தொழில்நுட்பத் தொழிலின் தரம் சிறந்தது என்றும் நிலையானது என்றும்'', விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி தெரிவித்தார்.

டாலருக்கு நிகரான மாற்று மதிப்பில் ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால், அமெரிக்காவில் இருந்து வரும் மென்பொ ருள் வர்த்தகம் பாதிப்பாகும் என்ற கவலையும் தேவையற்றது என்று குறிப்பிட்டார். மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது விப்ரோ நிறுவனம். நாடு முழுவதும் உள்ள முன்னணி "சாப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனங்கள்' மொத்தம் இருபது. அதில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ என்று மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனம். இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, விப்ரோ நிறுவனத்தின் வருவாய் ரூ. 725.6 கோடியாக அதிகரித்துள்ளது. ஆயினும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், லாப மதிப்பு 17 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்ததைவிட குறைவு என்று அந்நிறுவனம் கருதுகிறது. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி இது குறித்து கூறுகையில், ""கடந்த காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி திருப்திப்படும்படி உள்ளது. புவியியல் எல்லைகளைத் தாண்டி எங்களின் வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களுடைய சேவை, தொழில்நுட்ப கட்டுமான சேவை மற்றும் மென் பொருள் சாதனம் ஆகியவை ஆண்டுதோறும் 50 சதவீத வளர்ச்சி அடைந்து வருகின்றன. வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள இரண்டாவது காலாண்டில் எங்களுடைய வருவாய் ரூ. 3,263.40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

""சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனத்தின் 65 சதவீத வருவாய் அமெரிக்காவிலிருந்தும், 30 சதவீதம் ஐரோப்பாவிலிருந்தும் வருகிறது. ""டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ள காரணத்தால், இந்தியாவில் நிறுவனங்கள் அமைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு சென்று விடுமோ என்று இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கவலைப் படதேவையில்லை.

""பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, பிலிப்பைன்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றில் ஏற்கனவே கிளைகளை துவக்கியுள்ளன. டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பு குறைவாக இருக்கும் வியட்நாம் போன்ற நாடுகளில் கிளைகளை பரப்ப அவை முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இவற்றால் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படாது. ஏனெனில், நிலைத் தன்மை, தரம், தலைமைப்பண்பு, அறிவுத் திறன் ஆகியவற்றில் மற்ற நாடுகளை விட இந்திய தகவல் தொழில்நுட்ப துறை முன்னணியில் உள்ளது,'' என்று கூறினார். தவிரவும் தன் மூத்த மகன் ரிஷத் பிரேம்ஜி வர்த்தக வளர்ச்சி நிர்வாகியாக நேற்று முன்தினம் சேர்ந்ததாகவும், அதற்கு முறையான ஒப்புதலை கம்பெனி நிர்வாகம் தந்தது என்றும் குறிப்பிட்டார்.


நன்றி தினமலர்

தங்கவேல்
20-07-2007, 05:21 AM
அண்ணா, அசத்துங்க... தமிழ் மன்றத்தூண் ஆகிவிட்டீர்கள்..

namsec
20-07-2007, 05:34 AM
அண்ணா, அசத்துங்க... தமிழ் மன்றத்தூண் ஆகிவிட்டீர்கள்..

வாழ்த்துக்கு நன்றி தூண் ஆனால் மட்டும் போதுமா உதவியாளர் ஆக வேண்டாமா

namsec
21-07-2007, 06:09 AM
சென்செக்ஸ் உயர்வு சிதம்பரம் எச்சரிக்கை

''பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மதிப்பீடுகளை முழுவதுமாக நம்ப வேண்டாம்,'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.மும்பைப் பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவியல் மற்றும் நுண்தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வு என்பது சில முக்கிய நிறுவனங்கள் வளர்ச்சியை குறிப்பிடும் அளவீடுதானே தவிர, அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தின் அளவீடு அல்ல. ஏனெனில், பங்குச் சந்தை சென்செக்ஸ் மதிப்பீட்டில், விவசாயம் மற்றும் இதர துறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் பாரத ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றியுள்ளது. பொருளாதார வளர்ச்சியால் தான் பணவீக்கம் ஏற்படுகிறது. வருங்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும். ஆனால், அது சரியான வீதத்தில் தான் இருக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

namsec
22-07-2007, 05:34 AM
பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும். இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை. இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.
இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது. இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி - வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி தினமலர்

namsec
23-07-2007, 03:23 AM
கோடி கோடியாய் கொட்டுது அன்னிய முதலீடு * தொழில் வளர்ச்சியில் ஒளிர்கிறது தமிழகம்

கடந்த ஓராண்டில் மட்டும் 12 ஆயிரத்து 535 கோடி ரூபாய் என்ற அளவில் தமிழகத்திற்கு நேரடி அன்னிய முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் துவங்க இருப்பதால், பல லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.தகவல் தொழில் நுட்பம், வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு தொழில்கள் உலக அளவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த துறைகளில் புதிதாக தொழில் துவங்க கடந்த சில ஆண்டுகளாக பல அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. தட்ப வெப்ப நிலை, சாலை மற்றும் போக்குவரத்து வசதி, துறைமுகம், விமான நிலையம், இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் 12 ஆயிரத்து 535 கோடி என்ற அளவில் தமிழகத்தில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது இதற்கு சிறந்த உதாரணமாகும்.மொபைல் போன் உற்பத்தியில் பெயர் பெற்ற மோட்டரோலா நிறுவனம் 135 கோடி ரூபாய் செலவில், 'ஹேன்செட்ஸ்' தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி ஒப்பந்தம் செய்தது. அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் 520 கோடி ரூபாய் முதலீட்டில், 'ரேடியல் டயர்' தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒப்பந்தம் செய்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'டெஸ்ஸால்வ்' நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தொழிற் சாலை துவங்க ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஒப்பந்தம் செய்தது. 'டெல்' நிறுவனம் 280 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதே போல் 300 கோடி ரூபாய் செலவில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை துவங்க, 'தாய்வான்' நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 'சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் செலவில் வாஷிங் மெஷின், 'டிவி', ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.ஒரகடம் பகுதியில் ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் மஹிந்திரா கார் தொழிற்சாலை நான்காயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த முதலீடு முழுமை அடையும். மோட்டார் வாகன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்க ஆயிரத்து 500 கோடியும், ஒரகடத்தில் கனரக வாகன தயாரிக்கும், 'கோமட்சு' நிறுவனம் 75 கோடியும் முதலீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு வன்பொருள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் கடந்த மாதம் 225 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. மூன்றாயிரத்து 750 கோடி முதலீட்டில் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கடந்த மே மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வகையில் மொத்தம் 12 ஆயிரத்து 535 கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டிய நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இந்த வகையில் கூடுதலாக 10 ஆயிரத்து 575 கோடி ரூபாய் முதலீடு கிடைக்க உள்ளது. 10 இடங்களில் தொழிற்பேட்டைகள் :தமிழகத்தில் 2007-08ம் ஆண்டில் 10 இடங்களில் புதிய தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பொல்லுபல்லி, பர்கூர் பாகம் 2, ஒரகடம் (காஞ்சிபுரம்), கக்கலூர் (திருவள்ளூர்), சங்ககிரி (சேலம்), சேடபட்டி (மதுரை), மொடகுறிச்சி (ஈரோடு) ஆகிய இடங்களில் புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப் பட்டு வருகின்றன.

நன்றி தினமலர்

namsec
31-07-2007, 04:01 PM
இந்தியாவில் அமைக்கிறது போயிங் விமான கம்பெனியின் ஒர்க் ஷாப்

புதுடில்லி : உலகின் மிகப்பெரிய விமான கம்பெனியான போயிங் நிறுவனம், இந்தியாவில் அதற்கென்று ஒர்க் ஷாப் அமைக்கிறது. எம் ஆர் ஓ என்று அழைக்கப்படும் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஓவர்ஹவுல் வேலைகளை செய்வதற்காக இந்தியாவில் நாக்பூரில் அது ஒர்க்ஷாப் அமைக்கிறது. இதற்காக நாக்பூரில் இருக்கும் சிறப்பு பொருளாதார மையத்தில் 75 ஏக்கர் நிலத்தை அந்த கம்பெனி தேர்வு செய்துள்ளது. 10 கோடி டாலர் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீட்டில் அமைய இருக்கும் ஒர்க்ஷாப்பிற்கான வேலைகள் இந்த ஆண்டு துவங்கும் என்று அந்த கம்பெனி வைஸ் பிரஸிடென்ட் ( விற்பனை ) தினேஷ் கேஸ்கர் தெரிவித்தார். இந்த கம்பெனியில் போயிங், ஏர் - இந்தியா மற்றும் இன்னொரு கம்பெனி ஆகியவை பார்ட்னராக இருப்பர். அந்த மூன்றாவது பார்ட்னரை தேடும் வேலை நடந்து வருகிறது. ஏற்கனவே எம் ஆர் ஓ தொழிலில் அனுபவம் உள்ள பல கம்பெனியினரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். போயிங் கம்பெனியிடம் 68 விமானங்களுக்கு ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த ஒர்க்ஷாப்பை போயிங் அமைக்கிறது. இந்த ஒர்க்ஷாப்பில் விமானங்களை பெரிய அளவில் சோதித்து பார்க்கவும், ரிப்பேர் வேலைகள் பார்க்கவும் முடியும். இங்கு ஏர் இந்தியா வை சேர்ந்த விமானங்கள் மட்டும் அல்லாமல், மற்ற நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானங்களையும் சர்வீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தியாவில் ஏர் இந்தியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட், ஜெட்லைனர் போன்ற நிறுவனங்களில் இருந்து இப்போதே போயிங்கிற்கு 141 விமானங்களுக்கு ஆர்டர்கள் இருக்கின்றன. இந்தியன் ஏர்போர்ஸ் கூட வி.ஐ.பி.களின் பயணத்திற்காக 3 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. மேலும் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான கம்பெனிகளுக்கு 911 புதிய விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் கணக்கிட்டுள்ளது. இது 8 ஆயிரத்து 600 கோடி டாலர் ( சுமார் 34 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ) மதிப்புள்ளது.

நன்றி தினமலர்

namsec
01-08-2007, 07:34 AM
போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் * ரயில்வே - அஞ்சல் துறை ஒப்பந்தம்

இனி அஞ்சலகங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அமைச்சகங்களுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.
ரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடும் கூட்டத்தை குறைப்பதற்காகவும், பயணிகளின் வசதி கருதியும் ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரயில் டிக்கெட் முன் பதிவு வசதியை, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜா முன்னிலையில் நேற்று டில்லியில் கையெழுத்தானது. இதையடுத்து, இம்மாதம் 15ம் தேதியில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மூலமாக பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை பெற முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டு அமைச்சகங்களும் பகிர்ந்து கொள்ளும். முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 30 முக்கிய அஞ்சலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சலகங்கள் மூலமாக முன்பதிவு டிக்கெட்டுகளை பெற, ரூ. 15லிருந்து ரூ. 30 வரை சேவைக் கட்டணம் பெறப்படும். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி மற்றும் இருக்கை டிக்கெட்டுக்கு ரூ. 15ம், ஏசி 3 டயர் மற்றும் 'சேர் கார்' டிக்கெட்டுக்கு ரூ. 20ம், ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். பயணிகளின் வீட்டுக்கே சென்று டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவானது. அஞ்சலகங்களின் வளர்ச்சிக்கும், அவற்றுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் பணியாளர்களை நியமிப்பதற்காகவும் தான் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி, தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் கம்ப்யூட்டர் மூலமான பயணி முன்பதிவு முறை (பி.ஆர்.எஸ்.,) கவுன்டர்கள் மூலமாக அஞ்சல் துறை ரயில்வே டிக்கெட்டுகளை வழங்கும். இவை, 'இந்திய அஞ்சல் பி.ஆர்.எஸ்., மையங்கள்' என்ற பெயரில் செயல்படும். முதல் கட்டமாக நாடு முழுவதும் 30 அஞ்சலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஐகோர்ட் அஞ்சலகம், ஸ்ரீபெரும்புதூர் அஞ்சலகம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கு தேவையான 'ஹார்டுவேர்' மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ரயில்வே அமைச்சகம் வழங்கும். இட வசதி, பணியாளர்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை அஞ்சல் துறை கவனித்துக் கொள்ளும். எதிர்காலத்தில், இ-டிக்கெட்டுகளை வழங்கும் வசதியும் சில அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:நாட்டில் அனைத்து இடங்களிலும் அஞ்சலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது வசதியாக இருக்கும். குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்கள் இல்லாத இடங்களில் கூட அஞ்சலகங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். அஞ்சலகங்களை ரயில்வே துறை பயன்படுத்துவது போல நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அஞ்சல்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறையின் சேவையை அஞ்சல் துறையும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நண்பன் என்ற சமூக பொறுப்பை அஞ்சல் துறை நிறைவேற்றியுள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா பேசினார்.


நன்றி தினமலர்

namsec
01-08-2007, 07:42 AM
இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான யு.டி.ஐ. (UTI) வங்கியின் பெயர் ஆக்ஸிஸ் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 30ம் தேதி திங்கட்கிழமையில் இருந்து இந்த பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

namsec
04-08-2007, 03:36 PM
மகேந்திரா அண்டு மகேந்திரா வாகன விற்பனை 46 சதவீதம் அதிகம்


மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் இந்த வருட ஜூலையில் 19,163 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை விற்பனையை விட 46 சதவீதம் அதிகம். ஆனால் ஏற்றுமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 655 வாகனங்களை ஏற்றுமதி செய்த அந்த நிறுவனம், இந்த ஆண்டு ஜூலையில் 627 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

namsec
09-08-2007, 05:05 AM
'இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப வர்த்தகத்தை அமைத்து கொள்ளுங்கள்' * சிதம்பரம் வேண்டுகோள்

ரூபாய் மதிப்பின் உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட மீண்டும் சலுகை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்றபடி தங்களுடைய வர்த்தகத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு டாலருக்கு ரூ.45 என்ற நிலையில் இருந்த ரூபாயின் மதிப்பு ஒன்பது சதவீதம் அதிகரித்து, தற்போது, ஒரு டாலர் மதிப்பு ரூ. 40 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த அளவே வருமானம் கிடைப்பதால், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ரூ. ஆயிரத்து 400 கோடி திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், தங்களுடைய வருமானம் மிகவும் குறைந்து விட்டதாகவும், தாங்கள் குறிப்பிடும் விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஒத்துக் கொள்ளாமல் வேறு விற்பனையாளரை தேடி சென்று விடுகின்றன என்றும் கூறியுள்ள ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு அரசு மேலும் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு சிந்தித்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனால், இதற்கு மாறாக, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:ஏற்றுமதியாளர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளோம். தற்போதைய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு ஏற்றபடி ஏற்றுமதியாளர்கள், தங்களை மாற்றிக் கொள்வர் என்று நம்புகிறேன். அவர்களுக்கு மீண்டும் சலுகை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது, ரூபாய் மதிப்பு மட்டும் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இதை, ஏற்றுமதியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

நன்றி தினமலர்

namsec
13-08-2007, 07:53 AM
இந்திய ஜவுளிக்கு வெளிநாடுகளில் மவுசு * ஏற்றுமதி அதிகரிப்பால் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்திய ஜவுளிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு உள்ளதால், ஐந்தாண்டுகளில் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்து, கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கான தேசிய கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.ஜவுளி தொழில் இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற்று ள்ளது. அமெரிக்கா, பிரிட் டன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குஜராத், மும்பை, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் ஜவுளி தொழிலில் முன்னணியில் உள்ளன. கைத்தறியில் தயாராகும் லுங்கி, வேஷ்டி போன்றவற்றுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது.துணிகள், டீ சர்ட் மற்றும் சட்டை போன்ற ரெடிமேட் ரகங்கள் உற்பத்தி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியில் சீனா உலகில் முன்னணியில் உள்ளது. நவீன இயந்திரங்களே ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அதிகம் என்பதால் சீன ஜவுளிகளின் விலை குறைவு. இதனால், சீன ஜவுளிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. தரத்தில் அளவில் இந்திய ஜவுளிகளுக்கு தனிமுத்திரை உள்ளது.இந்தியா - சீனா இடையே ஜவுளி உற்பத்தியில் 2008ம் ஆண்டு கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. தொழில் வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்துள்ளதால், ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ள்ளது. ஜவுளி தொழில் வீழ்ச்சியை தடுக்க வரி குறைப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஒட்டுமொத்த வளர்ச்சி எட்டு சதவீதத்தில் தேசிய அளவில் தற்போது உள்ளது. இது மேலும் உயர வாய்ப் புள்ளது. கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதி, 77 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஐந் தாண்டுகளில் இது ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் 41 ஆயிரத்து 850 கோடி ரூபாய்க்கு கூடுதலாக ஜவுளி ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளதாக கவுன்சில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை தயாரிப்புக்கான பயிற்சி மையம் இந்தியாவில் 22 இடங்களில் உள்ளன. இதை உயர்த்தி கூடுதலாக 50 பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இதில் மூன்று மையங்கள் சென்னையில் அமையும். ஜவுளி கட்டமைப்பை விஸ்தரிக்க 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவை என்று கவுன்சில் கணித்துள்ளது. இந்த முதலீட்டில் தொழில் வளர்ச்சி அடையும் போது, 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.


நன்றி தினமலர்

namsec
18-08-2007, 06:17 AM
சென்னையில் விப்ரோ முழுமையாக கால் பதிக்கிறது! * ஆள் எடுப்பதும் அதிகரிப்பு


தகவல் தொழில்நுட்பத்தில் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்த, சென்னையை குறி வைத்துள்ளது, பிரபல சாப்ட்வேர் நிறுவனம் விப்ரோ.சென்னையில் முழுமையான நிறுவனத்தை நிறுவி, விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், சென்னையில் ஆள் எடுப்பதையும் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனம் இதுவரை, ஐதராபாத் நகரில் முழுமையாக செயல்பட்டு வந்தது. இப்போது, சென்னையில் அதிக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.தகவல் தொழில் நுட்ப வசதிகள், திறமையான பட்டதாரிகள் அதிகம் இருப்பதால், சென்னையில் அதிக திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு, அதிகமாக கிடைத்திருப்பதால், விப்ரோவின் கவனம் இப்போது சென்னை பக்கம் திரும்பியுள்ளது.திறமையான இளைஞர்கள் கிடைப்பதால், ஐதராபாத்தை, ஆள் தேர்வில் சென்னை முந்தி விட்டது. கடந்தாண்டு, ஐதராபாத்தில், எட்டாயிரம் பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர்; சென்னையில், 8500 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.பெங்களூரு நகரில், தன் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள முதலில் விப்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், அங்கு நிலம் விலை அதிகம்; மாநில அரசின் ஒத்துழைப்பும் குறைவு. சென்னையில், அதிக சலுகை கிடைப்பதை உணர்ந்து, சென்னையில் முழு அளவில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.நான்காண்டில், சென்னையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து, அதிகம் பேருக்கு வேலை தர இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை அருகே, சோழிங்கநல்லூரில், 82 ஏக்கர் நிலம் வாங்க உள்ளது. 36 ஆயிரம் பேர் வேலை செய்யக்கூடிய வகையில், கட்டடங்களை கட்ட விப்ரோ திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, நான்காயிரம் பேர் வேலை செய்யக்கூடிய வகையில், முதல் கட்ட கட்டடம் அமைக்கப்படும்.கட்டுமான பணிகள் ஆரம்பித்துவிட்டதால், செப்டம்பர் மாதம், முதல் கட்ட பணிகளை விப்ரோ துவங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அடுத்தடுத்து விரிவாக்கத் திட்டங்கள், இரண்டாண்டில் நிறைவேற்றப்படும்' என்று, விப்ரோவின் துணைத்தலைவர் சந்திரசேகர் கூறினார்.முதல் கட்ட திட்டத்துக்காக, 100 கோடி ரூபாய் செலவு செய்கிறது விப்ரோ. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

நன்றி தினமலர்

namsec
20-08-2007, 04:50 AM
புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தமிழக அரசு 'நம்பர் ஒன்' * தனியார் நிறுவனங்கள் முதலீட்டில் குஜராத் முதலிடம்

கடந்த நிதியாண்டில், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, முதலீட்டில் முதலிடத்தை பிடித்துள்ள குஜராத். பெரிய நிறுவனங்களின் முதலீடுகளில் குஜராத் மட்டும் 25 சதவீதத்தை ஈர்த்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ள முடிவுகள்:குஜராத் மாநிலத்துக்கு, பல்வேறு பெரிய நிறுவனங்கள் 86 திட்டங்களில் ரூ.74,988 கோடி முதலீடு திட்டங்களை முன்வைத் துள் ளன. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆந்திரா, ரூ.24,173 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா ரூ.24,330 மதிப்பிலான முதலீடுகளையும், தமிழகம் ரூ.22,229 கோடி மதிப்பிலான முதலீடுகளையும் ஈர்த்து அதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.வர்த்தக தலைநகராக உள்ள மும்பையை பின்னுக்கு தள்ளி, ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 54 திட்டங்களில் மொத்தம் ரூ.இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 440 கோடி மதிப்பிலான திட்டங்களில் 25 சதவீதத்தை குஜராத் மாநிலமே பெற்றுள் ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், மொத்தம் 812 திட்டங்களில், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 299 கோடி மதிப்பில் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. கடந்த 2002ம் ஆண்டில் பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் துவங்கி, கடந்த 200-05ல் உச்சக்கட்டத்தை அடைந்தது. தற்போது, இந்த முதலீடுகள் இதற்கு மேலும் அதிகரிக்காமலோ அல்லது குறையாமலோ, நிலைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய திட்டங்களுக்கனா அனுமதி அளித்ததில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் பெரிய நிறுவனங்களின் 157 திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா, மொத்தம் 142 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.மிகப்பெரிய மாநிலங் களாக உள்ள உ.பி., ராஜஸ் தான், ம.பி., மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், பெரிய நிறுவனங்களின் முதலீடுகளில் மிகவும் குறைவாக, முறையே 3.5 சதவீதம், 3.5 சதவீதம், 1.7 சதவீதம் மற்றும் 1.2 சதவீதம் பெற்றுள்ளன.இதற்கு முந்தைய ஆண்டில் கிடைத்த புதிய திட்டங்கள் 339. ஆனால், கடந்த நிதியாண்டில் கிடைத்துள்ள புதிய திட்டங்களின் எண்ணிக்கை 566. இவற்றில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 33.

நன்றி தினமலர்