இனியவள்
14-07-2007, 06:26 PM
அன்று
பிடிக்கும் அன்பே பிடிக்கும்
உன் உதட்டோரத்தில் அரும்பும்
குறுநகை பிடிக்கும்......
பிடிக்காது அன்பே பிடிக்காது
நீ சிகரெட் பிடிப்பது
பிடிக்காது....
வேணும் அன்பே வேணும்
கொஞ்சிடும் உன் பேச்சு
தினம் என் காதினில் விழுந்திட
வேணும்...
வேண்டாம் அன்பே வேண்டாம்
உன் முரட்டுப் பிடிவாதம்
வேண்டாம்....
போதும் அன்பே போது
என்னைத் தவிக்க விடுவது
போதும்....
போதாது அன்பே போதாது
உன் செல்லச் சிணுங்கள்
போதாது.....
திகட்டாது அன்பே திகட்டாது
நீ பார்க்கும் பார்வை
திகட்டாது...
திகட்டுது அன்பே திகட்டுது
உன்னைப் பார்க்காத நிமிடங்கள்
திகட்டுது.....
யோசி அன்பே யோசி
எமது எதிர்கால வாழ்வைப்
பற்றி யோசி....
யோசிக்காதே அன்பே யோசிக்காதே
உன் கவலைகள் பற்றி
யோசிக்காதே....
போகாதே அன்பே போகாதே
என்னை விட்டுப் போகாதே....
இன்று
போ அன்பே போ
போகும் போது உன் நினைவுகளையும்
கூட்டிக் கொண்டு போ....
வராதே அன்பே வராதே
மீண்டும் என் கண் முன்
வராதே.....
யோசி அன்பே யோசி
எனக்கு செய்த தூரோகத்தை
யோசி....
திகட்டுது அன்பே திகட்டுது
நீ எனக்கு செய்த தூரோகம் கசப்பாய்
திகட்டுது.....
வலிக்கிறது அன்பே வலிக்கிறது
நீ பிரிவைச் சொன்ன நொடியில்
இருந்து உயிர் வரை சென்று
வலிக்கின்றது....
ஆயுள் வரை நீ வருவாய்
என நினைத்தேன் நினைவுகளின்
வலியில் வருகின்றாயே என்
ஆயுளை காவு கொள்ள
பிடிக்கும் அன்பே பிடிக்கும்
உன் உதட்டோரத்தில் அரும்பும்
குறுநகை பிடிக்கும்......
பிடிக்காது அன்பே பிடிக்காது
நீ சிகரெட் பிடிப்பது
பிடிக்காது....
வேணும் அன்பே வேணும்
கொஞ்சிடும் உன் பேச்சு
தினம் என் காதினில் விழுந்திட
வேணும்...
வேண்டாம் அன்பே வேண்டாம்
உன் முரட்டுப் பிடிவாதம்
வேண்டாம்....
போதும் அன்பே போது
என்னைத் தவிக்க விடுவது
போதும்....
போதாது அன்பே போதாது
உன் செல்லச் சிணுங்கள்
போதாது.....
திகட்டாது அன்பே திகட்டாது
நீ பார்க்கும் பார்வை
திகட்டாது...
திகட்டுது அன்பே திகட்டுது
உன்னைப் பார்க்காத நிமிடங்கள்
திகட்டுது.....
யோசி அன்பே யோசி
எமது எதிர்கால வாழ்வைப்
பற்றி யோசி....
யோசிக்காதே அன்பே யோசிக்காதே
உன் கவலைகள் பற்றி
யோசிக்காதே....
போகாதே அன்பே போகாதே
என்னை விட்டுப் போகாதே....
இன்று
போ அன்பே போ
போகும் போது உன் நினைவுகளையும்
கூட்டிக் கொண்டு போ....
வராதே அன்பே வராதே
மீண்டும் என் கண் முன்
வராதே.....
யோசி அன்பே யோசி
எனக்கு செய்த தூரோகத்தை
யோசி....
திகட்டுது அன்பே திகட்டுது
நீ எனக்கு செய்த தூரோகம் கசப்பாய்
திகட்டுது.....
வலிக்கிறது அன்பே வலிக்கிறது
நீ பிரிவைச் சொன்ன நொடியில்
இருந்து உயிர் வரை சென்று
வலிக்கின்றது....
ஆயுள் வரை நீ வருவாய்
என நினைத்தேன் நினைவுகளின்
வலியில் வருகின்றாயே என்
ஆயுளை காவு கொள்ள