PDA

View Full Version : பிடிக்கும் பிடிக்காது



இனியவள்
14-07-2007, 06:26 PM
அன்று

பிடிக்கும் அன்பே பிடிக்கும்
உன் உதட்டோரத்தில் அரும்பும்
குறுநகை பிடிக்கும்......

பிடிக்காது அன்பே பிடிக்காது
நீ சிகரெட் பிடிப்பது
பிடிக்காது....

வேணும் அன்பே வேணும்
கொஞ்சிடும் உன் பேச்சு
தினம் என் காதினில் விழுந்திட
வேணும்...

வேண்டாம் அன்பே வேண்டாம்
உன் முரட்டுப் பிடிவாதம்
வேண்டாம்....

போதும் அன்பே போது
என்னைத் தவிக்க விடுவது
போதும்....

போதாது அன்பே போதாது
உன் செல்லச் சிணுங்கள்
போதாது.....

திகட்டாது அன்பே திகட்டாது
நீ பார்க்கும் பார்வை
திகட்டாது...

திகட்டுது அன்பே திகட்டுது
உன்னைப் பார்க்காத நிமிடங்கள்
திகட்டுது.....

யோசி அன்பே யோசி
எமது எதிர்கால வாழ்வைப்
பற்றி யோசி....

யோசிக்காதே அன்பே யோசிக்காதே
உன் கவலைகள் பற்றி
யோசிக்காதே....


போகாதே அன்பே போகாதே
என்னை விட்டுப் போகாதே....

இன்று

போ அன்பே போ
போகும் போது உன் நினைவுகளையும்
கூட்டிக் கொண்டு போ....

வராதே அன்பே வராதே
மீண்டும் என் கண் முன்
வராதே.....

யோசி அன்பே யோசி
எனக்கு செய்த தூரோகத்தை
யோசி....

திகட்டுது அன்பே திகட்டுது
நீ எனக்கு செய்த தூரோகம் கசப்பாய்
திகட்டுது.....

வலிக்கிறது அன்பே வலிக்கிறது
நீ பிரிவைச் சொன்ன நொடியில்
இருந்து உயிர் வரை சென்று
வலிக்கின்றது....

ஆயுள் வரை நீ வருவாய்
என நினைத்தேன் நினைவுகளின்
வலியில் வருகின்றாயே என்
ஆயுளை காவு கொள்ள

ஓவியன்
14-07-2007, 06:32 PM
அழகாக இருக்கின்றன வரிகள் இனியவள்!

அன்று இற்கு பொருந்திய மாதிரி இன்று என்பதற்கு வரிகள் அழககாகப் பொருந்தவில்லையோ என்றொரு சின்ன நெருடல் எனக்கு.............

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இனியவள்!.

அமரன்
14-07-2007, 06:39 PM
இனியவள் கவிதை சிறப்பு. ஓவியனின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அன்று போகாதே என்றால் இன்று போ என்பதுபோல் கவிதை அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

இனியவள்
14-07-2007, 07:00 PM
அழகாக இருக்கின்றன வரிகள் இனியவள்!
அன்று இற்கு பொருந்திய மாதிரி இன்று என்பதற்கு வரிகள் அழககாகப் பொருந்தவில்லையோ என்றொரு சின்ன நெருடல் எனக்கு.............
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இனியவள்!.

நன்றி ஓவியன்

இப்பொழுது சரி செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன்......

அக்னி
14-07-2007, 07:06 PM
அன்று.., ரசிப்பைத் தந்து கவர்ந்தன உனது அசைவுகள்...
இன்று... வலியைத் தந்து கவிந்தன உனது நினைவுகள்...

மாற்றியபின் கவிதை ரசிப்பைத் தருகின்றது...
கூடவே வலியையும்...

பாராட்டுக்கள்....

ஓவியன்
14-07-2007, 07:08 PM
நன்றி ஓவியன்

இப்பொழுது சரி செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன்......

வாவ்!!!!!!!!!!

அசத்திட்டீங்க இனியவள்!

பிரமாதமா வந்திருக்கு − பாராட்டுக்கள்!.

இனியவள்
14-07-2007, 07:08 PM
இனியவள் கவிதை சிறப்பு. ஓவியனின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அன்று போகாதே என்றால் இன்று போ என்பதுபோல் கவிதை அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

நன்றி அமர்

கவிதை எழுதும் போது பிரிக்க வில்லை
பிரித்துப்போட்டால் நன்றாக இருக்குமெ
என அன்று,இன்று என்று பிரித்துவிட்டேன்
உங்கள் கருத்து எனக்கு புதிய கருவைத்
தந்து இருக்கின்றது நன்றிகள் ஓவியன் & அமர்..

இனியவள்
14-07-2007, 07:10 PM
அன்று.., ரசிப்பைத் தந்து கவர்ந்தன உனது அசைவுகள்...இன்று... வலியைத் தந்து கவிந்தன உனது நினைவுகள்...
மாற்றியபின் கவிதை ரசிப்பைத் தருகின்றது...
கூடவே வலியையும்...
பாராட்டுக்கள்....

நன்றி அக்னி

மாற்றியதற்கு காரணம் ஓவியன் & அமர்
சொன்ன கருத்து எனக்கும் எங்கோ இடித்தது
அது தான் அவைக்கு தான் நன்றி சொல்ல
வேணும் :icon_good:

அமரன்
14-07-2007, 07:10 PM
இப்போது கலக்கலாக உள்ளது.

இனியவள்
14-07-2007, 07:11 PM
வாவ்!!!!!!!!!!
அசத்திட்டீங்க இனியவள்!
பிரமாதமா வந்திருக்கு − பாராட்டுக்கள்!.

அடடா இரண்டாவது வாழ்த்தா :spudnikbackflip: நன்றி எல்லாம் உங்க
யோசனை தான் :icon_good:

இணைய நண்பன்
14-07-2007, 09:13 PM
இன்றை வாழ்வை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

இனியவள்
15-07-2007, 10:35 AM
இன்றை வாழ்வை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

நன்றி இக்ராம்

வாழ்வைப் படம் பிடித்துக்
காட்டுவது தானே கவிதைக்கு
இருக்கும் தனிச் சிறப்பு

சூரியன்
15-07-2007, 10:40 AM
சிறப்பான வரிகள்..