இனியவள்
14-07-2007, 09:33 AM
ரோஜா இதழ்களைப்
பிய்த்து அதனுயிரை
உருக்குலைப்பது போல்
எனதுணர்ச்சிகளைக் கொன்று
மனதைக் கொன்று விட்டாயே......
அன்பே செல்லமே என நீ
அன்று எனை அழைக்கும் போது
ஜில்லென்று குளிர்ந்த − என்
மனது அனல்க்காற்றாய் சுடுகின்றதே
இன்று வேறொருத்தியை
நீ அழைத்ததைக் கண்டு ......
அன்று என் கரங்களை காற்றுப்
போல் வருடிய உன் கரங்கள்
இன்று வேறொருத்தி கரத்தினை
அணைத்திட தீ குளிக்கின்றனவே
என் கரங்கள் ......
அலைகளை நோக்கி அடிமேல்
அடி வைத்த எம்மைக் கண்டு
ஆர்ப்பாரித்த அலைகள் இன்று
என்னைக் கண்டு எள்ளி நகையாடுதே
அலைகளை நோக்கி தனியே நடக்கையில்....
பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களை
நாமிருவரும் ஒர் கண்ணாய் கண்டு
ஆனந்தமாய் கழித்த பொழுது
எம்மை நோக்கி ஒளிவீசிய நட்சத்திரங்கள்
இன்று நான் இரு கண் கொண்டு பார்க்கையில்
தன்னை மறைத்து கொண்டு ஓடுதே
என்னைக் காண பிடிக்காமல்
நிலவின் மென்மையை பார்க்க
வானத்தை நோக்கினேன் வானம்
முழுவது உன் உருவம் கண்ட
என் இதயம் துடிக்க மறந்து
சுவாசம் சுவாசிக்க மறந்தது
கண்கள் இமைக்க மறந்து
கண்ணீரை தாரை தாரையாய்
இறைத்துக் கொண்டிருந்தது பூமிக்கு....
காதலிக்கும் போது இன்பமாய்
காட்சியளித்த அனைத்தும்
என்னவன் என்னைப் பிரிந்த
போது துன்பமாய் தோன்றுதே..
பிய்த்து அதனுயிரை
உருக்குலைப்பது போல்
எனதுணர்ச்சிகளைக் கொன்று
மனதைக் கொன்று விட்டாயே......
அன்பே செல்லமே என நீ
அன்று எனை அழைக்கும் போது
ஜில்லென்று குளிர்ந்த − என்
மனது அனல்க்காற்றாய் சுடுகின்றதே
இன்று வேறொருத்தியை
நீ அழைத்ததைக் கண்டு ......
அன்று என் கரங்களை காற்றுப்
போல் வருடிய உன் கரங்கள்
இன்று வேறொருத்தி கரத்தினை
அணைத்திட தீ குளிக்கின்றனவே
என் கரங்கள் ......
அலைகளை நோக்கி அடிமேல்
அடி வைத்த எம்மைக் கண்டு
ஆர்ப்பாரித்த அலைகள் இன்று
என்னைக் கண்டு எள்ளி நகையாடுதே
அலைகளை நோக்கி தனியே நடக்கையில்....
பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களை
நாமிருவரும் ஒர் கண்ணாய் கண்டு
ஆனந்தமாய் கழித்த பொழுது
எம்மை நோக்கி ஒளிவீசிய நட்சத்திரங்கள்
இன்று நான் இரு கண் கொண்டு பார்க்கையில்
தன்னை மறைத்து கொண்டு ஓடுதே
என்னைக் காண பிடிக்காமல்
நிலவின் மென்மையை பார்க்க
வானத்தை நோக்கினேன் வானம்
முழுவது உன் உருவம் கண்ட
என் இதயம் துடிக்க மறந்து
சுவாசம் சுவாசிக்க மறந்தது
கண்கள் இமைக்க மறந்து
கண்ணீரை தாரை தாரையாய்
இறைத்துக் கொண்டிருந்தது பூமிக்கு....
காதலிக்கும் போது இன்பமாய்
காட்சியளித்த அனைத்தும்
என்னவன் என்னைப் பிரிந்த
போது துன்பமாய் தோன்றுதே..